EPFO Higher Pension: உயர் ஓய்வூதியத்தை மறுக்க இயலாது... நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

உயர் ஓய்வூதிய பெற கூட்டு விண்ணப்பங்களை அளித்துள்ள EPFO ​​உறுப்பினர்கள், உயர் ஓய்வூதிய சலுகைகளைப் பெற கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு உதவும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2025, 02:06 PM IST
  • கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு.
  • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி.
  • மனுதாரர்களுக்கு அதிக ஓய்வூதியத்தின் பலனை மறுக்க முடியாது.
EPFO Higher Pension: உயர் ஓய்வூதியத்தை மறுக்க இயலாது... நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

EPFO Higher Pension: கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக, EPFO சந்தாதாரர்கள் அதிக ஓய்வூதியத்தைப் பெற விண்ணப்பிக்க தொடங்கினார்கள். EPFO அமைப்பும் இதற்கான விதிகளை ஏற்படுத்தி, உயர் ஓய்வூதியத்தின் பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க தொடங்கியது. இதன் கீழ் பல விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உயர் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், லட்சக்கணக்கில் பலரது விண்ணப்பங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிராகரிக்கப்பட்டன. 

உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பு

கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பங்களிப்புகள் மாதாந்திர அடிப்படையில் அல்லாமல் மொத்தமாக வழங்கப்பட்டன என்ற காரணத்திற்காக ஊழியர்களுக்கு உயர் ஓய்வூதியத்தை மறுக்க முடியாது என்று கூறியுள்ளது. உயர் ஓய்வூதியம் பெற கூட்டு விண்ணப்பங்களை அளித்துள்ள EPFO ​​உறுப்பினர்கள், உயர் ஓய்வூதிய சலுகைகளைப் பெற இந்தத் தீர்ப்பு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி

திருவனந்தபுரம் பிராந்திய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற கூட்டுறவு சங்கத்தின் நான்கு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதி முரளி புருஷோத்தமன், பணிக்காலத்தில் சம்பளத்தில் இருந்து முழுமையாக பங்களிப்பு செய்தவர்களுக்கு, பணம் மொத்தமாகவோ அல்லது தாமதமாகவோ வழங்கப்பட்டாலும் கூட, EPFO ​​உயர் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று கூறினார். இந்த நான்கு ஓய்வு பெற்ற ஊழியர்களும் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மனுதாரர்களுக்கு அதிக ஓய்வூதியத்தின் பலனை மறுக்க முடியாது

ஊழியர்களின் கூட்டு மேல்முறையீட்டைக் கேட்ட நீதிபதி முரளி புருஷோத்தமன் தலைமையிலான தனி அமர்வு, 2004–2005 முதல் 2007–2008 வரையிலான காலகட்டத்தில், EPFO ​​ஊழியர்கள் மற்றும் முதலாளிகளிடமிருந்து பங்களிப்புகளைப் பெற்றுள்ளது என்றும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பங்களிப்புகளை ஏற்றுக்கொண்ட நிலையில், மனுதாரர்களுக்கு அதிக ஓய்வூதியத்தின் பலனை மறுக்க முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உயர் ஓய்வூதிய விண்ணப்பத்தை நிராகரித்த EPFO

நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தின் சம்பளத்தின் அடிப்படையில் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் பங்களிப்புகளை முழுமையாக செய்திருந்தனர். மேலும் அவர்களின் முதலாளி சமமான பங்களிப்பைச் செய்தார். இருப்பினும், ஓய்வூதிய நிதி அமைப்பு இந்த ஊழியர்களுக்கு உயர் ஓய்வூதியம் வழங்க இயலாது என மறுத்தது. 2004 மற்றும் 2008 ஆண்டுகளுக்கு இடையிலான சில மாதங்களில், பங்களிப்புகள் மாதாந்திர அடிப்படையில் அல்லாமல், மொத்தமாக வழங்கப்பட்டன என்று கூறி ஊழியர்களின் உயர் ஓய்வூதிய விண்ணப்பத்தை EPFO ​​நிராகரித்திருந்தது.

EPFO ​​ஊழியர் நட்பு அணுகுமுறையை ஏற்க வேண்டும்

உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு, பங்களிப்புகள் எவ்வாறு, எப்போது செய்யப்பட்டன என்பதைப் பொருட்படுத்தாமல், ஊழியர் நட்பு அணுகுமுறையை EPFO ​​ஏற்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர், விண்ணப்ப நிராகரிப்புகளைக் குறைக்கவும், நிர்வாக திறமையின்மை/ கால தாமதங்கள் காரணமாக, சந்தாரர்களுக்கான நன்மைகளை வழங்கும்போது தடையாக இருக்கக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | EPFO New Rules: PF கணக்கில் தனிப்பட்ட தகவல்களை திருத்தலாம்... எளிய வழிமுறை இதோ

மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு ஷாக்: உயர் ஓய்வூதியம் பெறுவதில் வந்த சிக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News