)
EPFO 3.0 Latest News: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இன்னும் சில நாட்களில் உங்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்கவுள்ளது. விரைவில் உங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை UPI மற்றும் ATM கார்டு மூலம் எடுக்க முடியும். முன்னதாக, PF தொகையை எடுக்க அல்லது வேறு கணக்கிற்கு மாற்ற பல வாரங்கள் ஆனது. ஆனால் இப்போது அதே வேலையை சில நிமிடங்களில் செய்து விடலாம். இவை அனைத்து EPFO 3.0 ஆல் சாத்தியமாகும்.
EPFO 3.0 என்பது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) புதிய டிஜிட்டல் சேவையாகும். இது விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பெரிய மாற்றம் 2025 ஆம் ஆண்டிலேயே செயல்படுத்தப்படும் என்றும், இது நாட்டின் 8 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
EPFO 3.0 இல் என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கும்? EPFO உறுப்பினர்கள் அவற்றால் எவ்வாறு பயனடைவார்கள்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
முன்னதாக EPFO 3.0 ஜூன் 2025 முதல் தொடங்கப்பட இருந்தது, ஆனால் தொழில்நுட்ப சோதனைகள் காரணமாக, இதுவரை அது தொடங்கப்படவில்லை. இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் TCS போன்ற ஐடி நிறுவனங்கள் அதைப் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த மேம்படுத்தல் இந்தியாவின் சமூக பாதுகாப்பு அமைப்புக்கு புதிய பலத்தை அளிக்கும் என்றும், ஊழியர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அரசாங்கம் கூறுகிறது. மொபைல் செயலி, டிஜிட்டல் டேஷ்போர்டு மற்றும் UPI கட்டணம் செலுத்துதல் போன்ற வசதிகள் இபிஎஃப் உறுப்பினர்களின் செயல்முறைகளை மிகவும் எளிதாக்கும்.
- இதுவரை, PF பணத்தை எடுக்க, ஊழியர்கள் ஆன்லைன் க்ளெய்ம் படிவத்தை நிரப்பி, ஆவணங்களைப் பதிவேற்றி, பின்னர் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
- ஆனால் EPFO 3.0 வந்த பிறகு, ஊழியர்கள் தங்கள் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுப்பது போல நேரடியாக ATM மூலம் எடுக்க முடியும்.
- இந்த வசதி முற்றிலும் டிஜிட்டல் முறையில் இருக்கும்.
- மேலும் இந்த முறையில் பணம் விரைவாகவும் எளிதாகவும் கிடைக்கும்.
- ATM-ல் இருந்து பணம் எடுக்கும் வரம்பு ரூ. 1 லட்சம் வரை அல்லது மொத்த இருப்பில் 50% வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.
- ATM-ல் இருந்து PF பணத்தை எடுக்க, பிஎஃப் உறுப்பினர்களின் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
- மேலும், உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
- ATM தவிர, UPI மூலமாகவும் PF தொகையை எடுக்கலாம்.
- கூகிள் பே, போன்பே அல்லது பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை உடனடியாகப் பயன்படுத்த முடியும்.
- இது தேவைப்படும்போது ஊழியர்களுக்கு உடனடி நிதி உதவியை வழங்கும்.
- இருப்பினும், பணம் எடுப்பதில் வரம்பு இருக்கும்.
EPFO 3.0 -இல் தானியங்கி க்ளெய்ம் தீர்வு வசதி வழங்கப்படும். இதனால் எந்தவொரு கைமுறை தலையீடும் இல்லாமல் உங்கள் கணக்கிற்கு நேரடியாக பணத்தை மாற்ற முடியும். இதன் பொருள், க்ளெய்ம் செய்த பிறகு பணத்தைப் பெற நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், இதற்கான செயல்முறை எளிதாக இருக்கும். புதிய அமைப்பில், உறுப்பினர்கள் ஒரு ஆன்லைன் க்ளெய்மை சமர்ப்பித்தவுடன், அமைப்பு அதைச் செயல்படுத்தும், மேலும் பணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கை அடையும்.
பிஎஃப் உறுப்பினர்களின் கணக்கில் பெயர், பிறந்த தேதி அல்லது வேறு ஏதேனும் தகவல் தவறாக இருந்தால், இனி, அதை சரிசெய்ய படிவத்தை நிரப்பி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. EPFO 3.0 இன் கீழ், இந்த அனைத்து பணிகளையும் உறுப்பினர்களே ஆன்லைனில் செய்ய முடியும். இது முழு செயல்முறையையும் இன்னும் எளிதாக்கும்.
EPFO 3.0 இல் இறப்பு க்ளெய்ம் செயல்முறையும் எளிமைப்படுத்தப்படும். முன்னதாக, இறந்த உறுப்பினரின் குடும்பத்தினர் க்ளெய்ம்களுக்கான பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. மைனர் நாமினிக்கு பாதுகாவலர் சான்றிதழ் தேவைப்பட்டது. ஆனால் இப்போது இந்த சான்றிதழின் தேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குடும்பங்களுக்கு விரைவாக நிதி உதவி பெற உதவும்.
EPFO ஆதார் மூலம் KYC செயல்முறையையும் எளிமைப்படுத்தியுள்ளது. ஊழியர்கள் இப்போது தங்கள் ஆதார் மூலம் KYC ஐ எளிதாக முடிக்க முடியும். இந்த செயல்முறை வேகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். வேலைகளை மாற்றும்போது PF பரிமாற்ற செயல்முறையும் எளிதாகிவிட்டது. இப்போது இந்த வேலை ஒரு சில கிளிக்குகளிலேயே நடக்கும்.
PF சேவைகளை முற்றிலும் டிஜிட்டல் மற்றும் பயனர் நட்பு ரீதியில் மாற்றுவதே EPFO 3.0 இன் நோக்கம். முன்பு மக்கள் சிறிய விஷயங்களுக்கும் பிஎஃப் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது, இப்போது அனைத்து வேலைகளும் ஒரே போர்ட்டலில் ஆன்லைனில் செய்யப்படும். பணம் எடுப்பது, தவறைத் திருத்துவது, க்ளெய்ம் செய்வது என எதுவாக இருந்தாலும் அனைத்தும் எளிதாக நடந்து முடியும்.
EPFO 3.0 நன்மைகள் சுருக்கமாக..........
- EPFO 3.0 டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த பெரிய மைல்கல்லாக இருக்கும்.
- இது இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் பணிகளை வேகமாகவும் எளிதாகவும் செய்து முடிக்க உதவும்.
- ஊழியர்களுக்கு இது நேரடி நிதி நெகிழ்வுத்தன்மையை வழங்கும்.
- இது வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மீதான உறுப்பினர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ