EPFO EDLI Scheme: முக்கிய விதிகளில் மாற்றம், PF உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் இலவச காப்பீடு

EPFO Latest Update: பணியின் போது திடீரென மரணம் ஏற்பட்டால், பணியாளரின் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதே EDLI திட்டத்தின் நோக்கமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 9, 2025, 02:27 PM IST
  • EDLI திட்டம் என்றால் என்ன?
  • காப்பீட்டு சலுகைகளை எவ்வாறு பெறுவது?
  • ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்குப் பலன் கிடைக்கும்.
EPFO EDLI Scheme: முக்கிய விதிகளில் மாற்றம், PF உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் இலவச காப்பீடு

EPFO Free Insurance: EPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு EPFO ​​ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. EPFO வின் ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) தொடர்பாக ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின் கீழ், இறப்புகளுக்கான செயல்முறை, அதாவது டெத் க்ளெய்ம் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காப்பீட்டு சலுகைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source

What is EDLI scheme?

EDLI திட்டம் என்றால் என்ன? EDLI திட்டம் 1976 இல் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. பணியின் போது திடீரென மரணம் ஏற்பட்டால், பணியாளரின் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், EPF உறுப்பினர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

Lifetime Protection Cover: வாழ்நாள் பாதுகாப்பு காப்பீடு

வருங்கால வைப்பு நிதி என்பது பணி ஓய்வுக்கான சேமிப்பிற்கான ஒரு வழிமுறையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பணியின் போது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், அந்த நேரத்திலும் நிதி ஆதரவையும் வழங்குகிறது. இது ஊழியர்களுக்கு ஒரு வலுவான நிதி பாதுகாப்பு செயல்முறையாக செயல்படுகிறது.

புதிய ஊழியர்களும் பயனடைகிறார்கள்

முன்னதாக, ஒரு ஊழியர் வேலையைத் தொடங்கி ஒரு வருடத்திற்குள் இறந்தால், அவரது குடும்பத்திற்கு காப்பீட்டுப் பலன்கள் கிடைக்காது என்ற விதி இருந்தது. இப்போது புதிய விதிகளின்படி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிதி உதவி கிடைக்கும்.

வேலை மாறிய பிறகும் சலுகைகள் கிடைக்கும்

இப்போது ஒரு ஊழியர் தனது வேலையை மாற்றி, இரண்டு வேலைகளுக்கும் இடையில் இரண்டு மாத இடைவெளி இருந்தால், அந்த சந்தர்ப்பத்திலும் அவருக்கு காப்பீட்டுத் தொகை தொடரும். இது குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும். திட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகு, காப்பீட்டுத் தொகையின் வரம்பு இப்போது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த 12 மாதங்களின் சராசரி சம்பளத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

Insurance Benefits: காப்பீட்டு சலுகைகளை எவ்வாறு பெறுவது?

ஒரு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், அவர் பரிந்துரைத்த நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்களிடமிருந்து எந்த பிரீமியமும் வசூலிக்கப்படுவதில்லை. மாறாக நிறுவனம் 0.5% பங்களிப்பை வழங்குகிறது.

ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்குப் பலன் கிடைக்கும்

ஒவ்வொரு ஆண்டும் பணியில் இருக்கும்போது சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் இறக்கிறார்கள். EPFO-வின் இந்த மாற்றங்கள், அந்த பணியாளர்களின் இறப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும். மேலும் இது சமூகப் பாதுகாப்பு அமைப்பையும் வலுப்படுத்தும். இது ஊழியர்களிடையே பாதுகாப்பு உணர்வையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | ஓய்வுக்கு பின் மாதம் ரூ.30,000 வருமானம் பெற... உதவும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்

மேலும் படிக்க | தங்கம் விலை அதிரடியாக சரியும்... அதுவும் 2 மாதங்களில்... எவ்வளவு குறையும் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News