EPFO Rules: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணி புரியும் எல்லா ஊழியர்களுக்குமே, பிஎஃப் கணக்கு இருக்கும். நீண்ட காலம் சேமிப்பு திட்டமான இதில், ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பின் மூலம், அடிப்படை சம்பளத்தின் 24 சதவீத தொகை, பிஎப் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. ஊழியர்களின் ஓய்வு கால நன்மைகளை கருத்தில் கொண்டு, செயல்படுத்தப்படும் அரசின் இந்தத் திட்டத்தின் மூலம், ஓய்வு பெறும் போது ஊழியர்கள் பெரும் தொகையை பெறுகின்றனர்.
ஓய்வு காலத்திற்கான நிதி என்றாலும், அவசர கால தேவைகளுக்காக ஊழியர்கள் பிஎப் கணக்கில் இருந்து, ஓய்வு பெறுவதற்கு முன்பே பெற்றுக் கொள்ளலாம். குழந்தைகளின் உயர்கல்விக்கான செலவுகள், வீடு கட்ட, திருமண செலவு, மருத்துவ சிகிச்சைகள் போன்ற காரணங்களுக்கான பிஎஃப் கணக்கில் இருந்து முன்பணம் பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்லைன் EPF க்ளெய்ம் கோரிக்கை
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க, ஆன்லைன் EPF க்ளெய்ம் கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், சில சமயங்களில் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான EPF க்ளெய்ம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, சந்தாதாரர்கள் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது. இந்நிலையில், EPF கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான சில முக்கிய காரணங்களையும் தீர்வுகளையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
EPF க்ளெய்ம் நிராகரிக்கப்படுவதற்கான சில முக்கிய காரணங்கள்
முழுமையடையாத KYC நடைமுறை
உங்கள் விண்ணப்பம் அல்லது கணக்கு விவரங்களில் உள்ள சிறிய பிழைகள் கூட உங்கள் க்ளெய்ம் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் அதோடு, முழுமையடையாத KYC, குறிப்பாக உங்கள் ஆதார் உங்கள் UAN கணக்கு எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால் இந்த சிக்கல் உண்டாகும். PF கணக்கில் மற்றும் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பொருந்தாத பெயர்கள், பிறந்த தேதிகள் அல்லது வேலையில்சேர்ந்த தேதி, விலகிய தேதி உள்ள பிற தகவல்களில் அல்லது தனிப்பட்ட தகவல்களில் உள்ள வேறுபாடுகள் EPF க்ளெய்ம் நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.
வங்கிக் கணக்குத் தகவல்களில் உள்ள தவறுகள்
தவறான கணக்கு எண் அல்லது தவறான IFSC குறியீடு போன்ற உங்கள் வங்கிக் கணக்குத் தகவல்களில் உள்ள தவறுகள் மற்றொரு தடையாகும். நீங்கள் சமீபத்தில் வேலைகளை மாற்றியிருந்தால், உங்கள் PF கணக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய தேவையான இணைப்பு K படிவத்தை பெற்றிருந்தால், உங்கள் EPF க்ளெய்ம் அங்கீரக்கப்படாமல் போகலாம்.
EPF க்ளெய்ம் நிராகரிப்பை தவிர்ப்பதற்கு கவனத்தில் கொள்ள வேண்டியவை
EPFO போர்ட்டலில் உங்கள் தனிப்பட்ட மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களைச் சரிபார்க்கவும்
சிக்கல்களைத் தடுப்பதற்கான சிறந்த வழி, க்ளெய்ம் சமர்பிக்கும் முன் EPFO போர்ட்டலில் உங்கள் தனிப்பட்ட மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களைச் சரிபார்க்கவும். அவை உங்கள் ஆதார் பதிவுகளுடன் பொருந்துவதை உறுதிசெய்யவும். உங்கள் UAN எண்ணை ஆதாருடன் இணைத்து, உங்கள் ஆதார்-இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை ஆக்டிவ் ஆக வைத்திருங்கள்.
வங்கிக் கணக்கு விவரங்களை இருமுறை சரிபார்த்து தேவைப்பட்டால் புதுப்பிக்கவும்
உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை இருமுறை சரிபார்த்து, உங்கள் PF நாமினேஷன் தகவலையும் புதுப்பிக்கவும். நீங்கள் பல நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தால், வேலையில் சேர்ந்த தேதி, விலகிய தேதி போன்ற உங்கள் வேலை வரலாற்றை கூறும் தகவல்களை சரிபார்க்கவும். மேலும், நீங்கள் தாக்கல் செய்யும் கோரிக்கை வகைக்கான தகுதி அளவுகோல்களை இபிஎஃப்ஓ விதிகளின் படி பூர்த்தி செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தகவல்களை சரியாக நிரப்பியுள்ளீர்களா என்பதை சரிபார்க்கவும்
உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன், க்ளெய்ம் படிவத்தில் உள்ள ஒவ்வொரு தகவல்களையும் கவனமாக மதிப்பாய்வு செய்து, தகவல்களை சரியாக நிரப்பியுள்ளீர்களா என்பதை சரிபார்க்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். ஒரு சிறிய தவறு கூட உங்கள் க்ளெய்ம் செயல்முறையை தாமதப்படுத்தலாம்.
உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் செய்ய வேண்டிய என்ன?
1. உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அல்லது திருப்பி அனுப்பப்பட்டால், பீதி அடைய வேண்டாம். முதலில், அதற்கான காரணத்தைச் சரிபார்க்க EPFO போர்ட்டலில் உள்நுழையவும்.
2. EPFO, பல சமயங்களில், பொதுவாக க்ளெய்ம் அங்கீகரிக்கப்பட சரிசெய்ய வேண்டியவற்றைக் குறிப்பிடுகிறது. தேவையான ஆவணங்கள், தவறான தரவு அல்லது தகுதிக்கான் விதிகள் தொடர்பான சிக்கல்கள் போன்ற காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
3. பிழைகளைச் சரிசெய்தவுடன் அல்லது தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தவுடன், உறுப்பினர் போர்டல் அல்லது உமாங் செயலி வழியாக மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
EPF க்ளெய்ம் செயல்முறையை எளிதாக்கும் சமீபத்திய விதி மாற்றங்கள்
1. ஊழியர் வருங்கால வைப்பு நிதி சமீபத்தில் இரண்டு முக்கிய விதிகளை தளர்த்தியுள்ளது. ஆன்லைனில் கோரிக்கையை தாக்கல் செய்யும் போது உறுப்பினர்கள் ரத்து செய்யப்பட்ட காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களையோ அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக்கையோ பதிவேற்ற வேண்டியதில்லை. UAN செயல்முறையின் போது வங்கிக் கணக்குகள் இப்போது சரிபார்க்கப்படுவதால், இந்த நடைமுறை தேவையற்றதாக கருதப்படுவதால், விதிகள் மாற்றப்பட்டுள்ளது.
2. மேலும், உங்கள் வங்கிக் கணக்கை UAN உடன் இணைப்பதற்கு சரிபார்ப்புக்குப் பிறகு முதலாளியின் ஒப்புதல் இனி தேவையில்லை. இது செயல்முறையை எளிதாக்குகிறது என்பதோடு நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
விதிகள் குறித்த அனைத்தையும் அறிந்திருப்பதன் மூலமும், அனைத்து பதிவுகளும் ஒழுங்காக இருப்பதை உறுதி செய்வதன் மூலமும், உறுப்பினர்கள் EPF உரிமைகோரல் செயல்முறையை எளிதாக ஆக்கலாம். மேலும், க்ளெய்கள் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை பெரிதும் மேம்படுத்தலாம்.
மேலும் படிக்க | இந்த நாள் முதல் இபிஎஃப் தொகையை ATM -இல் எடுக்கலாம், அமைச்சர் அளித்த சூப்பர் அப்டேட்
மேலும் படிக்க | உங்கள் EPF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது? தெரிந்துகொள்ள ஈசியான 5 வழிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ