நாட்டின் கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கக் கூடும். அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1000 லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓய்வூதியத்தில் (EPS ஓய்வூதிய உயர்வு) 7.5 மடங்கு என்ற அளவில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படக்கூடும். EPS திருத்தத்தை நாடாளுமன்றக் குழு மதிப்பீடு செய்யப் போவதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு உத்தரவாத ஓய்வூதிய வசதி
ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995ம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் மக்களுக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) தொடங்கப்பட்டது. இதனால் ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகும் தங்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதமான ஓய்வூதியத்தை (மாதாந்திர ஓய்வூதியம்) பெற முடியும். இந்தத் திட்டத்தின்படி, முதலாளி ஒவ்வொரு மாதமும் பணியாளரின் சம்பளத்தில் 8.33% ஐ PF நிதியில் டெபாசிட் செய்கிறார். பணியாளரைத் தவிர, மத்திய அரசும் பணியாளரின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக அதன் கணக்கிலிருந்து 1.16% பங்களிக்கிறது. இந்த தொகை ஒவ்வொரு மாத இறுதியிலிருந்து 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்பட வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதிய பலன்கள்
தற்போது, ஊழியருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது. அரசாங்கம் செப்டம்பர் 1, 2014 அன்று இதற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைச் செய்தது. அதன் பிறகு, இந்தத் தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாக, தொழிலாளர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் EPS இன் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றன. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரூ.1000 ஓய்வூதியத் தொகையில் வாழ்க்கை நடத்துவது கடினம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன
EPS மறுஆய்வு குறித்து நாடாளுமன்றக் குழு தெரிவித்த கருத்து
பாஜக எம்பி பசவராஜ் பொம்மை தலைமையிலான நாடாளுமன்றக் குழு, EPS திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை மறுபரிசீலனை செய்ய தொழிலாளர் அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் EPS திட்டத்தின் மூன்றாம் தரப்பு மதிப்பாய்வை முடிக்க குழு விரும்புவதாக அறிக்கை கூறுகிறது. 2014 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000 போதாது. அதை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச EPS ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்தலாம் என்ற குழுவின் பரிந்துரை
குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஓய்வூதியம் பெறுவதில் சிறிது நிவாரணம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். மேலும், ஓய்வுக்குப் பிறகு பெறும் ஓய்வூதியம் அதிகரிப்பதால், முதியவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதில் எந்தப் பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள். மேலும், அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு இடையில், ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதில் அரசு தொடர்புடைய பல துறைகளுக்கு இடையில் முழுமையான விவாதங்கள் நடத்தப்பட்டு, அதன் பிறகு EPFO ஓய்வூதிய உயர்வு குறித்த இறுதி முடிவு,எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | EPF Claim நிராகரிக்கப்படுவதற்கான சில முக்கிய காரணங்களும்... தீர்வுகளும்
மேலும் படிக்க | உங்கள் EPF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது? தெரிந்துகொள்ள ஈசியான 5 வழிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ