)
Pension Scheme For Senior Citizens: வயதான காலத்தில் அனைவருக்கும் நிதி ரீதியான ஆதரவு தேவைப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு மாதா மாதம் ஒரு நிலையான வருமானம் இருந்தால், அவர்களுக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். இதற்கு வழிவகை செய்யும் வகையில் மத்திய அரசு பல வித ஓய்வூதியத் திட்டங்களை நடத்தி வருகின்றது. அதில் ஒரு முக்கியமான மற்றும் பிரபலமான திட்டம்தான் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா திட்டம்.
மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: ரூ.3,000 மாத ஓய்வூதியம்
இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களது சிறிய முயற்சி மற்றும் அரசாங்கத்தின் உதவியுடன், ஒவ்வொரு மாதமும் ரூ.3000 பெறலாம். அரசாங்கத்தின் இந்த சிறப்புத் திட்டம் உள்ளது, முதுமையில் நிதி தன்னிறைவை உறுதி செய்கிறது. அதாவது 60 வயதிற்கு பிறகு வழக்கமாக ஏற்படும் சார்பு நிலையை தவிர்க்க இது உதவுகிறது.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா
சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 2019 இல், மத்திய அரசு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டம் குறிப்பாக அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்கானது. தெரு வியாபாரிகள், ஓட்டுநர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், பீடி தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு முதுமையில் ஆதரவில்லாத கடுமையான சிக்கல் ஏற்படுகின்றது. சம்பாதிக்கும் வயது முடிந்து உடல் பலவீனமடைந்த பிறகு, அவர்களுக்கு வருமான ஆதாரம் இருப்பதில்லை. இதுவரை, நாடு முழுவதும் 46,29,664 க்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
அமைப்புசாரா துறை ஊழியர்கள்
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (PM-SYM) திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பிறகு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் ரூ. 15,000 அல்லது அதற்கும் குறைவான மாத வருமானம் உள்ள தொழிலாளர்களுக்கானது. அதாவது, 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள், மாத வருமானம் ரூ. 15,000 அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்கள், இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.
PM-SYM: இந்த திட்டத்தில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்ய வேண்டும்?
தொழிலாளர்கள் தங்களது வயதுக்கு ஏற்ப மாதாந்திர பங்களிப்பைச் செய்ய வேண்டும். தொழிலாளி பங்களிக்கும் அதே அளவிலான தொகையை அரசாங்கமும் கணக்கில் டெபாசிட் செய்யும். உதாரணமாக, தொழிலாளி மாதத்திற்கு ரூ.500 டெபாசிட் செய்தால், அரசாங்கமும் அதன் சார்பில் ரூ.500 டெபாசிட் செய்யும். அதாவது, ஒவ்வொரு மாதமும் கணக்கில் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும்.
மத்திய அரசு ஓய்வூதியத் திட்டங்கள்
PM SYM திட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஒருவர் எவ்வளவு சீக்கிரம் இதில் சேருகிறாரோ, அவ்வளவு அதிகமான நன்மைகள் கிடைக்கும். 18 வயது நிரம்பிய ஒருவர் இதில் சேர்ந்தால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.55 மட்டுமே செலுத்த வேண்டும், அதே சமயம் 40 வயது நிரம்பியவருக்கு, மாதாந்திர பங்களிப்பு ரூ.200 ஆக இருக்கும். மாதாந்திர பங்களிப்பு பயனாளியின் வயதைப் பொறுத்தது. இதன் வரம்பு ரூ.55 முதல் ரூ.200 வரை இருக்கும். இந்தத் திட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.
PM SYM பங்களிப்பு விவரம் இதோ:
18 வயதில்: ரூ.55/மாதம்
29 வயதில்: ரூ.100/மாதம்
40 வயதில்: ரூ.200/மாதம்
இந்தத் தொகையை 60 வயது வரை டெபாசிட் செய்ய வேண்டும்.
Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana: இந்தத் திட்டத்தின் பலனை எவ்வாறு பெறுவது?
இந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால், அருகிலுள்ள CSC அல்லது ஆன்லைன் போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் சேர, ஆதார் அட்டை மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்கு மட்டுமே தேவை. பிரதம மந்திரி ஜன் தன் யோஜனாவின் கீழ் திறக்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் இந்தத் திட்டத்திற்கு செல்லுபடியாகும். உங்கள் கணக்குடன் IFSC தகவலை வழங்கினால் போதும். செயல்முறை முடிந்ததும், நீங்கள் சி.எஸ்.சி-யிலிருந்தே ஷ்ரம் யோகி ஓய்வூதியக் கணக்கு எண் மற்றும் ஷ்ரம் யோகி அட்டையைப் பெறுவீர்கள்.
குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும்
பயனாளி இறந்தால், அவரது வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியத் தொகையில் 50% குடும்ப ஓய்வூதியமாகப் கிடைக்கும். பயனாளி 10 ஆண்டுகளுக்குள் திட்டத்திலிருந்து வெளியேறினால், அவரது பங்களிப்பு சேமிப்பு வங்கி வட்டி விகிதத்துடன் திரும்பப் பெறப்படும். திட்டத்தில் சேர்ந்த பிறகு, பயனாளிக்கு ஒரு ஷ்ரம் யோகி அட்டை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் எல்.ஐ.சி மற்றும் சி.எஸ்.சி மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://maandhan.in/ ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ