மே 1 முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நீக்கம்! வருகிறது புதிய நடைமுறை!

புதிய GNSS திட்டம், சேட்டிலைட் மூலம் ஒவ்வொரு வாகனமும் கண்காணிக்கப்பட்டு எவ்வளவு தூரம் பயணம் செய்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2025, 07:39 AM IST
  • டோல்கேட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
  • மே முதல் அமலுக்கு வர உள்ளது.
  • நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.
மே 1 முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நீக்கம்! வருகிறது புதிய நடைமுறை!

வரும் மே மாதம் முதல் இந்தியாவிலுள்ள டோல்கேட்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது. அதன்படி இனி பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை நீக்கப்பட்டு, இனி ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வர உள்ளது. இது நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், சேட்டிலைட் மூலம் ஒவ்வொரு வாகனமும் கண்காணிக்கப்பட்டு எவ்வளவு தூரம் பயணம் செய்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் மெகா ஏற்றம்

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பாஸ்டேக் திட்டம் நடைமுறையில் உள்ளது. பாஸ்டேக்கில் ரீசார்ஜ் செய்து கொண்டால், டோல்கேட்டில் நீண்ட நேரம் நிற்காமல், அதனை ஸ்கேன் செய்வதன் மூலம் டோல்கேட்டை கடந்து செல்லலாம். ஆனால் சில இடங்களில் பாஸ்டேக் சரியாக வேலை செய்வதில்லை என்றும், இதனால் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்றும் நிறைய புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. டோல்கேட்டில் பணமாக செலுத்தும் நடைமுறையும் குறைக்கப்பட்டுள்ளதால் பாஸ்டேக் மூலம் மட்டுமே கடந்து செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (GNSS) என்ற இந்த புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது.

Global Navigation Satellite System என்றால் என்ன?

இந்த குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்பதும் ஜிஎன்எஸ்எஸ் திட்டம் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிச்சயம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த  திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருந்தது என்றும், ஆனால் சில தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக தற்போது மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த GNSS ஒவ்வொரு வாகனத்தின் அசைவையும் சேட்டிலைட் மூலம் ஆய்வு செய்யும். பாஸ்டேக் போலவே இதுவும் காரில் கண்ணாடியில் ஒட்டப்படும். ஒவ்வொரு முறையும் டோல்கேட் இருக்கும் இடத்தை கடக்கும் போது, அந்த குறிப்பிட்ட வாகனம் எவ்வளவு தூரம் சாலையை பயன்படுத்தி உள்ளது என்பதை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த GNSS உடன் இணைக்கப்பட்ட வாலட்டில் இருந்து பணம் நேரடியாக எடுக்கப்படும். ரீசார்ஜ் செய்ய பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் மக்களுக்கு வழங்கப்படும். இந்த புதிய திட்டத்தின் மூலம் பாஸ்டேக்கில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக நீங்கள் நேரம் காத்திருக்கும் சூழ்நிலை இனி இருக்காது. இந்த சாட்டிலைட் மூலம் இயங்கும் புதிய தொழில்நுட்பத்தில் கோளாறுகள் எதுவும் ஏற்படாத வண்ணம் மத்திய அரசு பார்த்து வருகிறது. இந்த புதிய GNSS திட்டத்தின் மூலம் டோல்கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்கும் நேரத்தை குறைக்கலாம் என்றும், டோல்கேட்டில் ஏற்படும் குற்ற சம்பவங்களை தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் மத்திய அரசால் அறிவிக்கப்படும். ஏற்கனவே பல நாடுகளில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

மேலும் படிக்க | PM Internship Scheme: மாணவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை... ஏப்ரல் 22 வரை விண்ணப்பிக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News