)
Tamil Nadu : விவசாயிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டு விவசாயிகள் இப்போது மத்திய அரசின் பிரதமர் உணவுப் பதப்படுத்துதல் திட்டத்தின் கீழ் கரூர் விவசாயிகள் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம். 3 விழுக்காடு வட்டி மானியம் கொடுக்கப்படும். எனவே, இந்த திட்டத்தின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொண்டு, தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ; கரூர் விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு பெறப்படும் வங்கிக் கடன் கூடிய மானிய திட்டங்களுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
உழவர் சந்தையிலிருந்து உலகசந்தையிலான வேளாண் தொழில்களின் தடையில்லா வளர்ச்சிக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தொலை நோக்குடன் கூடிய நீண்டகால திட்டங்களை செம்மையுடன் செயல்படுத்தி வருகின்றது. இந்நோக்கத்தின் அடிப்படையில் வேளாண்மை உட்கட்டமைப்புகளை பலப்படுத்துவதுடன் அறுவடைக்குபின் ஏற்படும் இழப்புகளை குறைத்து பல்வேறு விநியோகத் தொடர்சங்கிலியினை பலப்படுத்தி பயன்காணும் வகையில் வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு பெறப்படும் வங்கிக் கடனுடன் கூடிய மானியத் திட்டங்களுக்கு வேளாண் உட்கட்டமைப்புநிதி மூலம் அதிகபட்சமாக 3 சதவீதம் வரைவட்டி மானியம்
வழங்கப்படஉள்ளது.
திட்டத்தின் நோக்கங்கள்
1. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறசெய்திடல், அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினை குறைத்தல், விவசாயிகளின் சந்தைக்கான அணுகுதலை எளிதாக்குதல் மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துதல்.
2. தமிழ்நாட்டில் இத்திட்டமானது 2020-2021 முதல் 2032-2033 ஆம் ஆண்டுவரை 13 ஆண்டுகளில் ரூ.5,990 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு 2025-2026 ஆம் ஆண்டு ரூ.78 கோடி இலக்கீடு பெறப்பட்டுள்ளது.
3. இந்ததிட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
4. 2025-2026 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்திற்குரூ.78 கோடி இலக்கீடு பெறப்பட்டுள்ளது ஒரு தகுதி வாய்ந்த நிறுவனம் ஒரு இடத்தில் அல்லது பல்வேறு இடங்களில் திட்டங்களை செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடி வரை கடன் பெற தகுதியானவை.
5. துவக்க நிறுவனம் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக 25 திட்டங்களுக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும். விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருட்கள் சந்தையினை அடையும் வகையில் உள்ள பல்வேறு விநியோக தொடர் மேலாண்மை திட்டங்கள் அனைத்தும் இதன் மூலம் பயன் பெற தகுதி உள்ளவை.
தகுதியான திட்டங்கள்:
அறுவடைக்குப்பின் மேலாண்மை திட்டங்கள்
இந்த திட்டத்தின் கீழ் மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர்பு சேவைகள், சேமிப்புகிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்தும் இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள், மின்னனு வணிக மையங்கள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிரி உற்பத்தி நிலையங்கள். நவீன துல்லிய பண்ணையத்துக்கான உட்கட்டமைப்புகள், வேளாண் இயந்திர வாடகை மையம் மற்றும் உயர் தொழில்நுட்ப மையம், சூரிய ஒளியில் இயங்கக்கூடிய மின்மோட்டார் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளலாம்.
தகுதியான பயனாளிகள்
இந்ததிட்டங்களில் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் (PACS), சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்கள் (MCS),உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOS), சுய உதவிக் குழுக்கள் (SHGS), விவசாயிகள். கூட்டு பொறுப்புக் குழுக்கள் (JLGS) பல்நோக்கு கூட்டுறவுசங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர் மத்திய மாநில அரசு உதவி பெறும் பொது தனியார் கூட்டுதிட்டங்கள், தனிப்பட்ட வணிக உரிமையாளர்கள், அரவை உரிமையாளர்கள். ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். மேலும், பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுனங்களுக்கான திட்டத்தின் கீழ் வங்கிகடன் பெற்று 35 சதவீதம் வரை பின்னேற்பு மானியம் பெற்ற தகுதியான நபர்கள் வட்டிமானியம் 3 சதவீதம் வரை பெற தகுதியுடையவர் ஆவார்கள்.
இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
இந்த திட்டம் குறித்து https://agrinfra.dac.gov.inஎன்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ddab.karur1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வேளாண்மை துணை இயக்குநார்(வேளாண் வணிகம்) கரூர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துகொள்ளப்படுகிறது.
வேளாண் விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதுடன் கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்பதால், இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ