CGHS புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் முக்கிய மாற்றங்கள், விவரம் இதோ

CGHS Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி  உள்ளது. ஏப்ரல் 28, 2025, அதாவது இன்று முதல், CGHS இன் புதிய டிஜிட்டல் தளம் மற்றும் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) முழுமையாகத் தொடங்கப்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2025, 02:42 PM IST
  • மத்திய அரசின் சுகாதாரத் திட்டம்.
  • சிஜிஎஹ்எஸ் புதிய தளம்.
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாற்றம் ஏன் அவசியமானது?
CGHS புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் முக்கிய மாற்றங்கள், விவரம் இதோ

CGHS New Rules: மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தில் (CGHS) ஒரு பெரிய டிஜிட்டல் ரீதியான மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஏப்ரல் 28, 2025, அதாவது இன்று முதல், CGHS இன் புதிய டிஜிட்டல் தளம் மற்றும் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) முழுமையாகத் தொடங்கப்படும். இதைத் தொடர்ந்து http://www.cghs.gov.in மற்றும் http://www.cghs.nic.in ஆகிய பழைய வலைத்தளங்கள் மூடப்படும். 

CGHS New Website: சிஜிஎஹ்எஸ் புதிய தளம்

இன்று முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு CGHS -இன் அனைத்து சேவைகளும் http://www.cghs.mohfw.gov.in என்ற புதிய போர்டல் மூலம் கிடைக்கும் என்று சுகாதார அமைச்சக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CGHS Mobile App

வலைத்தளம் தவிர, Android மற்றும் iOS பயனர்களுக்காக சிறந்த இடைமுகம் மற்றும் டிஜிட்டல் சேவைகளைக் கொண்ட ஒரு புதிய CGHS மொபைல் செயலியும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை சுமூகமாக செயல்படுத்த, சுகாதார மையங்கள் உட்பட CGHS இன் அனைத்து சேவைகளும் - ஏப்ரல் 26, 2025 (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் மூடப்பட்டன. இந்த நேரத்தில் தரவு இடம்பெயர்வு மற்றும் அமைப்பு மாறுதல் பணிகள் நிறைவடைந்தன. இதனால் புதிய அமைப்பு எந்த இடையூறும் இல்லாமல் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Central Government Health Scheme: மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்ன?

- இப்போது CGHS பயனாளிகள் PAN எண் மூலம் அடையாளம் காணப்படுவார்கள். இது ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டிய அவசியத்தை நீக்கி, தகுதியை உறுதிப்படுத்துவதை எளிதாக்கும்.

- பங்களிப்பு கட்டணங்கள் இப்போது பாரத் கோஷ் போர்ட்டலுடன் நேரடியாக இணைக்கப்படும். அதாவது கைமுறையாக உள்ளீடுகளைச் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. இது பிழைகள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் தொடர்பான சிக்கல்களையும் குறைக்கும்.

- புதிய முறையில், ஒரு அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, ​​முதலில் தகுதி மற்றும் பங்களிப்புத் தொகை பற்றிய முழுத் தகவலும் வழங்கப்படும். அதன் பிறகுதான் பணம் செலுத்த வேண்டும். இது தகவல் இல்லாமல் பணத்தை டெபாசிட் செய்வதில் உள்ள சிக்கலை நீக்கும்.

- அட்டை பரிமாற்றம், சார்ந்திருப்பவர்களைச் சேர்ப்பது அல்லது அட்டையில் பிற மாற்றங்கள் போன்ற வசதிகள் இப்போது முழுமையாக ஆன்லைனில் கிடைக்கும். இது நேரத்தை மிச்சப்படுத்தும். மேலும் பயனாளிகள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது.

- பயனாளிகள் இப்போது ஒவ்வொரு விண்ணப்பத்தின் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் புதுப்பிப்புகளைப் பெறுவார்கள். இது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். மேலும், இது எந்த நிலையிலும் பின்தொடர்வதற்கான தேவையைக் குறைக்கும்.

- சைபர் பாதுகாப்பை மனதில் கொண்டு, முதல் முறையாக லாக் இன் செய்யும்போது ஏற்கனவே உள்ள அனைத்து பயனர்களும் தங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க வேண்டும். ஹேக்கிங் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து அமைப்பைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- இது தவிர, இப்போது துறைகள் ஊழியர்களின் சம்பளப் பட்டியல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அவற்றின் DDO (Drawing and Disbursing Officer) மற்றும் PAO (Pay and Accounts Officer) குறியீடுகளால் அடையாளம் காணப்படும். இது அதிகாரிகளின் பின்தளப் பதிவுகளையும் வலுப்படுத்தும்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாற்றம் ஏன் அவசியமானது?

CGHS இன் பழைய மென்பொருள் 2005 முதல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது அது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பழையதாகிவிட்டது. மேலும், புதிய IT தரநிலைகள் மற்றும் சைபர் பாதுகாப்பின் அடிப்படையிலும் பலவீனமாகிவிட்டது. புதிய HMIS அமைப்பின் வருகையால், CGHS சேவைகள் வேகமாகக் கிடைக்கும். இது மட்டுமின்றி, அவை மிகவும் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும், பயனர் நட்பாகவும் இருக்கும் என நம்பப்படுகின்றது. இது லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும். மேலும் அரசாங்க சுகாதார சேவைகளின் செயல்பாடு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்கள் கவனத்திற்கு! மே 1 முதல் அதிகரிக்கும் கட்டணம்!

மேலும் படிக்க  | 8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.... அட்டகாசமான ஊதிய, ஓய்வூதிய உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News