8வது ஊதியக்குழு ToR: 8 முக்கிய மாற்றங்களை கோரும் அரசு ஊழியர்கள், பிரதமருக்கு பறந்த கடிதம்

8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன? ToR -இல் கோரப்பட்டுள்ள முக்கிய 8 மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2025, 01:10 PM IST
  • வெவ்வேறு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களைத் திருத்துதல்.
  • ToR இல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் தேதியைச் சேர்த்தல்.
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பது.
8வது ஊதியக்குழு ToR: 8 முக்கிய மாற்றங்களை கோரும் அரசு ஊழியர்கள், பிரதமருக்கு பறந்த கடிதம்

8th Pay Commission ToR: 8வது ஊதியக்குழு தொடர்பான ஒரு முக்கிய புதுபிப்பு வந்துள்ளது. 130 துறைகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் மத்திய அரசு ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, 8வது மத்திய ஊதியக்குழுவின் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பரிந்துரை விதிமுறைகளில் (Terms of Reference) பல மாற்றங்களைக் கோரியுள்ளது. இந்த அமைப்பு இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளது.

Add Zee News as a Preferred Source

The Confederation of Central Government Employees and Workers

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கடிதம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன? இதனால் ஊழியர்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள் என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

கூட்டமைப்பு கோரியுள்ள முக்கிய 8 மாற்றங்கள் இதோ:

1. 20% இடைக்கால நிவாரணம்

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 20% இடைக்கால நிவாரணத்தை வழங்குமாறு கூட்டமைப்பு அரசாங்கத்திடம்  கேட்டுக் கொண்டுள்ளது.

"8வது ஊதியக்குழுவை அமைப்பதிலும் அதை செயல்படுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 20% இடைக்கால நிவாரணத்தை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இது செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் மற்றும் பணவீக்கப் போக்குகளால் ஏற்படும் இழப்புகளை ஓரளவிற்கு ஈடுகட்டவும், அரசு இயந்திரத்தை இயக்கும் சுமார் 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் உதவும்" என்று கூட்டமைப்பு கடிதத்தில் தெரிவித்துள்ளது.

2. ToR இல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் தேதியைச் சேர்த்தல்

8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட தேதியை '01.01.2026' என குறிப்பு விதிமுறைகளில் சேர்க்குமாறு கூட்டமைப்பு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

"...8வது CPC பரிந்துரைகளும் 01.01.2026 முதல் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது யதார்த்தமான மற்றும் நியாயமான ஒரு உண்மை. 8வது ஊதியக்குழுவின் குறிப்பு விதிமுறைகளில் (ToR) இதைச் சேர்க்கலாம்," என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

3. வெவ்வேறு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களைத் திருத்துதல்.

கூட்டமைப்பு ToR-இல் பின்வருவனவற்றைச் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது:

"ஓய்வூதியத் திருத்தம், 1/1/2026-க்கு முன் அல்லது 1/1/2026-க்குப் பிறகு ஓய்வு பெற்ற ஊழியர்களின் விஷயத்தில் ஓய்வூதியத்தில் சமத்துவம் உள்ளிட்ட ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதியப் பலன்களின் கட்டமைப்பை நிர்வகிக்க வேண்டிய கொள்கைகளை ஆராய வேண்டும்..." என வலியுறுத்தப்பட்டுள்ளது.

4. "பங்களிப்பு அல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதியளிக்கப்படாத செலவு" என்ற சொற்களை நீக்குதல்

தற்போதைய ToR-இல் "பங்களிப்பு அல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதியளிக்கப்படாத செலவு" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவது "பொருத்தமற்றது" என்று கூட்டமைப்பு கூறியது. 

"இது, அரசியலமைப்பு ரீதியாகவும் நீதித்துறை ரீதியாகவும் பாதுகாக்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை நிதிப் பொறுப்புகளுடன் சமன் செய்கிறது. மேலும் முந்தைய அனைத்து சம்பளக் குழுக்களிலும் அரசாங்கம் பின்பற்றிய மனிதாபிமான, நலன் சார்ந்த அணுகுமுறையிலிருந்து விலகுகிறது" என்று இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஓய்வூதியதாரர்கள் தற்போதுள்ள TOR-ஐ எதிர்மறையாகக் கருதுகின்றனர். மேலும் 'அனைத்து நிதியளிக்கப்படாத செலவுகளையும்' களைய 8வது ஊதியக்குழுவை அரசாங்கம் மறைமுகமாக கட்டாயப்படுத்துவதாகவும் ஓய்வூதியதாரர்கள் கருதுகிறார்கள்" என்று கடிதம் மேலும் கூறுகிறது. "பங்களிப்பாளர் அல்லாத திட்டங்களின் நிதியளிக்கப்படாத செலவு" என்ற வார்த்தைகள் குறிப்பு விதிமுறைகளில் நீக்கப்பட்டு பின்வருவனவற்றைச் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது. "ஓய்வூதியத் தேதியைப் பொருட்படுத்தாமல், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் திருத்தம் உட்பட பிற ஓய்வூதியப் பலன்களின் கட்டமைப்பை நிர்வகிக்க வேண்டிய கொள்கைகளை ஆராய...".

5. பிற ஓய்வூதிய சலுகைகளின் மதிப்பாய்வு

கூட்டமைப்பு ToR பின்வரும் அம்சங்களையும் குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளது:

- Commuted Pension: 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தின் மாற்றப்பட்ட தொகையை மீட்டெடுப்பது
- Additional Pension: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தபடி ஓய்வு பெற்ற தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியத்தை வழங்குதல்
- CGEGIS: ஓய்வூதியதாரர்களுக்கான சுகாதாரப் பராமரிப்பு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான CGEGIS திட்டத்தின் மதிப்பாய்வு

6. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பது

"சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள்தான் NPS இலிருந்து UPS ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறியுள்ளனர். இந்த ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே விரும்புகிறார்கள். இருப்பினும், 8வது ஊதியக்குழு குறிப்பு விதிமுறைகளில் (ToR) இது சேர்க்கப்படவில்லை. தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டங்களை ஆய்வு செய்து நன்மை பயக்கும் ஒன்றைப் பரிந்துரைக்க 8வது ஊதியக்குழுவின் குறிப்பு விதிமுறைகளில் (ToR) இந்தக் கோரிக்கையைச் சேர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

7. 8வது ஊதியக்குழு நீட்டிப்பு

இந்திய அரசாங்கத்தால் மத்திய நிதியளிக்கப்பட்ட தன்னாட்சி மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளுக்கும், கிராமின் டாக் சேவகருக்கும் (GDS) 8வது ஊதியக்குழுவின் சலுகைகளை நீட்டிக்க வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

"இந்தக் கோரிக்கையை 8வது ஊதியக்குழுவின் விதிமுறைகளில் (ToR) சேர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

8. சுகாதாரத் திட்டங்கள்

மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Central Government Pensioners) சுகாதாரத் திட்டங்களை மறுஆய்வு செய்யுமாறு கூட்டமைப்பு கோரியுள்ளது.

"மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சுகாதாரத் திட்டத்தில் மாற்றங்களை ஆணையம் மதிப்பாய்வு செய்து பரிந்துரைக்க வேண்டு. மாவட்டத் தலைமையகங்கள் முழுவதும் அதிகமான CGHS நல்வாழ்வு மையங்களைத் திறப்பது மற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணமில்லா மற்றும் தொந்தரவு இல்லாத மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வது ஆகியவை அவசியம். CGHS குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளையும் ஆணையம் ஆய்வு செய்து, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான CGHS திட்டத்தில் மாற்றங்களை பரிந்துரைக்க வேண்டும்," என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 5 ஜாக்பாட் அறிவிப்புகள், லிஸ்ட் இதோ

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு NC-JCM கூட்டம்: சம்பளம், ஓய்வூத்யம், அகவிலைப்படி, பல ToR மாற்றங்கள் சாத்தியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News