)
Pension Scheme: நாட்டில் உள்ள மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள், பெண்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் மூத்த குடிமக்களுக்கான அடல் ஓய்வூதியத் திட்டம் மிகவும் பிரபலமான ஒரு திட்டமாகும்.
அடல் ஓய்வூதியத் திட்டம் என்பது அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், 60 வயதை எட்டிய பிறகு மாதாந்திர ஒய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியத் தொகை மாதத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை இருக்கும். அமைப்புசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கும், வயதான காலத்தில் நிலையான வருமானம் கிடைக்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீடு மிகவும் பாதுகாப்பனதாகும். எந்த ஒரு அச்சமும் இல்லாமல், தாராளமாக இந்த திட்டத்தில் முதலீடு வயதான காலத்தில் மாத ஓய்வூதியத்தை பெறலாம்.
இந்திய குடிமக்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர முடியும். இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துவோர் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியற்றவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முறையான ஓய்வூதியத் திட்டம் இல்லாதவர்களைச் சென்றடைவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, ஓட்டுநர்கள், தெரு வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் தகுதியானவர்கள். இந்தத் திட்டம் ஓய்வூதியத்தை வழங்குவது மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் நிதிப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் எளிதானது. முதலீட்டுத் தொகை உங்கள் வயதை பொறுத்தது. உங்களது வயது பொறுத்து முதலீட்டு தொகை மாறுபடும். உதாரணமாக, ஒருவர் 18 வயதில் சேர்ந்தால், ரூ.5,000 மாதாந்திர ஓய்வூதியத்தை தேர்வு செய்தால், அவர்கள் மாதத்திற்கு தோராயமாக ரூ.210 டொசிட் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு விரைவாக இந்த திட்டத்தில் சேருகிறீர்களா, அந்த அளவுக்கு முதலீட்டு தொகை குறையும்.
அடல் ஓய்வூதிய திட்டத்தில் சேர விண்ணப்பதாரர்கள் தங்கள் அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். வங்கி ஊழியர்கள் KYC செயல்முறை முடித்து, உங்களது கணக்கை திட்டத்தில் இணைப்பார்கள். பின்னர் விண்ணப்பதாரர் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான ஓய்வூதியத் தொகை அளவை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். திட்டத்தில் சேர்ந்த பிறகு, பரிந்துரைக்கப்பட்ட பிரீமியம் தொகை, ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கி கணக்கில் இருந்து டெபிட் செய்யப்படும். அடல் ஓய்வூதிய கணக்கு திறக்கப்பட்ட பிறகு, நீங்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ