E-Shram Card: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், விண்ணப்பிக்கும் வழி இதோ

E-Shram Card Pension: இ-ஷ்ரம் மூலம் ஓய்வூதியம் பெற, இந்த திட்டத்துக்கான படிவத்தை எவ்வாறு நிரப்புவது? அதன் செயல்முறை என்ன? முழுமையான தகவல்களை இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2025, 04:41 PM IST
  • இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?
  • அதன் செயல்முறை என்ன?
  • இந்த விவரங்களை இங்கே காணலாம்.
E-Shram Card: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், விண்ணப்பிக்கும் வழி இதோ

E-Shram Card: மத்திய அரசு நாட்டு மக்களுக்கு பல வித நத்திட்டங்களை நடத்துகின்றது. தொழிலாளிகள், பெண்கள், விவசாயிகள், மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் பலவிதமான பிரத்யேகமான திட்டங்கள் உள்ளன. இவற்றில் உழைக்கும் வர்க்க மக்களுக்கான திட்டம் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

E-Shram Card Pension Yojna: இ-ஷ்ரம் கார்டு ஓய்வூதிய திட்டம்

மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பல விதமான நன்மைகள் வழங்கப்படுகின்றன. உழைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இதில் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டங்களில் ஷ்ராமிக் ஓய்வூதியத் திட்டமும் அடங்கும். இந்த திட்டதில் மாதந்தோறும் ரூ.3000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.36,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். இ-ஷ்ரம் மூலம் ஓய்வூதியம் பெற, இந்த திட்டத்துக்கான படிவத்தை எவ்வாறு நிரப்புவது? அதன் செயல்முறை என்ன? முழுமையான தகவல்களை இங்கே காணலாம். 

ஷ்ராமிக் கார்டு திட்டத்துடன், ஒரு தொழிலாளி ஷ்ராமிக் ஓய்வூதிய திட்டத்திற்கான படிவத்தை நிரப்பினால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 ஓய்வூதியம் பெறலாம். இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன? அதன் செயல்முறை என்ன? இந்த விவரங்களையும், இந்த படிவத்தை நிரப்புவதற்கான நேரடி இணைப்பையும் கீழே காணலாம்.

ஷ்ராமிக் கார்டு ஓய்வூதியத் திட்டத்திற்கான தகுதி என்ன?

மாதத்திற்கு ரூ.3000 தொழிலாளர் ஓய்வூதியம் பெற பின்வரும் தகுதிகள் தேவை:

- பயனாளி குறைந்தபட்ச வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
- சாலை தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களாக இருக்க வேண்டும்.
- பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் இருவருக்கும் இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்கும்.
- இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவராக இருக்க வேண்டும்.

ஷ்ராமிக் கார்டு ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன?

ஷ்ராமிக் ஓய்வூதிய திட்ட படிவத்தை நிரப்ப தேவையான ஆவணங்கள்:

- ஆதார் அட்டை
- தொழிலாளர் அட்டை
- வங்கி கணக்கு பாஸ்புக்
- ஆதார் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- தனிப்பட்ட தகவல்
- மொபைல் எண்

ஷ்ராமிக் ஓய்வூதிய திட்ட படிவத்தை எவ்வாறு நிரப்புவது

- முதலில் பயனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- வலைத்தளத்தில் உள்ள தொழிலாளர் ஓய்வூதியப் பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- ஷ்ராமிக் ஓய்வூதிய யோஜனா வலைத்தளம் திறக்கும்,
- கொடுக்கப்பட்டுள்ள தகுதி மற்றும் தகவல்களைப் படித்துப் படிவத்தை நிரப்பவும்.
- படிவத்தை நிரப்பி, சமர்ப்பித்து அதன் ரசீதைப் பதிவிறக்கவும்.

இ-ஷ்ரம் கார்டின் நன்மைகள்

- மாதாந்திர ஓய்வூதியம்: பிரதம மந்திரி மந்தன் யோஜனாவின் கீழ், 60 வயதிற்குப் பிறகு மாதத்திற்கு ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும்.
- நிதி உதவி: நீங்கள் பகுதியளவு ஊனமுற்றவராக இருந்தால், உங்களுக்கு ரூ.1,00,000 நிதி உதவி கிடைக்கும்.
- காப்பீட்டுத் தொகை: இறப்பு ஏற்பட்டால், ரூ.2,00,000 காப்பீடு கிடைக்கும்.
- பிற அரசு திட்டங்களின் நன்மைகள்: இ-ஷ்ரம் அட்டை வைத்திருப்பவர்கள் அரசு திட்டங்களின் பலன்களையும் பெறலாம்.

மேலும் படிக்க | PM Awas Yojana: விதிகளை மாற்றிய மாநில அரசு, இனி பெண்களுக்கு மட்டும்தான் வீடு கிடைக்கும்

மேலும் படிக்க | குஷியில் PF உறுப்பினர்கள்: அதிகரிக்கும் EPF வட்டி விகிதம், முக்கிய அறிவிப்பு விரைவில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News