How Can Claim PF Advance Online: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து அவசர தேவைக்காக பிஎப் பணத்தில் இருந்து அட்வான்ஸ் வாங்குவது என்பது பலருக்கு பெரும் சிக்கலாக இருந்து. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்களால் பிஎஃப் அட்வான்ஸ் பெறுவது சுலபமான விஷயமாக மாறிவிட்டது. எவ்வளவு பிஎஃப் அட்வான்ஸ் பெற முடியும்? பிஎஃப் அட்வான்ஸ் பெற என்னென்ன செய்ய வேண்டும்? பிஎஃப் அட்வான்ஸ் யாருக்கு கிடைக்கும்? பிஎஃப் அட்வான்ஸ் விதி என்ன? போன்ற விவரங்கள் பற்றி பார்ப்போம்.
இந்தியாவில் கோடிக்கணக்கான ஊழியர்கள் பிஎஃப் திட்டத்தின் கீழ் தங்கள் எதிர்காலத்துக்கான பணத்தை சேமித்து வருகிறார்கள். அப்படி சேமித்து வரும் நிலையில், சில சமயங்களில் அவசர தேவைகளுக்காக அந்த பிஎப் பணத்தில் இருந்து அட்வான்ஸ் வாங்குவது உண்டு. ஆனால் அட்வான்ஸ் கேட்டு விண்ணப்பவர்களின் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை இருந்தது. அதற்கு காரணம் பிஎப் தொகையில் இருந்து அட்வான்ஸ் வாங்க, முன்பு வங்கி கணக்கின் காசோலை அதாவது கேன்சல் செக் அல்லது பாஸ்புக்கை அப்லோட் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. தற்போது அந்த விதி நீக்கப்பட்டு உள்ளது. இபிஎஃப்ஓ அமைப்பு இந்த கட்டுப்பாட்டை நீக்கி இருப்பது பலருக்கு நிவாரணமாக இருக்கிறது.
பிஎப் பணம் நேரடியாக ஆதாரடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதால், காசோலையின் தேவை இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. இது நல்ல விஷயம் தான். இதனால் ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
அதேநேரம் பிஎப் தொகையில் அட்வான்ஸ் பெறுவதற்கு மிக முக்கிய விசியமாக பார்க்கப்படுவது அது உங்கள் பெயர் தான். பிஎப் கணக்கில் உள்ள பெயர், ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்குகளில் உள்ள பெயர் இவையெல்லாம் ஒரே மாதிரியான ஸ்பெல்லிங் மற்றும் இனிஷியலில் இருக்க வேண்டும். இதில் ஏதாவது மிஸ்மேட்ச் இருந்தால் உங்கள் பிஎப் அட்வான்ஸ் கிளைம் ரிஜெக்ட் ஆக வாய்ப்பு இருக்கிறது.
ஒருவர் பிஎப் அட்வான்ஸ் எவ்வளவு எடுக்க முடியும் எனப் பார்த்தால், உங்கள் பிஎஃப் கான்ட்ரிபியூஷனை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது உங்கள் எம்ப்ளாய் கான்ட்ரிபியூஷன் தொகைதான் முக்கியம். அந்த தொகையின் 50% அல்லது அதற்கும் குறைவாகதான் அட்வான்ஸ் கோர முட்யும். உதாரணமாக உங்கள் கான்ட்ரிபியூஷன் தொகை 60,000 ரூபாய் இருக்கிறது என்றால், அதில் அதிகபட்சமாக 50 சதவீதம், அதாவது ரூ. 30,000 மட்டும் தான் அட்வான்சாக கேட்க முடியும். அதற்கு மேல் கேட்டால் அந்த விண்ணப்பம் 15 அல்லது 20 நாட்களில் நிராகரிக்கப்படும். எனவே உங்கள் பிஎஃப் பாஸ்புக்கை பார்த்து எவ்வளவு தொகை உள்ளது. எவ்வளவு கேட்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் பிஎப் அட்வான்ஸ் எந்த காரணத்துக்காக வேண்டும் என்பது மிக முக்கியம். மருத்துவ அவசரத்திற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் அட்வான்ஸ் வாங்கிக்கொள்ளலாம். அதற்கு கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற காரணங்களுக்கு அட்வான்ஸ் பெற குறைந்தது ஐந்து வருடங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.
இதில் இன்னொரு முக்கியமான அம்சம், தற்போதுள்ள நிறுவனத்தின் கீழ் அனைத்து பிஎப் பணம் இருக்க வேண்டும். அதாவது பழைய நிறுவனத்தில் பணிபுரிந்து இருந்தால், அந்த பிஎப் தொகைகள் எல்லாம் நடப்பு அக்கவுண்ட்ற்கு டிரான்ஸ்பராகி இருக்க வேண்டும். ஒருவேளை அந்த பணம் இன்னும் டிரான்ஸ்பர் ஆகவில்லை என்றால், விண்ணப்பம் ரிஜெக்ட் செய்யப்படும்.
நீங்கள் பிஎப் அட்வான்ஸ் பணம் பெற விண்ணப்பிக்கும் போது, அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் எந்த ரிஜெக்ஷனும் இல்லாமல், உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக பிஎப் பணம் வந்து சேரும். எனவே இனி பிஎப் அட்வான்ஸ் எடுக்கிறது சுலபமான விஷயமாக மாறிவிட்டது.
மேலும் படிக்க - EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் மெகா ஏற்றம்
மேலும் படிக்க - EPFO முறையில் அதிரடி மாற்றம்! லட்சக்கணக்கான ஊழியர்கள் மகிழ்ச்சி
மேலும் படிக்க - EPF Claim நிராகரிக்கப்படாமல் இருக்க... கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ