EPF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை அதிகரித்தது EPFO

EPFO Auto Settlement Limit: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா, ஓய்வூதிய நிதி அமைப்பு, விரைவான நிதி அணுகலுக்காக வருங்கால வைப்பு நிதிகளின் (PF) ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 24, 2025, 05:58 PM IST
  • முன்பண PF கோரிக்கைகளுக்கான ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு அதிகரித்தது.
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்.
  • இந்த 4 வழிகளில் நீங்கள் PF இருப்பை செக் செய்யலாம்.
EPF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை அதிகரித்தது EPFO

EPFO Auto Settlement Limit: கோடிக்கணக்கான இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), முன்பண PF கோரிக்கைகளுக்கான ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. அவசர காலங்களில் தங்கள் நிதியை விரைவாக அணுக வேண்டும் என்பது EPFO ​​சந்தாதாரர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாகும். இந்த கோரிக்கைக்கு இப்போது நல்ல பதில் கிடைத்துள்ளது.

Add Zee News as a Preferred Source

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா, ஓய்வூதிய நிதி அமைப்பு, விரைவான நிதி அணுகலுக்காக வருங்கால வைப்பு நிதிகளின் (PF) ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

அரசாங்கம், 60% க்கும் மேற்பட்ட முன்பண கோரிக்கைகள் இப்போது ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் செயல்படுத்தப்படுவதாக நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தின் போது வரம்பை அதிகரிக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. பின்னர் இந்த பரிந்துரை மத்திய அறங்காவலர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்

இந்த திருத்தம் இப்போது கோடிக்கணக்கான EPFO ​​உறுப்பினர்களின் செயல்முறைகளில் வேகத்தையும் எளிமையையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், உறுப்பினர்கள் தங்கள் நிதியை விரைவாகவும், எந்த வித பிரச்சனையும் இல்லாமலும் அணுக அனுமதிக்கும் வகையில், வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவதற்கான தானியங்கி தீர்வு முறை அனுமதிக்கப்பட்டது.

EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

EPFO அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. பொருளாதார மட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களின் வருமானத்தில் ஒரு பகுதி அவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணம், ஓய்வுக்குப் பிறகு ஒரு நபரின் வாழ்க்கையை நிதி ரீதியாகப் பாதுகாக்க உதவுகிறது. இபிஎஃப் கணக்கின் மூலம் பணி ஓய்வுக்கு பிறகு மொத்த தொகையும், இபிஎஸ் கணக்கின் மூலம் ஓய்வூதியமும் கிடைக்கின்றது.

EPF Balance Check: இந்த 4 வழிகளில் நீங்கள் PF இருப்பை செக் செய்யலாம்

SMS மூலம்: 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி உங்கள் PF கணக்கின் இருப்பைச் சரிபார்க்கலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து AN EPFOHO ENG என டைப் செய்து செய்தியை அனுப்ப வேண்டும்.

மிஸ்டு கால் மூலம்: உங்கள் மொபைல் எண் UAN இல் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து PF இருப்பைச் செக் செய்யலாம்.

உமங் செயலி மூலம்: உமங் செயலியிலிருந்து உங்கள் PF இருப்பையும் சரிபார்க்கலாம். இந்த செயலியிலிருந்தும் நீங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம். இதற்காக, நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை செயலியில் உள்ளிட்டு ஒரு முறை பதிவு செய்ய வேண்டும்.

EPFO போர்டல்: EPFO ​​இணையதளத்திற்குச் சென்று பணியாளர்கள் பிரிவில் கிளிக் செய்து உறுப்பினர் பாஸ்புக்கைக் கிளிக் செய்யவும். உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு PF பாஸ்புக்கைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க | UPI புதிய விதிகள்: இனி பரிவர்த்தனை தோல்வியுற்றால் உடனடி ரீஃபண்ட் கிடைக்கும்

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: UPS காலக்கெடுவை நீட்டித்தது அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News