)
DA Hike, 7th Pay Commission: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றை உயர்த்தி மத்திய அரசு கடந்த அக். 1ஆம் தேதி அறிவித்திருந்தது. இதனால், அகவிலைப்படி, அகவிலைப்படி நிவாரணம் ஆகியவை 55% இல் இருந்து 58% ஆக உயர்ந்தது.
ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்பட்டு மூன்று மாத அரியர் தொகையும் வழங்கப்பட்டது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாகவும் அமைந்தது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களும் தங்களின் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கின.
இதுவரை பீகார், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, உத்தர பிரதேசம், அஸ்ஸாம், உத்தரகாண்ட் மாநிலங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்து அம்மாநில அரசுகள் அறிவித்தன. அந்த வகையில், தற்போது ஆந்திர பிரதேச மாநில அரசு, அதன் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஆந்திர மாநிலத்தின் நிதித்துறை இன்று வெளியிட்டுள்ள ஆணையின்படி, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 33.67 சதவீதத்தில் இருந்து 37.31 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசின் அறிவிப்பின்படி ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3.64% தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று ஊழியர்கள் சங்கம், அமைச்சர்கள் உடனான கூட்டத்திற்கே பிறகு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் எதிரொலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர அரசுக்கு ரூ.160 கோடி ஒவ்வொரு மாதமும் கூடுதல் செலவாகும். இது மட்டுமின்றி, ஆந்திர முதல்வர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த அப்டேட்டையும் வழங்கினார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) தொடர்பான விவகாரம் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டுள்ளதால், அதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன், சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசாங்கம் கவனமாக ஆய்வு செய்யும் என்று சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை (அக். 19) அறிவித்தார்.
அகவிலைப்படி உயர்வு மட்டுமின்றி ஊழியர்களுக்கு கூடுதல் பலன்களையும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:
மருத்துவ காப்பீடு: ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டை சார்ந்த பிரச்னைகள் 60 நாள்களுக்குள் தீர்த்துவைக்கப்படும்.
குழந்தை பராமரிப்பு விடுப்பு: ஊழியர்களுக்கு மொத்தம் 180 நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வழங்கப்படும். இதை ஓய்வுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- மாநில அரசின் சாலை போக்குவரத்து நிறுவனத்தின் ஊழியர்கள் பணி உயர்வுக்கான அனுமதி வழங்கப்படும்.
- மாநில சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பதவி உயர்வு அனுமதி வழங்கப்படும்.
- காவல்துறையினருக்கு ஒரு தவணை ஈட்டிய விடுப்பு விடுவிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ