இந்திய ரயில்வே: இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் தினசரி ஏராளமான பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். பயணத்தின் போது பயணிகள் எந்த விதமான பிரச்சனைகளையும் சந்திக்க கூடாது என்பதற்காக இந்திய ரயில்வே வகுத்துள்ள பல விதிகளின் மூலம் பயணம் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும். இதுமட்டுமின்றி, இந்திய ரயில்வேயும் பயணிகளுக்காக அவ்வப்போது பல புதிய வசதிகளையும் தொடங்குகிறது. 


இந்நிலையில், சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள இந்தியன் ரயில்வே ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில்வே ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. இப்போது ரயிலில் பயணிக்கும் பயணிகள் உணவு உண்ண அதிக பணம் செலுத்த வேண்டியதில்லை. ஆம்!! இப்போது இந்திய ரயில்வே உங்களுக்கு மிகவும் மலிவான விலையில் உணவை வழங்குகிறது. இந்திய ரயில்வே இதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, வெறும் 20 ரூபாய் செலவில் நீங்கள் முழுமையான உணவை (ஃபுல் மீல்ஸ்) சாப்பிட முடியும். அதைப் பற்றி இந்த பதிவில்  விரிவாக தெரிந்து கொள்வோம். 


சிறப்பு திட்டம்


இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரையிலான உணவு பாக்கெட்டுகளை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த பாக்கெட்டுகளில், நீங்கள் சாப்பிடுவதற்கு பாவ் பாஜி, பூரி சப்ஜி மற்றும் பல தென்னிந்திய உணவுகள் கிடைக்கும். இந்திய ரயில்வேயின் இந்த முடிவு நீண்ட தூரம் பயணம் செய்யும் ஏழை மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.


மேலும் படிக்க | இன்று வரை ரயிலையே பார்த்ததில்லை... ரயில் போக்குவரத்து இல்லாத ‘27’ நாடுகள்!


50 ரூபாய் உணவுப் பொட்டலம்


50 ரூபாய் உணவுப் பொட்டலத்தில் பயணிகளுக்கு 350 கிராம் உணவு வழங்கப்படும். ஆனால், இந்த திட்டம் 64 நிலையங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இது இப்போது சோதனையாக தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்த திட்டம் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த முறை அமலுக்கு வந்தால் அது பயணிகளுக்கு மிக உபயோகமாக இருக்கும்.


ஜெனரல் கோச்


ஜெனரல் கோச்சில் பயணம் செய்பவர்கள் இத்திட்டத்தின் பயனைப் பெறுவார்கள். இதை உறுதி செய்ய, குறைந்த விலையில் உணவு வழங்குவதற்கான உணவுக் கடைகள் ஜெனரல் கோச் நிற்கும் பக்கம் அமைக்கப்படும். இதனால் ஜெனரல் கோச்சுகளில் பயணிக்கும் பயணிகள் தங்களின் உணவை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும் என்கிற எண்ணத்தில் ரயில்வே வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.


2 வகையான உணவுகள்


இரண்டு வகையான உணவுகள் வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே தரப்பில் வழங்கப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


- முதல் வகையில், உணவு விலை ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


- இதில் பயணிகளுக்கு 7 பூரிகள், உருளைக்கிழங்கு கரி, ஊறுகாய் ஆகியவை வழங்கப்படும்.


- இரண்டாம் வகை உணவில் பயணிகளுக்கு சாதம், ராஜ்மா, சோலே, கிச்சடி குல்சே, பட்டூரே, பாவ்-பாஜி மற்றும் மசாலா தோசை போன்ற பல வகையான உணவுகள் வழங்கப்படும்.


மேலும் படிக்க | பயணிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. இனி இந்த வசதியெல்லாம் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ