)
EPFO Latest Update: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
- இபிஎஃப்ஓ இறப்பு நிவாரண நிதியின் (Death Relief Fund) கீழ் கிடைக்கும் கருணைத் தொகையை ரூ.15 லட்சமாக உயர்த்தியுள்ளது.
- முன்னர் இந்தத் தொகை ரூ.8.8 லட்சமாக இருந்தது.
- புதிய முறை ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
- அதாவது ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு ஒரு ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ரூ.8.8 லட்சத்திற்குப் பதிலாக ரூ.15 லட்சம் கிடைக்கும்.
- இறப்பு நிவாரண நிதியின் கீழ் இறந்த ஊழியரின் குடும்ப உறுப்பினருக்கு EPFO இந்த கருணைத் தொகையை வழங்கும்.
- பொதுவாக இபிஎஃப் ஊழியரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு இதற்கு உரிமையுடையவராக இருப்பார்.
- இந்தத் தொகை EPFO வின் பணியாளர் நல நிதியிலிருந்து வழங்கப்படும்.
- இந்த முடிவு மத்திய அறங்காவலர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அறங்காவலர் குழு EPFO வின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உச்ச அமைப்பாகும். இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.
EPFO இந்த தொகையை ஒரு முறை மட்டும் அதிகரிக்கவில்லை. மாறாக, இது தொடர்ந்து அதிகரிக்கும். ஏப்ரல் 1, 2026 முதல், கருணைத் தொகையை ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரிக்க EPFO முடிவு செய்துள்ளது. இதன் பொருள், இபிஎஃப் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு வரும் காலங்களில் அதிக நிதி உதவி கிடைக்கும்.
EPFO ஆகஸ்ட் 19, 2025 அன்று வெளியிடப்பட்ட அதன் சுற்றறிக்கையில், “மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் மற்றும் மத்திய பணியாளர் நலக் குழுவின் ஒப்புதலுடன், இறப்பு நிவாரண நிதியின் கீழ் கருணைத் தொகை ரூ.8.80 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை பணியாளர் நல நிதியிலிருந்து இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்றும் சுற்றறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
EPFO அனைத்து EPF உறுப்பினருக்கும் இந்த வசதியை செயல்படுத்தவில்லை. மாறாக, இது EPFO -வின் மத்திய வாரியத்துடன் (CBT) தொடர்புடைய ஊழியர்கள்/உறுப்பினர்களுக்கானது. அதாவது, EPFO அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அல்லது CBT உடன் நேரடியாக தொடர்புடைய ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
PF கணக்கு வைத்திருக்கும் சாதாரண இபிஎஃப் உறுப்பினர்கள் (தனியார் துறை நிறுவன ஊழியர்கள் போன்றவர்கள்) இந்த முடிவின் பலனைப் பெற மாட்டார்கள். இது EPFO இன் மத்திய வாரிய ஊழியர்களுக்கு அவர்களின் மரணத்திற்கு பிறகு வழங்கப்படும் மரண நிவாரண நிதியில் அதிகரிப்பு மட்டுமே ஆகும்.
EPFO சமீபத்தில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வசதியை வழங்குவதற்கான பிற முடிவுகளையும் எடுத்துள்ளது.
1. இறப்பு கோரிக்கை செயல்முறை எளிதாக்கப்பட்டது
முன்னர், ஒரு ஊழியர் இறந்து மைனர் குழந்தைகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட வேண்டியிருந்தால், பாதுகாவலர் சான்றிதழ் தேவைப்பட்டது. இப்போது இந்த விதி நீக்கப்பட்டுள்ளது. அதாவது பணத்தை நேரடியாக குழந்தைகளின் கணக்கிற்கு மாற்றலாம்.
2. ஆதார் இணைப்பு செயல்முறை எளிதானது
ஆதாரை தங்கள் UAN (யுனிவர்சல் கணக்கு எண்) உடன் இணைக்காத அல்லது ஆதார் விவரங்கள் தவறாக உள்ள உறுப்பினர்களுக்கு கூட்டு அறிவிப்பு செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளதாக EPFO கூறியுள்ளது. இது லட்சக்கணக்கான PF சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும். ஏனெனில் முன்பு இந்த செயல்முறை நீண்டதாகவும் சிக்கலானதாகவும் கருதப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ