)
EPFO : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), சந்தாதாரர்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. ஆனால், அதை அவசியமின்றி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என இபிஎஃப்ஓ எச்சரித்துள்ளது. வாழ்க்கை கணிக்க முடியாதது, எதிர்பாராத அவசரநிலைகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஒரு பெரிய செலவைச் சமாளிக்க, நெருக்கடியை நிர்வகிக்க, அல்லது நிதிப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நீங்கள் உங்கள் பிஎஃப் நிதியிலிருந்து பணத்தை எடுக்க வேண்டியிருக்கலாம். ஆனால், இதைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் பிஎஃப் என்பது சும்மா இருக்கும் பணம் அல்ல; அது உங்கள் நிதிப் பாதுகாப்பு, உங்கள் ஓய்வு காலத்திற்கான சேமிப்பு மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்திற்கான உங்களின் இன்சூரன்ஸ் ஆகும். இதுதொடர்பாக இபிஎப்ஓ எகஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எச்சரிக்கை! இபிஎஃப் உறுப்பினர்களே - முற்றிலும் அவசியமானாலன்றி உங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் பிஎஃப் என்பது ஒரு சாதாரண வங்கி கணக்கு அல்ல - அது உங்கள் எதிர்காலத்திற்கான நிதிப் பாதுகாப்பு. அதை அவசரநிலைகள், ஓய்வு காலம், அல்லது முக்கியமான தேவைகளுக்காக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று புத்திசாலித்தனமாக சேமிப்பதன் மூலம் உங்கள் நாளைய தினத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!" என்று கூறியுள்ளது.
பிஎஃப் பணத்தை ஏன் அவசியமின்றி எடுக்கக் கூடாது?
கூடுதல் வளர்ச்சி: இபிஎஃப் என்பது நீங்கள் மற்றும் உங்கள் வேலை அளிக்கும் நிறுவனம் ஆகிய இருவரின் மாதாந்திர பங்களிப்புகள் மூலம் காலப்போக்கில் வளரக்கூடிய ஒரு நிதி. மேலும், இதில் கிடைக்கும் கூட்டு வட்டியின் (compounding interest) சக்தியையும் மறந்துவிடக் கூடாது. நீங்கள் அந்தப் பணத்தை எவ்வளவு காலம் தொடாமல் வைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்கள் ஓய்வுக் காலத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக மாறும்.
வளர்ச்சி சுழற்சி பாதிப்பு: முன்கூட்டியே பணத்தை எடுப்பது உங்கள் சேமிப்பை குறைப்பது மட்டுமின்றி, அந்த வளர்ச்சியின் சுழற்சியையும் உடைத்துவிடும்.
ஓய்வு காலத்திற்கு உதவும்: ஓய்வுக் காலத்தில், உங்கள் பிஎஃப் பணம், மருத்துவச் செலவுகள், வாழ்க்கைத் தேவைகள், அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் தள்ளிவைத்த ஒரு கனவை நனவாக்குவது போன்ற விஷயங்களுக்கு உதவக்கூடும்.
எப்போது பிஎஃப் பணத்தை எடுக்கலாம்?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. அவசர மருத்துவத் தேவைகள், வீடு வாங்குதல், அல்லது உயர்கல்வி போன்ற காரணங்களுக்காகப் பணத்தை எடுக்கலாம்.
வேலையின்மை:
1 மாதத்திற்குப் பிறகு: உங்கள் பிஎஃப் இருப்பில் 75% வரை எடுக்கலாம். 2 மாதங்களுக்குப் பிறகு: மீதமுள்ள 25% பணத்தை எடுக்கலாம்.
வீடு:
3 வருட உறுப்பினர் சேவைக்குப் பிறகு: வீடு வாங்க அல்லது கட்ட உங்கள் பிஎஃப் பணத்தில் 90% வரை எடுக்கலாம்.
மருத்துவ சிகிச்சை:
உங்களுக்கோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களுக்கோ: 6 மாதங்களின் அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி, அல்லது வட்டியுடன் உங்கள் சொந்த பங்களிப்பு, இதில் எது குறைவோ அதை எடுக்கலாம்.
திருமணம் அல்லது கல்வி:
7 வருட சேவைக்குப் பிறகு: திருமணம் அல்லது குழந்தைகளின் 10 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட கல்வித் தேவைகளுக்காக, வட்டியுடன் உங்கள் சொந்த பங்களிப்பில் 50% வரை எடுக்கலாம்.
இபிஎஃப்-ன் தற்போதைய வட்டி விகிதம்
2024-25 நிதியாண்டுக்கு, இபிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ