)
8th Pay Commission: அக்டோபர் 1 ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 3% அதிகரிக்கப்பட்டு 58% ஆக உயர்ந்துள்ளன. அடுத்ததாக ஜனவரி 2026 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய பேச்சும் தொடங்கிவிட்டது. ஏனெனில், ஜனவரி 2026 -இன் டிஏ உயர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஜனவரி 2026 -இல் அகவிலைப்படி உயர்வு ஆனவுடன், அகவிலைப்படி தொகை 8வது ஊதியக் குழுவுடன் நேரடியாக இணைக்கப்படும். அதாவது அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். ஒரு வகையில், இது அடுத்த குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும். இதற்கிடையில், தொழிலாளர் பணியகம் ஆகஸ்ட் 2025க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI-IW) தரவை வெளியிட்டுள்ளது. இது மகிழ்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.
தொழிலாளர் பணியகத்தின் AICPI-IW தரவுகளின்படி, குறியீடு 0.6 புள்ளிகள் அதிகரித்து 147.1 ஆக உள்ளது. இது ஜூலை 2025 இல் 146.5 ஆக இருந்தது. இதன் பொருள் பணவீக்க அழுத்தங்கள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. மேலும் வரும் மாதங்களுக்கான அகவிலைப்படி கணக்கீடுகளில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2025க்கான அகவிலைப்படியை 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 58% அகவிலைப்படியைப் பெறுகிறார்கள்.
ஆகஸ்ட் 2025 வரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில், பின்வரும் மதிப்பீடுகள்:
- டிசம்பர் 2025 வரை குறியீட்டு எண் நிலையானதாக இருந்தால், ஜனவரி 2026 இல் அகவிலைப்படி/வளர்ச்சி விகிதம் 60% ஐ எட்டும்.
- தற்போதைய கணக்கீடுகளின்படி, 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அகவிலைப்படி 58.94% இலிருந்து 60.12% ஆக அதிகரிக்கக்கூடும்.
- இதன் பொருள் ஊழியர்கள் ஜனவரி 2026 முதல் 2% அல்லது அதற்கு மேற்பட்ட டிஏ நன்மைகளைப் பெறுவார்கள்.
ஜனவரி 2026 -இன் அகவிலைப்படி உயர்வு வெறும் சாதாரண உயர்வு அல்ல. இந்த எண்ணிக்கை 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான அடிப்படையை உருவாக்கும். புதிய சம்பளக் குழு அமல்படுத்தப்படும் போதெல்லாம், அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு, புதிய அடிப்படை ஊதியம் அதற்கேற்ப தீர்மானிக்கப்படுகிறது.
ஓய்வூதியதாரர்களுக்கும் ஜனவரி 2026 மிக முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அகவிலை நிவாரணம் 60% ஆக உயர்ந்தால், அது நேரடியாக அவர்களின் ஓய்வூதியத்தை அதிகரிக்கும். மேலும், 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டவுடன் அடிப்படை ஓய்வூதியமும் மீண்டும் நிர்ணயிக்கப்படும். அதாவது, ஓய்வு பெறும் தருவாயில் உள்ள ஊழியர்களுக்கு, இந்த மாற்றம் அவர்களின் நிதித் திட்டமிடலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ