)
Additional Pension For Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை அளித்தது. மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மத்திய அரசு பல வித சலுகைகளை அளிக்கின்றது. அவற்றில் ஒரு முக்கிய சலுகையை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சமீபத்தில் மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மூத்த ஓய்வூதியதாரர்கள் நிதி ரீதியாக வல்லமை பெறுவார்கள். 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை நிறைவு செய்த மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டும்போது, அவர்களுக்கு விதிகளின்படி கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூடுதல் ஓய்வூதியம் ஓய்வூதியதாரர் 80 வயதை நிறைவு செய்யும் காலண்டர் மாதத்தின் முதல் தேதியிலிருந்து வழங்கப்படும். உதாரணமாக, ஜனவரி 15, 1943 அன்று பிறந்த ஒரு ஓய்வூதியதாரர் ஜனவரி 1, 2023 தனது அடிப்படை ஓய்வூதியத்தில் 20% கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார். அதேபோல், ஜனவரி 1, 1943 அன்று பிறந்தவர்களும் அதே நாளில் இருந்து கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள்.
மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின்படி, ஓய்வூதியதாரர்கள் 80 வயதை நிறைவு செய்த பிறகு 5 வருடங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியம் அதிகரிக்கிறது. ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதற்கும் அரசாங்கம் சில விதிகளை விதித்துள்ளது.
இந்த உத்தரவின்படி,
- 80 முதல் 85 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்
- 85 முதல் 90 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 30 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்
- 90 முதல் 95 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 40 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்
- 95 முதல் 10 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 50 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்
- 100 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீத கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர், கூடுதல் ஓய்வூதியம் தொடர்பாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த மாற்றம் CCS விதிகள், 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 இன் தேவைகளுக்கு இணங்க வருகிறது. 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இந்த கூடுதல் ஓய்வூதியத்திற்கு உரிமை பெறுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ