)
EPFO 3.0 Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), EPFO 3.0 என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தளம் ஜூன் 2025 இல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் சில தொழில்நுட்ப சோதனைகள் காரணமாக அதன் வெளியீடு தாமதமானது. இப்போது செப்டம்பர் மாதத்தில் இது தொடங்கப்படலாம் என கூறப்படுகின்றது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO கொண்டு வரும் புதிய அமைப்பு முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இது லட்சக்கணக்கான PF உறுப்பினர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது.
- EPFO 3.0 தொடங்கப்பட்ட பிறகு, PF பணத்தை வித்டிரா செய்தல், க்ளெய்ம் செய்தல், கணக்கு விவரங்களில் திருத்தங்களை செய்தல் போன்ற செயல்முறைகள் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் மாறும்.
- தற்போது, இது சோதனை கட்டத்தில் உள்ளது, இன்னும் முழுமையாக செயல்முறைக்கு கொண்டுவரப்படவில்லை.
- ஆனால் EPFO 3.0 தொடங்கியதும், அது லட்சக்கணக்கான ஊழியர்களின் PF அனுபவத்தை மாற்றும்.
EPFO 3.0 -இல் முக்கிய மாற்றங்கள் என்னென்ன இருக்கும்? இதனால் கூடுதல் நன்மைகள் என்ன கிடைக்கும்? இவற்றை பற்றிய சில விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
- EPFO 3.0 இன் கீழ், ATM கார்டு அல்லது UPI மூலம் PF பணத்தை உடனடியாக எடுக்கும் வசதி அளிக்கப்படும்.
- உறுப்பினர்களுக்கு ஒரு கார்ட் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
- அதைக்கொண்டு வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது போலவே பிஎஃப் பணத்தையும் எடுக்கலாம்.
- முன்பு போல் பிஎஃப் பணத்திற்காக க்ளெய்ம் செய்து நீண்ட நாட்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது.
- இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் ATM அட்டை போல EPF அட்டையை இணைப்பார்கள். அதன் மூலம் ATM -இலிருந்து பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.
- வங்கி செயலியைப் போலவே, EPFO கணக்கிலிருந்து மொபைலில் UPI மூலம் நேரடியாகப் பணத்தை எடுக்கலாம்.
- உடனடியாக பணம் எடுப்பதற்கு வரம்பு இருக்கும்.
- உறுப்பினர்கள் தங்கள் PF இருப்பில் 50% வரை உடனடியாகப் பணம் எடுக்கலாம்.
- இது அவர்களது சேமிப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
OTP சரிபார்ப்பு மூலம் பெயர், பிறந்த தேதி, KYC மற்றும் வங்கி விவரங்கள் போன்ற விவரங்களை ஆன்லைனில் சரிசெய்ய முடியும். படிவங்களை நிரப்பவோ அல்லது அலுவலகத்திற்குச் செல்லவோ தேவையில்லை.
- EPFO 3.0 இல் சுமார் 95% க்ளெய்ம்கள் தானாக செட்டடில் செய்யப்படும் (Auto Settlement).
- இதற்கு சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.
- இது அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்.
Google Pay அல்லது PhonePe போன்ற UPI செயலிகளைப் போலவே, நீங்கள் PF இருப்பைச் செக் செய்து உடனடியாக நிதியை மாற்றலாம்.
ஆம், EPFO 3.0 தளத்தை அடல் ஓய்வூதிய யோஜனா (APY) மற்றும் பிரதம மந்திரி ஜீவன் பீமா யோஜனா (PMJJBY) போன்ற திட்டங்களையும் இணைக்க முடியும். இதனால் அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் இருக்கும்.
- அனைத்து பரிவர்த்தனைகள், திருத்தங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு OTP அல்லது PIN சரிபார்ப்பு தேவைப்படும்.
- இது கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும், மோசடியைக் குறைக்கும்.
- EPFO 3.0 புதிய பயனர் நட்பு மொபைல் செயலி மற்றும் வலைத்தளத்தைக் கொண்டிருக்கும்.
- இதில் உறுப்பினர்கள் PF இருப்பு, பாஸ்புக், க்ளெய்ம் நிலையைக் கண்காணிக்கலாம்.
- பல ஆன்லைன் சேவைகளையும் பயன்படுத்தலாம்.
EPFO 3.0 மே-ஜூன் 2025 இல் தொடங்க திட்டமிடப்பட்டது. இதற்கு அமைச்சகம் மற்றும் NPCI ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் சில சோதனைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில், இது அனைத்து PF உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ