Senior Citizen Savings Scheme: நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. வயது அதிகரிக்கும் போது இந்த தேவை அதிகரிக்கின்றது. ஆகையால், வயதான காலத்தில் உதவ சரியான வழியில் திட்டமிட்டு எதிர்காலத்திற்காக சேர்த்து வைக்க வேண்டியதும், முதலீடு செய்ய வேண்டியதும் மிக அவசியமாகும்.
Post Office SCSS
மூத்த குடிமக்களை மனதில் கொண்டு தபால் நிலையத்தில் ஒரு சேமிப்புத் திட்டம் நடத்தப்படுகிறது. அந்தத் திட்டத்தின் பெயர் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS). இது மூத்த குடிமக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தில், 8.2% வட்டி வழங்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
Post Office Scheme: தபால் அலுவலகத் திட்டம்
55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குக் குறைவான ஓய்வு பெற்ற ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதே நேரத்தில், 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குக் குறைவான ஓய்வு பெற்ற பாதுகாப்புப் பணியாளர்களும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இருப்பினும், இருவரும் ஓய்வூதிய சலுகைகளைப் பெற்ற 1 மாதத்திற்குள் முதலீடு செய்திருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.
Interest Rate: நிலையான வைப்பு நிதியை விட அதிக வட்டி?
அனைத்து வயதினருக்கும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை தபால் அலுவலகங்கள் வழங்குகின்றன. அவை அரசாங்க உத்தரவாதத்தின் காரணமாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. இந்தத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் பெரும்பாலும் பல வங்கிகளின் நிலையான வைப்பு நிதி விகிதங்களை விட அதிகமாக இருக்கும். வழக்கமான வருமானத்தை உறுதி செய்வதற்காக மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் தபால் நிலையங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு என்பது 8.2% கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை வழங்கும் அத்தகைய திட்டங்களில் ஒன்றாகும்.
முதலீடு ரூ.1000 இலிருந்து தொடங்குகிறது
அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் வழக்கமான வருமானம், பாதுகாப்பான முதலீடுகள் மற்றும் வரிச் சலுகைகளுக்கு பிரபலமான ஒரு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 -இல் முதலீடு செய்யத் தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.30 லட்சம் ஆகும். முதலீட்டாளர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும்.
Maturity Period: இந்த திட்டத்தின் முதிர்வு காலம் என்ன?
இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள் ஆகும். திட்ட காலத்திற்கு முன்பே கணக்கை மூடுவதற்கு அபராதம் உள்ளது. நீங்கள் எந்த தபால் நிலையத்தில் வேண்டுமானாலும் SCSS கணக்கை எளிதாகத் திறக்கலாம். சில சந்தர்ப்பங்களில் இதில் சேர்வதற்கான வயது வரம்பு தளர்த்தப்படுகிறது.
Monthly Pension: ரூ.20,000 மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி?
- SCSS திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000, அதிகபட்சம் ரூ.30 லட்சம்.
- முதலீட்டாளர் 8.2% வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் கிடைக்கும்.
- அதாவது மாதத்திற்கு தோராயமாக ரூ.20,000 கிடைக்கும்.
- இந்த திட்டத்தில் வட்டி, ஏப்ரல் 1, ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி ஆகிய தேதிகளில் காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படுகிறது.
- கணக்கு வைத்திருப்பவர், கணக்கு முதிர்ச்சி அடைவதற்கு முன்பு இறந்துவிட்டால், கணக்கு மூடப்பட்டு, தொகை நாமினிக்கு வழங்கப்படும்.
மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் மெகா ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ