)
Old Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் வரும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. இப்போது அவர்கள் பழைய ஓய்வூதிய முறையின் (OPS) கீழ் கிடைப்பது போலவே பணி ஓய்வு கிராஜுவிட்டி மற்றும் டெத் கிராஜுவிட்டி எனப்படும் இறப்பு பணிக்கொடையின் நன்மையையும் பெறுவார்கள். இந்தத் தகவலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார். இது நீண்ட காலமாக ஊழியர்களால் கோரப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம்
அரசாங்கத்தின் இந்த முடிவு லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும். மேலும் ஓய்வூதியம் தொடர்பான ஏற்றத்தாழ்வுகளையும் இது நீக்கும். இந்தச் சூழலில், புதிய விதி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்வதாகவும், NPS, அதாவது தேசிய ஓய்வூதிய முறையின் (National Pension System) கீழ் அனைத்து வகை ஊழியர்களுக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்றும் மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
Retirement Gratuity and Death Gratuity
மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் UPS தற்போது ஒரு விருப்பமாக கிடைக்கிறது. UPS திட்டம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதிய சலுகைகளை உறுதி செய்கிறது. தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் NPS இலிருந்து UPS க்கு ஒரு முறை மாறலாம். சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவி வந்த நேரத்தில், UPS இன் கீழ் பணிக்கொடை செலுத்துதல் குறித்த தெளிவுபடுத்தல் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இது வழங்கப்படும்
UPS இன் கீழ் இந்தப் பலன் மத்திய சிவில் சர்வீசஸ் (NPS இன் கீழ் கிராஜுவிட்டி செலுத்துதல்) விதிகள், 2021 இன் விதிகளின்படி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார். இது தொடர்பாக புதன்கிழமை ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், மத்திய சிவில் சேவைகளில் ஏப்ரல் 1, 2025 முதல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு NPS இன் கீழ் UPS ஒரு விருப்பமாக அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சகம் கூறியிருந்தது.
பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை பிறப்பித்த உத்தரவில், UPS இன் கீழ் உள்ள ஊழியர்கள் மத்திய சிவில் சேவை (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் பணிக்கொடை செலுத்துதல்) விதிகள், 2021 இன் கீழ் ஓய்வூதியம் மற்றும் இறப்பு பணிக்கொடையின் பலனைப் பெறுவார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.
50% Assured Pension: 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்
இந்த மாற்றம் தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் இருக்கும் மற்றும் UPS ஐத் தேர்வுசெய்ய விரும்பும் ஊழியர்களையும் ஊக்குவிக்கும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையை முடித்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்களது கடைசி 12 மாதங்களின் அடிப்படை ஊதியத்தின் சராசரியில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.
Family Pension: குடும்ப ஓய்வூதியம்
இது தவிர, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு குறைந்தபட்சம் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். ஒரு ஓய்வூதியதாரர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு கடைசியாக பெறப்பட்ட ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ