EPFO Update: தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்

EPFO Update: கடந்த பல ஆண்டுகளாக, ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 13, 2025, 12:34 PM IST
  • இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு நல்ல செய்தி.
  • இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்கின்றதா?
  • இதோ லேட்டஸ்ட் அப்டேட்.
EPFO Update: தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, அதிகரிக்கும் மாத ஓய்வூதியம் title=

EPS Pension Latest News: தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி கிடைத்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ளது. தற்போது, ​​EPS-95 இன் கீழ் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் வெறும் ரூ.1,000 ஆக உள்ளது. இது 2014 முதல் நிர்ணயிக்கப்பட்ட அளவாகும். ஆனால் இப்போது அதை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

Employee Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம்

கடந்த பல ஆண்டுகளாக, ஓய்வூதியதாரர்கள் இந்த ஓய்வூதியத் தொகையை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த EPS-95 ஓய்வூதியதாரர்கள், அகவிலைப்படி மற்றும் இலவச மருத்துவ வசதிகள் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அரசாங்கம் இது குறித்து நேர்மறையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது என்றும், விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

EPS-95 என்றால் என்ன?

EPS-95 அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995 என்பது EPFO ​​ஆல் நடத்தப்படும் ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இதில் பணியாளர் மற்றும் முதலாளி / நிறுவனம் என இரு தரப்பினரும் சம்பளத்தில் 12% பங்களிக்கின்றனர். முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% EPS-க்கு செல்கிறது, மீதமுள்ள 3.67% EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்தத் திட்டம் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இருப்பினும், தற்போதைய பணவீக்கம் மற்றும் செலவுகளைக் கருத்தில் கொண்டு, தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையான ரூ.1,000 போதுமானதாக கருதப்படவில்லை.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை உயர்த்த கோரிக்கை

- தற்போதைய ஓய்வூதியம் போதுமானதாக இல்லை: அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட ரூ.1,000 ஓய்வூதியத் தொகை போதுமானதாக இல்லை.
- நீண்ட காலமாக எந்த திருத்தமும் இல்லை: 2014 முதல் குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- அதிகரிக்கும் நிதித் தேவைகள்: பணி ஓய்வுக்குப் பிறகு வாழ்வதற்கு அதிக நிதிப் பாதுகாப்பு தேவைப்படுகிறது.
- அகவிலைப்படி கோரிக்கை: ஓய்வூதியதாரர்கள் தங்கள் வருமானம் நிலையானதாக இருக்க அகவிலைப்படியை கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோருகின்றனர்.

EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கைகள் என்ன?

EPS-95 இன் கீழ் உள்ள சுமார் 78 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:

- குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்த்தப்பட வேண்டும்.
- அகவிலைப்படி (DA) சேர்க்கப்பட வேண்டும்.
- ஓய்வுக்குப் பிறகு இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
- அதிக ஓய்வூதிய சலுகைகளுக்கான விண்ணப்ப செயல்முறையை மேம்படுத்த வேண்டும்.

நிதி அமைச்சருடனான சந்திப்பு

EPS-95 தேசிய போராட்டக் குழு ஜனவரி 2025 இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தது. குழு உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, விரைவில் ஒரு முடிவை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். இந்தப் பிரச்சினைகள் குறித்து பரிசீலிப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்தார்.

மத்திய வாரியக் கூட்டம்

பிப்ரவரி 28, 2025 அன்று EPFO-வின் மத்திய வாரியக் கூட்டம் நடைபெற்றது. அதில் குறைந்தபட்ச மாத ஓய்வூதிய உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. வரவிருக்கும் பட்ஜெட்டில் இது குறித்து ஒரு பெரிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pension Hike: ஓய்வூதிய அதிகரிக்கப்பட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

- ஓய்வுகால வாழ்க்கை சிறப்பாக இருக்கும்: அதிக மாதாந்திர ஓய்வூதியம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும்.
- பணவீக்கத்திலிருந்து நிவாரணம்: அகவிலைப்படியுடன் அவர்களின் வருமானம் நிலையானதாக இருக்கும்.
- மருத்துவச் செலவுகளுக்கு உதவி: இலவச மருத்துவ வசதிகளைப் பெறுவது அவர்களின் சுகாதாரச் செலவுகளைக் குறைக்கும்.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா?

EPS-95 ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தனியார் துறை ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். இருப்பினும், இறுதி முடிவு, நிதி அமைச்சகம் மற்றும் EPFO ​​வாரியத்தின் பரிந்துரைகளைப் பொறுத்தது.

மேலும் படிக்க | PPF முதலீடு: நிம்மதியான ஓய்வு காலத்திற்கு.... 60 வயதில் கையில் ரூ.2 கோடி இருக்கும்

மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் UPS: 50% ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதம்... ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News