E-Shram Card Yojana: இந்தியாவின் பெரும்பகுதி தொழிலாளர் சமூகத்துடன் தொடர்புடையது. தொழிலாளர் சமூகத்தினர் இந்திய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்தாலும், இவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமாக உள்ளனர். இவர்களுக்கு உதவ மத்திய அரசு பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டங்களில் ஒன்று இ-ஷ்ரம் அட்டைத் திட்டம். உழைக்கும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகள் அனைவருக்கும் அரசாங்கத்திடமிருந்து ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் தொழிலாளர் துறையின் எந்தவொரு திட்டத்திலும் சேராத தொழிலாளர்களுக்கானது. பணத்தை மிச்சப்படுத்தவும் குடும்பத்தை ஆதரிக்கவும் இந்தப் பணம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? இதற்கு தேவையான ஆனணங்கள் என்ன? இவை அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
இ-ஷ்ரம் கார்டு திட்டம் என்றால் என்ன?
இ-ஷ்ரம் கார்டு யோஜனா என்பது மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு திட்டமாகும். இதன் கீழ் நலிந்த நிலையில் உள்ள தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகள் இன்னும் பல திட்டங்களின் பலனைப் பெறுகிறார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தப் பணம் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த நிதி உதவியுடன், தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும். இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி கிடைப்பது மட்டுமல்லாமல், ரூ.2 லட்சம் மருத்துவக் காப்பீடும் (Health Insurance) வழங்கப்படுகிறது.
E-Shram Card Pension Yojana:
இந்த திட்டத்தின் கீழ், அரசாங்கம் உழைக்கும் வர்க்க மக்களுக்கு அவர்களின் வயதான காலத்திலும் நிதி பாதுகாப்பை வழங்குகின்றது. 60 வயதிற்குப் பிறகு ஏழைகள் நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க, இ-ஷ்ரம் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாத ஓய்வூதியமாக 3 ஆயிரம் ரூபாய் உதவி கிடைக்கிறது.
இந்த திட்டதில் யார் விண்ணப்பிக்கலாம்?
- மத்திய அரசால் நடத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியக் குடிமக்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.
- பொருளாதார ரீதியாக நலிவடைந்த மற்றும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரரின் வயது 16 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
E-Shram Card Yojana: இதற்கு விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவைப்படும்?
மத்திய அரசால் இயக்கப்படும் இ-ஷ்ரம் கார்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சில தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களில் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை, MNREGA அட்டை, மொபைல் எண், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் அடங்கும்.
இ-ஷ்ரம் கார்டால் எந்தத் திட்டங்களின் பயன் கிடைக்கும்?
- இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகள் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெறுகிறார்கள்.
- கூடுதலாக, இவர்கள் இன்னும் பல திட்டங்களின் பலனையும் பெறுவார்கள்.
- இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிக்கு ஓய்வூதியத் திட்டம், குழந்தைகளுக்கான உதவித்தொகைத் திட்டம், பிரதமர் வீட்டுவசதித் திட்டம், சுகாதார காப்பீட்டுத் திட்டம், குடும்ப உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தை வளர்ப்பு ஆகியவற்றின் பலன்கள் வழங்கப்படும்.
- இந்த சலுகைகள் இ-ஷ்ரம் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
- இதற்கு முதலில் e-Shram இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள Register on e-Shram விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இங்கே தேவையான சில தகவல்களை சுய பதிவு புலத்தில் உள்ளிட வேண்டும்.
- அதன் பிறகு மொபைல் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
- அடுத்து, பணியாளர் விவரங்களைத் தேர்ந்தெடுத்து, செண்ட் OTP என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு மொபைலில் பெறப்பட்ட OTP சரிபார்க்கப்பட வேண்டும்.
- பின்னர் தேவையான ஆவணத்தை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
- இறுதியாக, சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









