)
EPFO Latest News: தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரா நீங்கள்? இபிஎஃப் கணக்கு இருக்கின்றதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அனைத்து சம்பளதாரர்களுக்கும் பல வசதிகளை வழங்குகிறது. ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12% ஒவ்வொரு மாதமும் கழிக்கப்படுகிறது. நிறுவனமும் சமமான தொகையை பங்களிக்கிறது. மேலும் இந்த பணம் PF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
நிறுவன பங்களிப்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: 3.67% EPF இல் டெபாசிட் செய்யப்படுகிறது. மீதமுள்ள 8.33% ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் (EPS) மற்றும் IDLI (காப்பீடு) இல் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த வருங்கால வைப்பு நிதி உங்கள் பணி ஓய்வு காலத்திற்கானது. இது வயோதிகத்தில் உங்கள் வாழ்க்கையைச் சமாளிக்க உதவுகிறது. இதன் மூலம் ஓய்வுக்குப் பிறகு, உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால், விதிகளின்படி காப்பீட்டு தொகையும் கிடைக்கும்.
ஓய்வூதியப் பலனைப் பெற, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு EPS-க்கு பங்களிப்புகள் தேவை. அதாவது நீங்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். அதிகபட்ச ஓய்வூதிய சேவை 35 ஆண்டுகளாக இருக்க வேண்டும். தற்போது, அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் 15,000 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் அதிகபட்ச ஓய்வூதிய பங்களிப்பு மாதத்திற்கு 1,250 ஆக இருக்கும்.
EPS-ன் கீழ், ஊழியரின் மொத்த சேவை 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே அவர் ஓய்வூதியத்திற்குத் தகுதியுடையவர். இந்தச் சேவை ஒரு நிறுவனத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வேலைகளை மாற்றியிருந்தாலும், உங்கள் UAN அப்படியே இருந்தால், உங்கள் EPS பங்களிப்புகள் தொடர்ந்தால், இரண்டு வேலைகளிலிருந்தும் சேவை காலத்தையும் சேர்த்து 10 ஆண்டுகள் சேவை பரிசீலிக்கப்படும். EPFO விதிகள் 9.5 வருட சேவையை முடித்தவுடன் 6 மாதங்கள் சலுகை காலத்தையும் வழங்குகின்றன. ஆகையால் இது 10 வருட சேவையாகக் கருதப்படுகிறது, இதனால் இந்த சேவை காலம் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையதாகிறது.
ஊழியரின் சேவை காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், EPS நிதியை திரும்பப் பெற அல்லது திட்டச் சான்றிதழைப் பெறும் வசதி ஊழியர்களுக்கு அளிக்கப்படும். படிவம் 10C ஐ நிரப்பி EPS தொகையை திரும்பப் பெறும் பலனைப் பெறலாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒரு திட்டச் சான்றிதழுக்கும் (Scheme Certificate) விண்ணப்பிக்கலாம். திட்டச் சான்றிதழை வைத்திருப்பதன் நன்மை என்னவென்றால், நீங்கள் பின்னர் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தால், உங்கள் முந்தைய சேவையை இணைத்து 10 ஆண்டுகளுக்கான சேவையை சேர்க்கலாம்.
திட்டச் சான்றிதழ் என்பது உங்கள் ஓய்வூதிய சம்பளம் மற்றும் இன்றுவரையிலான சேவையின் அரசாங்கப் பதிவாகும். உங்கள் புதிய வேலையிலிருந்து EPS பங்களிப்பைச் சேர்த்து உங்கள் மொத்த சேவை கணக்கிடப்படுகிறது. 10 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பு நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றால், உங்கள் EPS மெம்பர்ஷிப் முடிவடைகிறது. மேலும் உங்கள் ஓய்வூதிய உரிமைகள் எதிர்காலத்தில் இழக்கப்படலாம்.
- இபிஎஸ் சலுகைகளை பெற, ஊழியர் ஒரு EPF உறுப்பினராக இருக்க வேண்டும்.
- அவர்களின் சேவைக் காலம் குறைந்தது 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
- ஊழியர் 58 வயதை எட்டியிருக்க வேண்டும்.
- 50 வயதை எட்டிய பிறகு அல்லது 58 வயதிற்கு முன் ஓய்வூதியம் பெறும் விருப்பத்தையும் பயன்படுத்தலாம்.
- ஊழியர்கள் 58 வயதை எட்டிய பிறகும் EPS-க்கு தொடர்ந்து பங்களிக்கலாம்.
- ஒரு ஊழியர் 60 வயதில் ஓய்வூதியத்தைத் தொடங்கினால், ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 4% என்ற விகிதத்தில் அதிகரித்த ஓய்வூதியத்தைப் பெறுவார்.
- ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்தினர் ஓய்வூதியத்தைப் பெற உரிமை உண்டு.
இந்த EPS சூத்திரம் நவம்பர் 15, 1995 க்குப் பிறகு ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பொருந்தும். EPS விதிகளின்படி, ஊழியர்கள் 58 வயதிற்குப் பிறகுதான் ஓய்வூதியத்திற்குத் தகுதியுடையவர்கள். இருப்பினும், 58 வயதிற்கு முன் உங்கள் ஓய்வூதியத்தை நீங்கள் திரும்பப் பெற்றால், உங்கள் ஓய்வூதியம் ஒவ்வொரு ஆண்டும் 4% குறைக்கப்படும். அதேபோல், 60 வயதிற்குப் பிறகு உங்கள் ஓய்வூதியத்தை நீங்கள் திரும்பப் பெற்றால், சாதாரண ஓய்வூதியத் தொகையை விட 8% அதிகமாகப் பெறுவீர்கள்.
EPS இல் ஓய்வூதியக் கணக்கீடு, EPS = சராசரி சம்பளம் x ஓய்வூதியம் பெறத்தக்க சேவை / 70 என்ற சூத்திரத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. சராசரி சம்பளம் என்பது அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி ஆகும். இது கடந்த 12 மாதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதிகபட்ச ஓய்வூதியம் பெறத்தக்க சேவை 35 ஆண்டுகள்.
EPS இன் கீழ், தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உள்ளது. அரசாங்கம் அதை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.. இபிஎஸ் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ