Ayushman Bharat: ரூ.5 லட்சம் வரம்பு, ஆனால்.... மூத்த குடிமக்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்

Ayushman Bharat Scheme: ஆயுஷ்மான் பாரத் திட்டட்தின் பயனாளியா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவில் உள்ள தகவல்களை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 10, 2025, 12:53 PM IST
  • ஆயுஷ்மான் பாரத் திட்டம்.
  • ₹5 லட்சம் வரம்பு என்றால் என்ன?
  • ஆயுஷ்மான் அட்டையை வீட்டிலிருந்தே பெறுவது எப்படி?
Ayushman Bharat: ரூ.5 லட்சம் வரம்பு, ஆனால்.... மூத்த குடிமக்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்

Senior Citizens Latest Update: மூத்த குடிமக்களுக்கு முக்கிய செய்தி. ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றிய ஒரு முக்கிய தகவலை இந்த பதிவில் தெரிந்துகொள்லலாம். இந்திய அரசாங்கம், சுகாதார சேவைகளை, குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நன்மைகளை  சாமானியர்களுக்கும் அணுகக்கூடியதாக மாற்ற பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source

Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், மூத்த குடிமக்களையும் சேர்த்து, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் மொத்தம் ரூ.10 லட்சம் காப்பீட்டைப் பெறலாம். ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது: கூடுதல் ரூ.5 லட்சம் காப்பீடு குடும்பத்தின் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டம் பற்றிய முழுமையற்ற தகவல்கள் பெரும்பாலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் கடைசி நேர சிரமங்களுக்கு வழிவகுக்கும். ஆகையால், நீங்கள் இந்தத் திட்டத்தின் பயனாளியாக இருந்தால், அதன் விதிகள் மற்றும் சிகிச்சை வரம்புகளை முழுமையாகப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

Ayushman Bharat Yojana: ₹5 லட்சம் வரம்பு என்றால் என்ன

மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PM-JAY) திட்டத்தின் முதன்மை நோக்கம், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு சுகாதாரப் பாதுகாப்பு காப்பீட்டை வழங்குவதாகும். சிகிச்சையின் அளவு குறித்த பதில் சற்று சிக்கலானது. ஆகையால் இதை புரிந்துகொள்வது முக்கியம். தொழில்நுட்ப ரீதியாக, ஒரு வருடத்திற்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையில் எந்த வரையறுக்கப்பட்ட வரம்பும் இல்லை. பயனாளிகள் எத்தனை முறை வேண்டுமானாலும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம். ஆனால் இந்த நன்மை ஆண்டு வரம்பு ₹5 லட்சம் வரை மட்டுமே பொருந்தும். அதாவது ஒரு ஆண்டுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்திற்கு மட்டுமே சிகிச்சை பெற முடியும். இதைத் தாண்டி ஆகும் செலவுகளை பயனாளிகளேதான் ஏற்க வேண்டி இருக்கும்.

Ayushman Bharat Scheme: ஆயுஷ்மான் பாரத் திட்டம்

இந்தத் திட்டம் 'குடும்ப மிதவை' (‘Family Floater’) அடிப்படையில் செயல்படுகிறது. அதாவது இதில் கிடைக்கும் ₹5 லட்சம் காப்பீடு ஒரு நபருக்கு அல்ல, முழு குடும்பத்திற்குமானது. உதாரணமாக, உங்கள் குடும்பத்தில் ஆறு உறுப்பினர்கள் இருந்தால், இந்த ₹5 லட்சம் தொகையை ஒரு நோய்வாய்ப்பட்ட உறுப்பினரின் சிகிச்சைக்காகவோ அல்லது தேவைப்பட்டால், அனைத்து உறுப்பினர்களிடையேயோ பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் ஆயுஷ்மான் பாரத் அட்டையின் பணப்பை இருப்பு (₹5 லட்சம் வரம்பு) தீர்ந்துவிட்டால், மீதமுள்ள செலவுகளை நீங்களே ஏற்க வேண்டும். எனவே, சிகிச்சை பெறும்போது இருப்புத் தொகையைக் கவனத்தில் கொள்வது புத்திசாலித்தனம்.

Ayushman Card: ஆயுஷ்மான் அட்டை கடுமையான நோய்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்

சிறிய நோய்களுக்கான சிகிச்சைக்கும் மக்கள் பெரும்பாலும் ஆயுஷ்மான் அட்டையுடன் மருத்துவமனைக்குச் சென்று ஏமாற்றமடைகிறார்கள். இந்தத் திட்டம் முதன்மையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கடுமையான நிலைமைகளுக்கு என்பதை தெரிந்துகொளவது மிக முக்கியம். பொது மருத்துவர் ஆலோசனைகள், எக்ஸ்ரேக்கள், இரத்தப் பரிசோதனைகள் அல்லது சிறிய மருந்துகளுக்கு இதன் நன்மைகள் கிடைக்காது.

இருப்பினும், இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை, புரோஸ்டேட் புற்றுநோய், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சை போன்ற கடுமையான நோய்கள் இருந்தால், இந்த அட்டை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில், நோயாளிகள் தங்கள் பணத்தை செலவு செய்து அதிக மருத்துவமனை கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை. மேலும் முழு சிகிச்சை நடைமுறையும் பணமில்லா சிகிச்சை முறையாக இருக்கும். நோயாளிகளை கடன் சுமையிலிருந்து காப்பாற்ற இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Ayushman Card: ஆயுஷ்மான் அட்டையை வீட்டிலிருந்தே பெறுவது எப்படி?

முன்பு, அரசாங்கத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அரசாங்கம் இந்த செயல்முறையை முற்றிலும் வெளிப்படையானதாகவும் டிஜிட்டல் முறையிலும் மாற்றியுள்ளது. உங்கள் அட்டையைப் பெற நீங்கள் எந்த இடைத்தரகர்கள் அல்லது முகவர்களுக்கும் பணம் செலுத்த வேண்டியதில்லை. 

- உங்கள் ஸ்மார்ட்போனில் அரசாங்கத்தின் 'ஆயுஷ்மான் செயலியை' பதிவிறக்கம் செய்து இந்த பணியை செய்து முடிக்கலாம்.

- உங்கள் மொபைல் எண்ணும் ஆதார் எண்ணும் செயலிக்குள் லாக் இன் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. 

- இங்கே, உங்கள் மாநிலம் மற்றும் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் குடும்பத்தின் தகுதியைச் சரிபார்க்கலாம். 

- ஒரு உறுப்பினரின் பெயர் பட்டியலிடப்பட்டிருந்தாலும் அட்டை உருவாக்கப்படவில்லை என்றால், அவர்களின் பெயருக்கு அருகில் 'அங்கீகரி' என்ற விருப்பம் தோன்றும். 

- இங்கே, ஆதார் OTP மற்றும் புகைப்பட சரிபார்ப்பைப் பயன்படுத்தி e-KYC ஐ முடிக்க முடியும். 

- சரிபார்த்த ஒரு வாரத்திற்குள் அதே செயலியில் இருந்து அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: குஷியில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்... நாடாளுமன்றத்தில் குட் நியூஸ்

மேலும் படிக்க | EPS Pension: ரூ.15,000 அடிப்படை ஊதியம்... தனியார் துறை ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News