MSSC திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்: இனி மிக எளிதாக பணத்தை எடுக்கலாம்... முக்கிய அப்டேட் இதோ

MSSC Latest News: MSSC திட்டத்தில் மார்ச் 31, 2025 க்குப் பிறகு புதிய வைப்புத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே முதலீடு செய்த பெண்கள் இந்த புதிய வசதியைப் பயன்படுத்திக் கொண்டு ECS மூலம் பணம் எடுக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2025, 02:30 PM IST
  • மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம்.
  • இப்போது இந்தத் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் மின்னணு தீர்வு சேவை (ECS) மூலமாகவும் பணத்தை எடுக்க முடியும்.
  • முழுமையான தகவல் இதோ.
MSSC திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்: இனி மிக எளிதாக பணத்தை எடுக்கலாம்... முக்கிய அப்டேட் இதோ

Mahila Samman Saving Certificate: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் குறித்து ஒரு பெரிய புதுப்பிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் (MSSC) முதலீடு செய்துள்ள பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் (MSSC) தொடர்பாக அரசாங்கம் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. இப்போது இந்தத் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் மின்னணு தீர்வு சேவை (ECS) மூலமாகவும் பணத்தை எடுக்க முடியும்.

Add Zee News as a Preferred Source

Electronic Clearance Service

MSSC திட்டத்தில் மார்ச் 31, 2025 க்குப் பிறகு புதிய வைப்புத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே முதலீடு செய்த பெண்கள் இந்த புதிய வசதியைப் பயன்படுத்திக் கொண்டு ECS மூலம் பணம் எடுக்கலாம்.

MSSC: முன்னர் இருந்த வசதி என்ன?

முன்னர் MSSC திட்டத்திலிருந்து பணத்தை எடுக்க மூன்று வழிகள் இருந்தன.

- Cash: ரொக்கம்

பரிந்துரைக்கப்பட்ட வரம்பின்படி ரொக்கமாக பணம் எடுக்கலாம்

- Post Office Savings Account: அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு

பணம் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு (POSA) பரிமாற்றப்படும்.

- Postmaster Cheque: காசோலை மூலம் பணம் எடுக்கும் முறை

அஞ்சல் அலுவலம் மூலம் கிடைக்கும் தொகை

எனினும், மற்ற வங்கிகளுக்கு அதாவது ECS க்கு நேரடியாக பணம் அனுப்பும் சேவை முன்னர் இல்லை. இது தபால் அலுவலக நெட்வொர்க்கில் வங்கிக் கணக்கு இல்லாத பெண்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியது.

இப்போது ECS மூலம் வங்கிக்கு நேரடியாக பணம் மாற்றப்படுகிறது

மகிளா சம்மான் யோஜனாவில் ECS வசதி சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஜூன் 12, 2025 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதாவது, இப்போது பெண்கள் தங்கள் பணத்தை நேரடியாக தபால் நிலைய நெட்வொர்க்கில் இல்லாத தங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பெண்கள் தங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று தங்கள் ECS விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பணத்தை நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியும். இது நேரத்தையும் மிச்சப்படுத்தும், பணத்தை எடுக்கும் செயல்முறை எளிதாக இருக்கும்.

இப்போது MSSC கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கான வழி என்ன?

- ரொக்கமாக (பரிந்துரைக்கப்பட்ட வரம்பின்படி)
- POSA-வில் கிரெடிட்
- போஸ்ட்மாஸ்டர் செக்
- ECS வழியாக வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றி எடுக்கலாம்.

இந்த மாற்றம் பெண்கள் பணத்தை எடுப்பதை இன்னும் எளிதாக்கும். இப்போது அவர்கள் தபால் அலுவலகம் மூலம் காசோலை அல்லது பணத்தை எடுக்க வேண்டியதில்லை.

பணத்தை எடுக்கும் விதிகள்

கணக்கைத் திறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு பெண்கள் தொகையில் 40% வரை எடுக்கலாம். மரணம் அல்லது கடுமையான நோய் ஏற்பட்டால், கணக்கை முன்கூட்டியே மூடலாம். அந்த சந்தர்ப்பங்களில் முழு வட்டி விகிதம் (7.5%) கிடைக்கும். 6 மாதங்களுக்குப் பிறகு எந்த காரணமும் இல்லாமல் பயனாளி கணக்கை மூடினால், வட்டி விகிதம் 2% முதல் 5.5% வரை குறையும். பெண்களின் நிதி பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் MSSC திட்டம் அறிவிக்கப்பட்டது. இது 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ஒரு திட்டமாகும்.

வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.5% (இரண்டு ஆண்டுகளுக்கு)

முதலீட்டு வரம்பு

குறைந்தபட்சம்: ரூ. 1,000

அதிகபட்சம்: ஒரு பெண்ணுக்கு ரூ. 2 லட்சம்

தகுதி: பெண்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம், கம்யூட்டேஷன் பென்ஷன் விதிகளில் மாற்றம்... முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | PF பணத்தை ATM மூலம் எடுக்கும் வசதி எப்போது தொடங்கும்? வரம்பு, செயல்முறை என்ன? முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News