Universal Pension Scheme: பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக வயதாகும் போது இந்த தேவை அதிகமாகிறது. வயது முதிர்வில் அனைவருக்கும் ஒரு நிலையான வருமானம் தேவை. ஆனால், பெரும்பாலும், அரசு பணிகள், தனியார் துறை என இது போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளிலேயே ஓய்வூதியத்திற்கான வசதி உள்ளது. அமைப்புசாரா பணிகளில் உள்ளவர்களுக்கும் மத்திய அரசு சில ஓய்வூதியத் திட்டங்களை நடத்தி வருகின்றது.
யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தை பரிசீலிக்கும் அரசு
எனினும், அனைத்து ஓய்வூதிய திட்டங்களையும் ஒன்றிணைத்து, அனைத்து மக்களுக்குமான ஒரு பெரிய புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருகின்றது. அரசாங்கம் ஒரு உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தை (UPS) பரிசீலித்து வருகிறது. இது நாட்டின் சமூகப் பாதுகாப்பு தளத்திற்கு புதிய வடிவத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும்.
Social Security Scheme: சமூக பாதுகாப்பு திட்டம்
இந்தப் புதிய முயற்சி, முக்கியமாக சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கான தற்போதைய ஓய்வூதியத் திட்டங்களிலிருந்து வேறுபட்டது. இது கிக் எகானமி தொழிலாளர்கள், வீட்டு உதவியாளர்கள் முதல் ஃப்ரீலான்ஸர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டால், தங்கள் பணி ஓய்வு ஆண்டுகளுக்கு உறுதியான திட்டம் இல்லாத தொழிலாளர்களுக்கு முக்கிய நிதி ஆதரவு வழங்கக்கூடும்.
New Pension Scheme: இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏன் கொண்டு வரப்படுகிறது?
யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டங்களிலிருந்து இது எவ்வாறு தனித்து நிற்கிறது? மிக முக்கியமாக, எண்ணற்ற இந்தியர்களுக்கு முதுமையில் அவர்களுக்குத் தேவையான நிதி ஸ்திரத்தன்மையை இது வழங்க முடியுமா? இதற்கான விடைகளை இங்கே காணலாம்.
UPS என்பது அனைத்து குடிமக்களுக்கும், அவர்களது வேலை அல்லது தொழிலை சாராமல் கிடைக்கும் ஒரு ஓய்வூதியப் பயன் முறையாகும். வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட பாரம்பரிய ஓய்வூதியத் திட்டங்களைப் போலல்லாமல், இந்த உலகளாவிய திட்டம் சுயதொழில் செய்பவர்கள், ஜிக் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ளவர்களையும் உள்ளடக்கும். பல வளர்ந்த நாடுகளில், இதே போன்ற திட்டங்களுக்கு பெரும்பாலும் அரசாங்கம் நிதியளிக்கின்றது. ஓய்வு பெற்றவர்களுக்கு அடிப்படை அளவிலான நிதிப் பாதுகாப்பை இது உறுதி செய்கிறது.
Voluntary Scheme: தன்னார்வ பங்களிப்பு திட்டம்
இருப்பினும், இந்தியாவின் முன்மொழியப்பட்ட திட்டம் தன்னார்வ பங்களிப்பு திட்டமாக இருக்கும். எந்தவொரு அரசாங்க ஆதரவும் இல்லாமல் பயனாளிகள் தங்கள் சொந்த ஓய்வூதிய நிதியில் பங்களிக்க வேண்டும். இது டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற இடங்களில் காணப்படும் அரசு நிதியளிக்கும் உலகளாவிய ஓய்வூதிய முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. தற்போது, இந்தியாவின் ஓய்வூதிய தளம் துண்டுகளாக உள்ளது. பல்வேறு குழுக்களை இலக்காகக் கொண்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
EPFO: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
சம்பளம் பெறும் தனியார் துறை ஊழியர்களுக்கு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) என்பது ஒரு கட்டாய சேமிப்புத் திட்டமாக உள்ளது. இதில் முதலாளி / நிறுவனம் மற்றும் பணியாளர் இருவரும் ஓய்வூதியத்திற்கு பங்களிக்கிறார்கள்.
National Pension System: தேசிய ஓய்வூதிய முறை
மறுபுறம், தேசிய ஓய்வூதிய முறை (NPS) என்பது அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இருவரும் ஓய்வூதிய நிதிகளில் முதலீடு செய்ய அனுமதிக்கும் மிகவும் நெகிழ்வான விருப்பமாகும். இது வரி சலுகைகள் மற்றும் சந்தையுடன் இணைக்கப்பட்ட வருமானங்களை வழங்குகிறது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம்
அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு, அடல் ஓய்வூதிய யோஜனா (APY) திட்டம் உள்ளது. இதில் பணி ஓய்வுக்கு பிறகு, ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மாதாந்திர ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றது. இது பயனாளிகளின் பங்களிப்பை பொறுத்தது.
Pradhan Mantri Shram Yogi Maandhan: பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா
PM-SYM எனப்படும் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா தெருவோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்குகிறது.
Pradhan Mantri Kisan Maandhan Yojana: பிரதம மந்திரி கிசான் மான்தன் யோஜனா
விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் மான்தன் யோஜனா (PM-KMY) மூலம் பயனடைகிறார்கள். இது ரூ.3,000 மாதாந்திர ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
ஓய்வூதியத்திற்கான இத்தனை திட்டங்கள் இருந்தாலும், இந்தியாவில் இன்னும் அனைத்து குடிமக்களுக்கும் நியாயமான ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறை இல்லை. வேலை அல்லது வருமான நிலை எதுவாக இருந்தாலும், அனைவரும் அணுகக்கூடிய ஒற்றை, தன்னார்வ ஓய்வூதிய மாதிரியை அறிமுகப்படுத்தி இந்த வெற்றிடத்தை நிரப்புவதேயுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் படிக்க | PF உறுப்பினர்களே, மார்ச் 15 கடைசி தேதி: நன்மைகளை பெற இதை செய்வது அவசியம்
மேலும் படிக்க | UPS: ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம்.... 50% ஓய்வூதியம், அரசின் பம்பர் பரிசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









