CGHS விகிதங்களில் திருத்தம்: டிஏ உயர்வைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு கிடைத்த அடுத்த பரிசு

CGHS Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. CGHS விகிதங்களில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 6, 2025, 04:43 PM IST
  • திருத்தப்பட்ட CGHS தொகுப்பு விகிதங்கள்.
  • புதிய சீர்திருத்தத்தில் உள்ள மாற்றங்கள் என்ன?
  • ஊழியர்கள் எவ்வாறு பயனடைவார்கள்?
CGHS விகிதங்களில் திருத்தம்: டிஏ உயர்வைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு கிடைத்த அடுத்த பரிசு

Central Government Health Scheme: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 3% அதிகரிக்கப்பட்டது. அதைத்  தொடர்ந்து, மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் அரசாங்கம் இப்போது பெரிய சீர்திருத்தங்களைச் செய்துள்ளது.

Add Zee News as a Preferred Source

மத்திய அரசு சுகாதாரத் திட்டம்

CGHS Revised Package Rates: திருத்தப்பட்ட தொகுப்பு விகிதங்கள்

அக்டோபர் 3 ஆம் தேதி, கிட்டத்தட்ட 2,000 மருத்துவ செயல்முறைகளுக்கான திருத்தப்பட்ட தொகுப்பு விகிதங்களை அரசாங்கம் அறிவித்தது. இந்த மாற்றங்கள் அக்டோபர் 13, 2025 முதல் நடைமுறைக்கு வரும். இந்தத் திருத்தம் கடந்த 15 ஆண்டுகளில் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, பழைய விகிதங்கள் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், மருத்துவமனைகளுக்கும் சிரமங்களை ஏற்படுத்தி வந்தன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாற்றங்களுக்கான தேவை என்ன?

CGHS-ல் சேர்க்கப்பட்ட மருத்துவமனைகள் பெரும்பாலும் பணமில்லா சிகிச்சையை வழங்க மறுத்துவிடுகின்றன என்ற பெரிய புகார் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடமிருந்து அவ்வப்போது வந்தது. இதனால், CGHS வசதி உள்ள நோயாளிகளும் சிகிச்சைக்காக கையிலிருந்து பெரிய தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த தொகையில் ரீயெம்பர்ஸ்மெண்டுக்காக பின்னர் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

அரசு நிர்ணயித்த தொகுப்பு விகிதங்கள் காலாவதியானவை என்றும் குறைவானவை என்றும் மருத்துவமனைகள் வாதிட்டன. மேலும், அவர்களுக்கு சரியான நேரத்தில் பணம் கிடைப்பதில்லை என்ற புகாரும் மருத்துவமனைகள் தரப்பில் இருந்தது. இதன் காரணமாக, மருத்துவமனைகள் பெரும்பாலும் பயனாளிகளுக்கு பணமில்லா சேவைகள் வழங்குவதைத் தவிர்த்தன.

ஆகஸ்ட் 2025 இல், GENC (மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு) இந்தப் பிரச்சினையை எழுப்பி அரசாங்கத்திடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது. பணமில்லா சேவைகள் இல்லாததால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டதாக அது கூறியது. அவசரநிலைகளிலும் அவர்களுக்கு பெரும்பாலும் சிகிச்சை மறுக்கப்படுவதாக அதில் கூறப்பட்டது.

புதிய சீர்திருத்தத்தில் உள்ள மாற்றங்கள் என்ன?

அரசாங்கம் இப்போது சுமார் 2,000 மருத்துவ செயல்முறைகளுக்கு புதிய விகிதங்களை நிர்ணயித்துள்ளது. இந்த விகிதங்கள் நகரத்தின் வகை (Tier-I, Tier-II, Tier-III) மற்றும் மருத்துவமனையின் தரம் (NABH அங்கீகாரம் போன்றவை) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.

- டயர்-II நகரங்களில் தொகுப்பு விகிதங்கள் அடிப்படை விகிதத்தை விட 19% குறைவாக இருக்கும்.

- டயர்-III நகரங்களில் தொகுப்பு விகிதங்கள் அடிப்படை விகிதத்தை விட 20% குறைவாக இருக்கும்.

- NABH-அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் அடிப்படை விகிதத்தில் சேவைகளை வழங்கும்.

- NABH அல்லாத மருத்துவமனைகள் 15% குறைந்த விகிதங்களை பெற்றுக்கொள்ளும்.

- 200 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் 15% அதிக விகிதங்களைப் பெறும்.

Central Government Employees: ஊழியர்கள் எவ்வாறு பயனடைவார்கள்?

- ரொக்கமில்லா சிகிச்சை எளிதாகிவிடும்: திருத்தப்பட்ட தொகுப்பு விகிதங்கள் இனி மருத்துவமனைகளுக்கும் நியாயமானதாக இருக்கும். இதனால் அவற்றால் CGHS அட்டைதாரர்களுக்கு தயக்கமின்றி பணமில்லா சேவைகளை வழங்க முடியும்.

- ஊழியர்கள் தங்கள் கையிலிருந்து பணத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் குறையும்: ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் முன்கூட்டியே பெரிய தொகையை செலுத்த வேண்டிய அவசியம் குறையும்.

- ரீயெம்பர்ஸ்மெண்ட் சிக்கல்கள் குறையும்: பல மாதங்களாக பணம் தேங்கி நிற்கும் பிரச்சினை குறையும்.

- சிறந்த சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல்: CGHS அட்டைதாரர்கள் இப்போது எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் நம்பிக்கையுடன் சிகிச்சை பெற முடியும்.

இந்த சீர்திருத்தம் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்றும் இது நீண்டகால பிரச்சினைகளை தீர்க்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கையாகும். இது மருத்துவமனைகளின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையை உறுதி செய்யும்.

சிஜிஎச்எஸ் சீர்திருத்தங்கள் சுருக்கமாக....

- CGHS என்பது ஒரு சிகிச்சைத் திட்டம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பு அமைப்பாகவும் உள்ளது. 

- நீண்ட காலமாக, இந்தத் திட்டத்தில் பல புகார்களும் சவால்களும் உள்ளன.

- தற்போது புதிய விகிதங்களை செயல்படுத்துவதால், மருத்துவமனைகள் சரியான நேரத்தில் கட்டண தொகையை பெறுவதோடு நியாயமான தொகுப்பு விகிதங்களையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- மேலும், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பணமில்லா மற்றும் நம்பகமான சுகாதாரப் பராமரிப்பைப் பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு எகிறும் சம்பளம்: அடுத்தடுத்து கிடைத்த 5 தீபாவளி பரிசுகள்

மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் உங்கள் பிஎப் பேலன்ஸை ஈஸியாக சரிபார்த்துக் கொள்ளுங்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News