மே 1, 2025 முதல் இந்தியா முழுவதும் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் உயர உள்ளது. இதனால் ATMல் அடிக்கடி பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட உள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு கட்டணங்கள் உயரும் என்பதால் பணம் எடுப்பதில் சிக்கல்களை சந்திக்கலாம். இந்திய ரிசர்வ் வங்கி வளர்ச்சியடைந்து வரும் நிதி நிலைமையை எதிர்கொள்ளும் நோக்கில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச மாதாந்திர வரம்பை மீறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ரூ. 21ல் இருந்து ரூ. 23 ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய கட்டமைப்பின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து முறை இலவச பணம் எடுக்க உரிமை உண்டு. கூடுதலாக, அவர்கள் பெருநகரங்களில் உள்ள மற்ற வங்கிகளுக்குச் சொந்தமான ஏடிஎம்களில் மூன்று அல்லது பெருநகரம் அல்லாத பகுதிகளில் ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளைச் செய்யலாம். இந்த வரவிருக்கும் கட்டண உயர்வு குறிப்பாக சிறிய வங்கிகளுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வாடிக்கையாளர்கள் எப்போதும் பணம் எடுக்க பெரிய வங்கிகளின் ஏடிஎம்-ஐ தான் அதிகம் உள்ளனர்.
இந்த புதிய கட்டண அதிகரிப்பு அவர்களுக்கு பெரிய கவலையாக மாறும், குறிப்பாக மாதாந்திர இலவச பரிவர்த்தனை ஒதுக்கீட்டை முடித்தவுடன் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். வங்கிகள் மற்றும் ஏடிஎம் ஆபரேட்டர்கள் இருவரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்களை அமல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எப்போதாவது ஏடிஎம்களைப் பயன்படுத்துபவர்கள் கட்டண உயர்வை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்றாலும், அடிக்கடி பணம் எடுப்பவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் சிரமங்களை சந்திக்கலாம்.

மே மாதம் வருவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் பயன்பாட்டு பழக்கத்தை மறுமதிப்பீடு செய்து, பணப் பரிமாற்றக் கட்டணங்களைக் குறைப்பதற்கான உத்திகளைக் கருத்தில் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதாவது ஏடிஎம்ல் பணம் எடுப்பதை குறைத்துக்கொண்டு UPI அல்லது டிஜிட்டல் கட்டணங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த புதிய மாற்றம் நிதிகளை திறம்பட நிர்வகிப்பதற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ'









