Govt Employees DA Merger Rejected: மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) ஏமாற்றத்தையும் தரும் முக்கிய செய்தியை பற்றி பார்ப்போம். அகவிலைப்படையை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் (nion Finance Ministry) ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதே நேரத்தில் எட்டாவது ஊதிய குழுவும் (8th Pay Commission) அமைக்கப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். எனவே அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அடுத்து என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது? தெரிந்துக்கொள்ளுவோம்.
அகவிலைப்படி + அடிப்படை சம்பளம்
மத்தியரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance), தற்போது 50 விழுக்காட்டை தாண்டி 58 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி 50 விழுக்காட்டை தாண்டும்போது அதை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட கால நடைமுறை. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும். இதற்காக பல ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
அகவிலைப்படி (DA) இணைப்பு குறித்த ஏமாற்றம்
நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு விஷயம், அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டும்போது அது அடிப்படைச் சம்பளத்துடன் (Basic Pay) இணைக்கப்படும் என்பதுதான்.
அரசாங்கத்தின் பதில்: மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி (Pankaj Choudhary) , அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறிவிட்டார்.
பாதிப்பு: அடிப்படைச் சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்பட்டிருந்தால், சம்பளம் கணிசமாக உயர்ந்திருக்கும். ஆனால், அந்த உடனடி உயர்வு தற்போது கிடைக்காது என்பது ஊழியர்களுக்குப் பெரும் பின்னடைவுதான்.
சம்பள உயர்வு கணக்கீடு (உதாரணம்)
அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைச்சால் என்ன லாபம்? என்றால், ஒரு ஊழியரோட அடிப்படை சம்பளம் ரூ.1,00000 (ஒரு லட்சம்) என வைத்துகொண்டால், அவருக்கு கிடைக்கும் அகவில்லைப்படி ரூ.58,000 ஆகும். இந்த அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தால், அவருக்கு கிடைக்கும் புதிய அடிப்படை சம்பளம் 1 லட்சத்து 58,000 ஆக உயர்ந்திருக்கும். மேலும் அவருக்கு கிடைக்கும் மற்ற அலோவென்ஸு படிகளும், இந்த புதிய அடிப்படை சம்பளத்தின் கீழ் கணிக்கிடப்படும். எனவே மாத சம்பளம் அதிகரிக்கும். இதன் காரணமாக இந்த இணைப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
8-வது ஊதியக் குழு: அடுத்த நம்பிக்கை
இந்த ஏமாற்றத்தைப் போக்கக்கூடிய ஒரே நம்பிக்கை 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) மட்டுமே. எட்டாவது மத்திய ஊதிய குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நோக்கம்: பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் இந்த குழு, பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சூழலை ஆராய்ந்து புதிய சம்பள விகிதத்தைப் பரிந்துரைக்கும்.
பிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor): இதுதான் சம்பள உயர்வின் மிக முக்கியமான காரணி. கடந்த முறை 2.57 ஆக இருந்தது. இம்முறை இது 3.68 வரை உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இது நடந்தால் குறைந்தபட்ச ஊதியம் கணிசமாக உயரும்.
எதிர்பார்ப்பு: அடிப்படைச் சம்பளத்துடன் அகவிலைப்படி (DA) இணையவில்லை என்றாலும், 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது, அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல சம்பள உயர்வை (Salary Hike) கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு மக்களவையில் குட் நியூஸ் கொடுத்த நிதி அமைச்சகம்
மேலும் படிக்க - ஜனவரி 2026 டிஏ உயர்வு, 8வது ஊதியக்குழு சம்பள உயர்வு: AICPI IW கொடுத்த குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









