EPFO என்னும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, இந்தியாவில் அரசு, பொது, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைக்த்து ஊழியர்களின் PF கணக்கு மற்றும் அது தொடர்பான விஷயங்களை நிர்வகிக்கிறது. இது அரசு நடத்தும் கட்டாய சேமிப்பு திட்டம் எனலாம். EPFO புதிய விதிகளின் கீழ், தற்போது, தனது அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை ஊழியர் கணக்கில் டெபாசிட் செய்கிறார். இதற்கு சமமான தொகையை நிறுவனம் டெபாசிட் செய்கிறது. இந்த பங்களிப்புகளுக்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது. கூட்டு வட்டியின் பலனால், பணம் பெருகி, ஓய்வு காலத்திற்கான சிறந்த சேமிப்பாக PF சேமிப்பு உள்ளது.
EPF என்னும் கட்டாய சேமிப்பு திட்டத்தில் இருந்து இளம் சந்தாதாரர்கள் அதிக எண்ணிக்கையில் பணத்தை எடுத்து வருகிறார்கள் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கவலை வெளியிட்டுள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உத்திகளையும் அதை எவ்வாறு தடுப்பது செய்வது என்பதையும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆராய்ந்து வருகிறது.
பல சந்தர்ப்பங்களில், சந்தாதாரர்கள் வேலை மாற்றத்தின் போது தங்கள் PF கணக்கில் இருந்து நிதியை முழுமையாக திரும்பப் பெறுகிறார்கள் என EPFO கூறுகிறது. வேலையை மாற்றும் போது, பழைய பிஎஃப் கணக்கையும், புதிய பிஎஃப் கணக்கையும் இணைப்பதற்கு பதிலாக, பழைய கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர். சேமிப்பின் நன்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
PF நிதியைப் பராமரிப்பது, ஓய்வு பெறும் போது கையில் நல்ல தொகை சேருவதை உறுதி செய்வதுடன், வீடு கட்டுதல் அல்லது குழந்தைகளின் கல்வி செலவு, திருமணம் போன்ற தேவைகளை சமாளிக்கவும் உதவுகிறது. நிதி கார்பஸ் வளரும்போது அவர்களுக்கு ஒரு நல்ல வருமானத்தைப் பெறுவதையும் உறுதி செய்யும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஓய்வூதிய சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, குறிப்பாக இளம் சந்தாதாரர்களிடையே, உத்திகளை ஆராய EPFO முயற்சிப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய EPF விதிகளின் கீழ், ஒரு உறுப்பினர் ஓய்வுக்குப் பிறகு முழு PF நிதியையும் திரும்பப் பெறலாம். இருப்பினும், உறுப்பினர்கள் ஒரு மாத வேலையின்மைக்குப் பிறகு PF கார்பஸில் 75% வரையிலும், இரண்டு மாத வேலையின்மைக்குப் பிறகு 100% கார்பஸிலும் பணத்தை எடுக்கலாம் என்று விதிகள் அனுமதிக்கின்றன.
வேலை இழப்பு அல்லது வேலையின்மையை எதிர்கொள்ளும் ஊழியர்கள், தங்கள் PF கார்பஸை மீண்டும் பெறுவதை உறுதி செய்வதே விதியின் நோக்கமாக இருந்தாலும், பெரும்பாலும், EPF சந்தாதாரர்கள் வேலையை ராஜினாமா செய்த பிறகு, இரண்டு மாத காத்திருப்புக்குப் பிறகு தங்கள் கார்பஸை திரும்பப் பெறுகிறார்கள்.
பிஎஃப் கணக்கை திரும்ம்ப பெறுவது பல காரணங்களுக்காக இருக்கலாம், அதாவது வருமானம் அதிகமாக இருக்கும் பங்குகள் போன்ற பிற கருவிகளில் முதலீடு செய்வது அல்லது விருப்பிய பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்துவது போன்ற பல காரணங்களுக்காக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல நேரங்களில், இளைஞர்கள் ஓய்வு பெறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ள நிலையில், சேமிப்பை இப்பொழுதே தொடங்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களின் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து சேமிப்பதன் மூலம், அவர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஆரோக்கியமான தொகை கிடைக்கும். தனியார் துறையில், பெரும்பாலான ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காத நிலை உள்ளதால், பிஎஃப் கணக்கில் சேமிப்பை தொடருவது மிகவும் முக்கியமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகும், ஊதியம், ஓய்வூதியம் அதிரடியாய் உயரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









