E Shram Card: தினக்கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், வீட்டு உதவியாளர்கள் அல்லது தொழிற்சாலைகளில் சிறிய அளவிலான பணிகளை செய்யும் தொழிலாளர்கள் என அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு திட்டத்தின் மூலம் இ-ஷ்ரம் அட்டை என்ற ஒரு அட்டையை வழங்குகின்றது.
E-Shram Card Pension Yojana: இ-ஷ்ரம் கார்டு ஓய்வூதிய திட்டம்
இந்த இ-ஷ்ரம் அட்டையை உருவாக்கி, நீங்கள் அரசாங்கத் திட்டங்களில் பலன்களைப் பெறலாம். இதுமட்டுமல்லாமல், இந்த அட்டையின் மூலம் 60 வயதிற்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.3000 ஓய்வூதியமும் கிடைக்கும். இந்த கார்டை உருவாக்க, எங்கும் வரிசையில் நிற்கவோ, அரசு அலுவலகங்களைச் சுற்றி வரவோ அவசியம் இல்லை. அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா முயற்சியில் அனைத்தும் சுலபமாகிவிட்டது. இந்த இ-ஷ்ரம் அட்டையை உங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாகப் பெறலாம்.
What is e-Shram card? இ-ஷ்ரம் அட்டை என்றால் என்ன?
இ-ஷ்ரம் அட்டை என்பது அமைப்புசாரா துறையில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் அடையாளமாகும். அதாவது, எந்தவொரு நிறுவனத்திலோ அல்லது அலுவலகத்திலோ வேலை செய்யாமல், நாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்த இரவும் பகலும் கடினமாக உழைப்பவர்களுக்காக அரசாங்கம் இந்த அடையாள அட்டையை உருவாக்கியுள்ளது. இதில் பயனாளியின் பெயர், வேலை, அனுபவம், திறன்கள் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும். இதன் மூலம், காப்பீடு, ஓய்வூதியம், திறன் பயிற்சி மற்றும் தேவைப்படும் நேரங்களில் நிதி உதவி போன்ற பல்வேறு திட்டங்களின் நேரடிப் பலன்களை அரசாங்கம் பயனாளிகளுக்கு வழங்குகிறது.
Unorganised Sector Employees: அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கான பிரத்யேகத் திட்டம்
16 வயது முதல் 59 வயதுக்குள் உள்ள, அமைப்புசாரா பணிகளில் பணிபுரியும் நபர்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். காய்கறி / பழங்களை விற்பவர்கள், பிளம்பர், டிரைவர், ஃபிளிப்கார்ட் அல்லது அமேசான் போன்ற தளங்களில் டெலிவரி வேலை செய்பவர்கள் என இவர்கள் அனியவரும் இந்த திட்டத்தில் சேரலாம். இந்த அட்டை உங்கள் அடையாளமாக மாறுவது மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்கான பாதுகாப்பையும் வழங்கும்.
வீட்டிலிருந்தே இ-ஷ்ரம் அட்டையை உருவாக்குவது எப்படி?
- முதலில் உங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் e-Shram இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://eshram.gov.in -க்கு செல்லவும்.
- “REGISTER on e-SHRAM” என்ற விருப்பம் இருக்கும், அதைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, திறக்கும் பக்கத்தில், ஆதார் மற்றும் கேப்ட்சாவுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை நிரப்ப வேண்டும்.
- பின்னர் நீங்கள் EPFO மற்றும் ESIC இல் உறுப்பினரா இல்லையா என்று கேட்கப்படும், அதில் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று பதிலளிக்கவும்.
- இதற்குப் பிறகு, உங்கள் மொபைலில் ஒரு OTP வரும்.
- அதை நிரப்பிய பிறகு உங்கள் ஆதார் சரிபார்ப்பு செய்யப்படும்.
- அடுத்த கட்டத்தில் உங்கள் முகவரி, கல்வி தொடர்பான தகவல்கள், உங்கள் வேலை, திறன் ஆகிய தகவல்களை நிரப்ப வேண்டும்.
- அதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கின் விவரங்களை உள்ளிட்டு, நீங்கள் சரியான தகவலைக் கொடுத்ததாக ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும்.
- பின்னர் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து, மற்றொரு OTP ஐ உள்ளிட்ட பிறகு, உங்கள் e-Shram அட்டை உருவாக்கப்படும்.
- அதன் பிறகு அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
E Shram Card: இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?
இந்த அட்டையை உருவாக்க, இரண்டு முக்கியமான விஷயங்கள் மட்டுமே தேவை - உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு.
இ-ஷ்ரம் அட்டையின் நன்மைகள் என்ன?
- இந்த திட்டட்தில் சேருவதன் மூலம், 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 ஓய்வூதியம் பெறுவீர்கள்.
- இது பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனாவின் கீழ் வழங்கப்படுகிறது.
- விபத்தால் பகுதி ஊனம் ஏற்பட்டால், அரசாங்கம் ரூ.1 லட்சம் வரை உதவி வழங்குகிறது.
- மேலும் தொழிலாளி ஏதேனும் காரணத்தால் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வரை உதவி கிடைக்கிறது.
இந்த திட்டம் பற்றி அறிய கூடுதல் தகவல் அல்லது உதவி தேவைப்பட்டால், https://findmycsc.nic.in/csc/ -க்கு சென்று அருகிலுள்ள CSC (பொது சேவை மையம்) ஐக் கண்டறியலாம். அங்கிருந்து இ ஷ்ரம் அட்டையையும் உருவாக்கிக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









