EPS ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: 3-7 மடங்கு அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், விரைவில் அறிவிப்பு

EPFO Update: EPS -இன் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை மத்திய அரசு உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவை அடுத்த சில மாதங்களில் அரசு செயல்படுத்தலாம் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 30, 2025, 11:24 AM IST
  • ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்குமா?
  • EPS என்றால் என்ன?
EPS ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: 3-7 மடங்கு அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், விரைவில் அறிவிப்பு

EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் வழங்க தயாராகி வருகிறது. EPS -இன் (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை மத்திய அரசு ரூ.1,000 -இலிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவை அடுத்த சில மாதங்களில் அரசு செயல்படுத்தலாம் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Employee Pension Scheme: EPS என்றால் என்ன?

ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது EPFO ​​(ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) இன் கீழ் இயக்கப்படும் ஒரு அரசுத் திட்டமாகும். இதன் மூலம், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஊழியர்கள் வயதான காலத்தில் வழக்கமான வருமானத்தைப் பெறுகிறார்கள். 

EPF Contribution: இபிஃப் பங்களிப்பு எவ்வளவு?

ஊழியர்கள் மாதா மாதம் இபிஎஃப் கணக்கில், ஊதியத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள். இதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. ஊழியர்கள் அளிக்கும் தொகை முழுதாக இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% EPS-க்கும் 3.67% EPF-க்கும் செல்கிறது.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

ஓய்வூதியத்தை அதிகரிப்பது ஏன் அவசியம்? இன்றைய காலகட்டத்தில் ரூ.1,000 மாத ஓய்வூதியத்தில் வாழ்வது கடினம். பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது - கடந்த 11 ஆண்டுகளில், பணவீக்க விகிதம் (CPI) 72% அதிகரித்துள்ளது. பல ஓய்வுபெற்ற ஊழியர்களும் அமைப்புகளும் நீண்ட காலமாக அரசாங்கத்திடம் ஓய்வூதியத்தை அதிகரிக்கக் கோரி வருகின்றன. 

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்குமா?

எத்தனை பேருக்கு இந்தப் பலன் கிடைக்கும்? தற்போது EPS இன் கீழ் 78.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களில், 36.6 லட்சம் பேர் குறைந்தபட்ச ஓய்வூதியமான வெறும் ரூ.1,000-ஐ சார்ந்துள்ளனர். இந்த ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்பட்டால், கோடிக்கணக்கான முதியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள்

2020 ஆம் ஆண்டில், தொழிலாளர் அமைச்சகம் ரூ.2,000 ஓய்வூதியத்திற்கான பரிந்துரையை அனுப்பியிருந்தது. இது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. 2025 பட்ஜெட்டுக்கு முன்பு, EPS ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.7,500 கோரியிருந்தனர். ஆனால் அதற்கும் எந்த உறுதியான உத்தரவாதமும் பெறப்படவில்லை. ஓய்வூதிய சங்கங்கள் குறைந்தபட்சம் மாத ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், பெரும்பாலானவர்களின் கோரிக்கை ரூ.7,500 மாத ஓய்வூதியத்திற்காகவே உள்ளது. 

Labour Ministry: தொழிலாளர் அமைச்சகம்

தொழிலாளர் அமைச்சகம் தற்போது இந்த திட்டத்தின் கூடுதல் செலவினங்களை பகுப்பாய்வு செய்து வருகிறது. FY24 இல், EPS குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்காக ரூ.1,223 கோடி செலவிடப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 26% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?

ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறைந்த வருமானம் கொண்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும். பாஜக பொருளாதார நிபுணர் சந்தீப் வேம்படி கூறுகையில், “ILO (சர்வதேச தொழிலாளர் அமைப்பு) ஓய்வூதியத்தை பணவீக்கத்துடன் இணைக்க அறிவுறுத்துகிறது. அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை EPS ரூ. 3,000 ஆக மாற்றினால், அது லட்சக்கணக்கான வயதான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். பணவீக்கம் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், இந்த முடிவு அவர்களுக்கு மரியாதைக்குரிய வாழ்க்கையை நடத்த உதவியாக இருக்கும்." என்றார். கூடிய வரையில் தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000 ஆக இருக்கும் மாத ஓய்வூதியம் ரூ.3,000-ரூ.7,5000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க | மே 1 முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி சிலிண்டர், ரயில்வே டிக்கெட், ATM, EPFO.... முழு லிஸ்ட் இதோ

மேலும் படிக்க | அட்சய திருதியை 2025: டிஜிட்டல் தங்கம் வாங்கும் ஐடியா இருக்கா? எக்கச்சக்க தள்ளுபடிகள் இருக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News