)
EPFO Latest News In Tamil: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) அதன் உறுப்பினர்களுக்கு முன்பணம் எடுக்கும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. அதாவது சொல்லப்போனால் தொழிலாளர்களின் சிக்கலை கருத்தில் கொண்டு இரண்டு அம்சங்களை மிகவும் எளிதுபடுத்தப்பட்டு உள்ளது. காசோலைப் பிரதியின் படத்தை பதிவேற்றும் நீக்கம் மற்றும் வங்கிக் கணக்குகளை யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) உடன் இணைப்பதற்கான செயல்முறைக்கு நிறுவனத்தின் ஒப்புதல் தேவையை நீக்கியுள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.
இனி பிஃப் பணம் எடுப்பதற்கு காசோலைப் பிரதி தேவையில்லை
இபிஎஃப்ஓ (EPFO) செய்த முதல் மாற்றம் என்னவென்றால், பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் செயல்முறையின் போது காசோலையை பதிவேற்ற வேண்டும் என்ற விதி தற்போது நீக்கப்பட்டுள்ளது. இனி காசோலையின் புகைப்படத்தையோ அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக்கின் புகைப்படத்தையோ பதிவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்பு ஆன்லைனில் கோரிக்கையை தாக்கல் செய்யும் போது காசோலை பிரிதி அல்லது சரிபார்க்கப்பட்ட வங்கி பாஸ்புக்கின் படங்களை பதிவேற்ற வேண்டியது அவசியமாக இருந்தது. தற்போது அது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆரம்பத்தில் KYC அப்டேட் செய்த சில உறுப்பினர்களுக்கு பைலட் அடிப்படையில் தளர்த்தப்பட்டது. அதன்மூலம் மே 28, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தற்போப்து வரை 1.7 கோடி EPF உறுப்பினர்களுக்கு பயனளித்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது காசோலைப் பிரதி தேவையில்லை என்ற அம்சம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இருப்பதால், இனி அனைத்து உறுப்பினர்களுக்கும் பிஃப் பணம் எடுப்பதற்கு காசோலைப் பிரதி தேவையில்லை என்ற அம்சம் நீட்டிக்கப்பட்டு உள்ளது,
காசோலைப் பிரதி தேவையை நீக்குவதன் மூலம் சுமார் 6 கோடி உறுப்பினர்களுக்கு உடனடியாக நன்மைகள் பெறுவார்கள். இனி எளிதாக பிஃப் பணம் பெறலாம்.
பிஃப் பணம் எடுக்க நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை
ஓய்வூதிய நிதி அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு மாற்றம், வங்கிக் கணக்கு விவரங்களை யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் இணைப்பதற்கு நிறுவனத்தின் ஒப்புதல் தேவையை நீக்கி உள்ளது. அதாவது வங்கிக் கணக்குகளை UAN உடன் இணைப்பதற்கான செயல்முறையை நெறிப்படுத்த இந்த ஒப்புதலின் தேவை நீக்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம் தற்போது ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பிஎஃப் பணத்தை தடையின்றி டெபாசிட் செய்ய, தனது வங்கிக் கணக்கை யுஏஎன் எண்ணுடன் இணைக்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை எனக் கூறப்பட்டு இருப்பதால், இதுவரை நிலுவையில் இருக்கும் வங்கிக் கணக்குகளை இணைப்பதற்கான கோரிக்கைகள் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். இதன் காரணமாக தாமதம் ஆவதில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ