Pensioners Latest News: மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. ஓய்வூதியம் செலுத்தும் வங்கிகள், ஓய்வூதியம் செலுத்துவதிலோ, அல்லது ஓய்வூதிய நிலுவைத் தொகை செலுத்தவதிலோ தாமதம் செய்தால், இனி ஓய்வுபெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) ஆண்டுக்கு 8% வட்டி வழங்கப்படும். ஓய்வூதியதாரருக்கு இழப்பீடாக இந்த வட்டி வங்கியால் செலுத்தப்படும். வங்கிகள் மூலம் ஓய்வூதியம் செலுத்தப்படுவது குறித்து ரிசர்வ் வங்கியின் சமீபத்திய முதன்மை சுற்றறிக்கையில் இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1, 2025 அன்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI), திருத்தப்பட்ட ‘ஏஜென்சி வங்கிகள் மூலம் அரசு ஓய்வூதியம் வழங்கப்படுதல்' ( Master Circular – Disbursement of Government Pension by Agency) என்ற முதன்மை சுற்றறிக்கையை வெளியிட்டது.
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்
திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்குவதில் அதிகப்படியான தாமதம் ஏற்படுவதாக ஓய்வூதியதாரர்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றதை அடுத்து, ‘தாமதமான ஓய்வூதியத்திற்கான வட்டியை செலுத்தும் அம்சத்தை’ இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) முதன்மை சுற்றறிக்கையில் சேர்த்தது.
Master Circular: முதன்மை சுற்றறிக்கை
ஓய்வூதியம் செலுத்தும் வங்கிகள், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு, நிலுவைத் தொகைக்கு ஆண்டுக்கு 8% வட்டி செலுத்தி தாமதத்தை ஈடுசெய்ய வேண்டும் என்று முதன்மை சுற்றறிக்கை கூறுகிறது.
"ஓய்வூதியம் செலுத்தும் வங்கிகள், ஓய்வூதியம்/நிலுவைத் தொகையை வரவு வைப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு, ஓய்வூதியதாரருக்கு ஆண்டுக்கு 8 சதவீத நிலையான வட்டி விகிதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும், அதற்கான இழப்பீடு வழங்க வேண்டிய தேதிக்குப் பிறகு ஏற்படும் தாமதத்திற்கு ஈடுசெய்ய வேண்டும்" என்று சுற்றறிக்கை கூறியது.
Automatic interest credit: தானியங்கி வட்டி வரவு
மேலும், தாமதமான ஓய்வூதியத்திற்கான வட்டி தானாகவே வரவு வைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
"அக்டோபர் 1, 2008 முதல் தாமதமாக செலுத்தப்பட்ட அனைத்து ஓய்வூதியத் தொகைகளுக்கும் வங்கிகள் திருத்தப்பட்ட ஓய்வூதியம்/ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை வழங்கும்போது, அதே நாளில் ஓய்வூதியதாரரிடமிருந்து எந்த கோரிக்கையும் இல்லாமல் இழப்பீடு தானாகவே ஓய்வூதியதாரரின் கணக்கில் வரவு வைக்கப்படும்," என்று சுற்றறிக்கை கூறியது.
Reserve Bank: ரிசர்வ் வங்கி கூறியது என்ன?
ரிசர்வ் வங்கியின் முதன்மை சுற்றறிக்கை, ஓய்வூதியம் செலுத்தும் அதிகாரிகளிடமிருந்து ஓய்வூதிய உத்தரவுகளின் நகல்களை உடனடியாகப் பெறுவதற்கான ஒரு வழிமுறையை வங்கிகள் உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அறிவுறுத்தல்கள் வரும் வரை காத்திருக்காமல் ஓய்வூதிய கொடுப்பனவுகள் முடிக்கப்பட வேண்டும். இது பணம் செலுத்துவதை தாமதப்படுத்துவதற்குப் பதிலாக அடுத்த மாத ஓய்வூதியத்திலேயே சலுகைகள் செலுத்தப்படுவதை உறுதி செய்யும்.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு உதவி
மேலும், ஓய்வூதியக் கணக்குகளைக் கையாளும் வங்கிக் கிளைகள், ஓய்வூதியதாரர்களுக்கு வங்கியுடனான அவர்களின் பரிவர்த்தனைகளில் வழிகாட்டி உதவ வேண்டும்.
"ஓய்வூதியம் வழங்கும் அனைத்து முகமை வங்கிகளும், ஓய்வூதியதாரர்களுக்கு, குறிப்பாக வயதான ஓய்வூதியதாரர்களுக்கு, அக்கறையுடனும் அனுதாபத்துடனும் கூடிய வாடிக்கையாளர் சேவையை வழங்க அறிவுறுத்தப்படுகின்றன," என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வீட்டில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்... வருமான வரி விதிகள் கூறுவது என்ன
மேலும் படிக்க | UPS: அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் அட்டகாசமான ஓய்வூதிய நன்மைகள், முழு லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









