Additional Pension For Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய புதுப்பிப்பு கிடைத்துள்ளது. ஓய்வுதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயது தகுதியைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது பற்றி இந்த பதிவில் காணலாம்.
Central Government: தெளிவுபடுத்திய மத்திய அரசு
கூடுதல் ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயது 80 ஆகவே இருக்கும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த வரம்பை 65 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான திட்டம் இருந்ததாகவும், ஆனால் அது அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அரசாங்கம் கூறியது.
Additional Pension: கூடுதல் ஓய்வூதிய வயது
ஓய்வூதியதாரர்களின் குறைகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தபடி, வயது வரம்பை 65 ஆண்டுகளாகக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அரசு பரிசீலிக்கிறது என்றால், இந்த விஷயம் தொடர்பான விவரங்களை அவர் கோரினார்.
இதற்கு பதிலளித்த அரசாங்கம், '6வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் பேரில், 80 வயதை அடையும்போது 20%, 85 வயதை அடையும்போது 30%, 90 வயதை அடையும்போது 40%, 95 வயதை அடையும்போது 50% மற்றும் 100 வயதை அடையும்போது 100% என கூடுதல் ஓய்வூதிய அளவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வயதான ஓய்வூதியதாரர்களின் தேவைகள், குறிப்பாக உடல் நலன் தொடர்பானவை, வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும் என்பதால், அவர்களுக்கு சிறந்த நிதி உதவி தேவைப்படுகிறது என்ற காரணத்தின் அடிப்படையில் இது செய்யப்பட்டுள்ளது.' என தெரிவித்தது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் ஓய்வூதிய வயது குறித்த விதிகள் மாறுமா?
நாடாளுமன்ற நிலைக்குழு 2021 இல் 65 வயதிலிருந்து கூடுதல் ஓய்வூதியம் வழங்க பரிந்துரைத்தது. அரசாங்கம் அதை பரிசீலித்து 2022 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் பிறகு, இந்த பிரச்சினையை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் குழு முடிவு செய்தது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்கப்படுகிறது?
வங்கிகள் மற்றும் ஓய்வூதிய விநியோக நிறுவனங்கள் மூலம் கூடுதல் ஓய்வூதியம் தானாகவே வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதில் ஏற்படும் தாமதம் அல்லது தொந்தரவைத் தவிர்க்க அவ்வப்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
பணவீக்கத்தின் தாக்கம் எவ்வாறு குறைக்கப்படும்?
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் (DR) வழங்கப்படுகிறது. இது அவர்களின் அடிப்படை ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியம் இரண்டிற்கும் பொருந்தும். இது அகவிலைப்படி (DA) விகிதத்தில் நிர்ணயிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறக்கூடிய வயதில் மாற்றம் ஏற்படுமா?
தற்போது, இந்த விதியில் அரசாங்கம் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. ஆனால் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கும் என கூறப்படுகின்றது. 80 வயதுக்கு முன் கூடுதல் ஓய்வூதியத்தை எதிர்பார்க்க முடியாது என்பது அரசாங்கத்தின் இந்த முடிவிலிருந்து தெளிவாகியுள்ளது. தற்போது, ஓய்வூதியதாரர்கள் பணவீக்கத்திற்கு ஏற்ற நிவாரணத்தை அகவிலை நிவாரணம் மூலமாகவே பெற முடியும்.
மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் UPS: பதிவு செய் கட்-ஆஃப் டேட் இதுதான், முக்கிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









