)
Pension Schemes Latest News: மத்திய அரசு ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்காக பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தற்போது இதில் ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் பயனாளிகள் இப்போது 60 வயதிற்குப் பிறகு அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) தலைவர் எஸ். ராமன் இது குறித்து கூறுகையில், பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் 50 லட்சம் பயனாளிகளை அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வருவதே எங்கள் இலக்கு என தெரிவித்தார்.
- முன்னதாக, ஜூன் 1, 2020 அன்று அரசாங்கம் தெருவோர வியாபாரிகளுக்காக PM SVANidhi என்ற ஒரு சிறிய தொகை கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தத் திட்டத்தின் (PM SVANidhi) கீழ், தகுதியுள்ள தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையோ அல்லது உத்தரவாதமோ இல்லாமல் தவணைகளில் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது.
- கடன் 3 தவணைகளில் வழங்கப்படுகிறது.
- முதல் தவணை ரூ.10,000.
- முதல் தவணையைத் திருப்பித் தந்தவுடன், இரண்டாவது தவணை ரூ.20,000.
- இரண்டாவது தவணைத் தொகையைத் திருப்பித் தந்த பிறகு மூன்றாவது தவணை ரூ.50,000 வழங்கப்படும்.
பிரதம மந்திரி சுவாநிதி திட்டம் பயனாளிகளை நாம் சென்றடைய வேண்டும் என்று ராமன் கூறினார். பிரதமர் சுவாநிதி நமது நாட்டின் மிகப்பெரிய, வெற்றிகரமான திட்டங்களில் ஒன்று என அவர் தெரிவித்தார். பிரதமர் சுவாநிதி திட்டத்தின் கீழ், கடனின் முதல் தவணையை பெற்றவர்களில் 82 சதவீதம் பேர் வங்கியில் கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர் என்றும், அந்த 82 சதவீதத்தில், 80 சதவீத மக்கள் அடுத்த தவணையை எடுக்க வங்கியால் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கிரெடிட் சொசைடி ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகின்றது. அடல் ஓய்வூதிய யோஜனா (APY) தற்போது பிரதமர் சுவாநிதி யோஜனாவுடன் தொடர்புடைய 50 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்வோம் என்றும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
- அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) மே 9, 2015 அன்று தொடங்கப்பட்டது.
- அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது.
- இருப்பினும், இந்த அறிவிப்பு வருவதற்கு முன் இதில் சேர்ந்தவர்கள் இதில் தொடர்ந்து இருக்கலாம்.
- APY-யின் கீழ், சந்தாதாரர்கள் 60 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக ரூ.5,000 உத்தரவாத ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள்.
- சந்தாதாரர் இறந்த பிறகு, இந்த ஓய்வூதியம் அவரது மனைவி / கணவருக்கு வழங்கப்படுகிறது.
- வாழ்க்கைத் துணையும் இறந்துவிட்டால், அதன் பிறகு 60 வயது வரை டெபாசிட் செய்யப்பட்ட ஓய்வூதியத் தொகை பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு அளிக்கபப்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ், வரி செலுத்தாத 18 வயது முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்தியரும் சேரலாம். இதில் ஒவ்வொரு மாதமும் பங்களிப்புத் தொகை ரூ.42 முதல் ரூ.1,454 வரை இருக்கும். அதன் அடிப்படையில் ஓய்வூதியம் தீர்மானிக்கப்படுகிறது. பங்களிப்பு வயதின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் சேர்ந்துள்ளனர். 2024-25 ஆம் ஆண்டில், 1.17 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் APY-இல் இணைந்தனர். அவர்களில் சுமார் 55 சதவீதம் பேர் பெண்கள். இந்த நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் இதில் இணைந்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ