PM SVANidhi திட்டம்: தெருவோர வியாபாரிகளுக்கு குட் நியூஸ், ரூ.50,000 கடன், ஏகப்பட்ட சலுகைகள்

PM Svanidhi Yojana: பிஎம் ஸ்வாநிதி திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? எப்போது தொடங்கப்பட்டது? அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 11, 2025, 01:08 PM IST
  • பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டம்: இதன் நன்மைகள் யாருக்கெல்லாம் கிடைக்கும்?
  • இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
  • பிஎம் ஸ்வாநிதி திட்டத்தில் கடன் எப்படி அளிக்கப்படுகின்றது?
PM SVANidhi திட்டம்: தெருவோர வியாபாரிகளுக்கு குட் நியூஸ், ரூ.50,000 கடன், ஏகப்பட்ட சலுகைகள்

PM Svanidhi Scheme: மோடி அரசு இந்தியா முழுவதும் ஒவ்வொரு மட்டத்திலும் மக்களிடையே சொந்தத் தொழில் செய்து தொழில்முனைவோர் ஆவதற்கான உணர்வை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. தொழில்முனைவோர் உணர்வை வளர்த்து ஊக்குவிக்கவும், தேவைப்படும்போது தேவையான நிதி உதவியை வழங்கவும் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Add Zee News as a Preferred Source

பிஎம் ஸ்வாநிதி திட்டம்

சொந்த தொழில் செய்யும் மக்களை மேம்படுத்தி, அவர்களை ஆதரித்து, நிதி உதவியை அளிக்க அரசு பல திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் ஒரு முக்கியமான திட்டமாக உள்ள பிஎம் ஸ்வாநிதி திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டம் குறிப்பாக தெருவோர வியாபாரிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோடி அரசு தெரு வியாபாரிகளுக்கான ஒரு நுண் கடன் திட்டமாக இதை நடத்தி வருகிறது. இது பிரதம மந்திரி தெரு விற்பனையாளரின் ஆத்மநிர்பர் நிதி என்றும் அழைக்கப்படுகிறது. 

PM SVANidhi திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் ஜூன் 1, 2020 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் பிஎம் ஸ்வநிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தெரு வியாபாரிகளுக்கு மானிய விலையில் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

- பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் ரூ.15,000, ரூ.25,000 மற்றும் ரூ.50,000 வரை பிணையமில்லாத பணி மூலதனக் கடன்கள் வழங்கப்படுகின்றன. 
- இந்தத் திட்டம் கடனைத் தொடர்ந்து திருப்பிச் செலுத்துவதற்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி மானியத்தையும், பரிந்துரைக்கப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு ஆண்டுக்கு ரூ.1,600 வரை கேஷ்பேக்கையும் வழங்குகிறது. 

- மேலும், முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த எந்த கட்டணமும் விதிக்கப்படாது.

பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டம்: இதன் நன்மைகள் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் (ULBs) வழங்கப்பட்ட விற்பனைச் சான்றிதழ்/அடையாள அட்டை வைத்திருக்கும் தெருவோர விற்பனையாளர்கள் இந்த கடனைப் பெறலாம். கணக்கெடுப்பில் அடையாளம் காணப்பட்ட ஆனால் விற்பனைச் சான்றிதழ்/அடையாள அட்டை வழங்கப்படாத விற்பனையாளர்களுக்கு, ஐடி அடிப்படையிலான தளம் மூலம் தற்காலிக விற்பனைச் சான்றிதழ் உருவாக்கப்படும். 

ULB தலைமையிலான அடையாள கணக்கெடுப்பில் இருந்து விடுபட்ட தெரு வியாபாரிகள் அல்லது கணக்கெடுப்பு முடிந்த பிறகு விற்பனையைத் தொடங்கியவர்கள் மற்றும் ULB/நகர விற்பனைக் குழுவால் (TVC) அந்த வகையில் பரிந்துரை கடிதம் (LoR) வழங்கப்பட்டவர்கள் ஆகியோரும் இதைப் பெறலாம். ULBகளின் புவியியல் வரம்புகளில் விற்பனை செய்யும் சுற்றியுள்ள மேம்பாடு/நகர்ப்புற/கிராமப்புறப் பகுதிகளின் விற்பனையாளர்கள் மற்றும் ULB/TVC ஆல் அந்த வகையில் பரிந்துரை கடிதம் (LoR) வழங்கப்பட்டவர்களும் இந்த திட்டத்தின் நன்மைகளை பெற தகுதியுடையவர்கள். 

PM Swanidhi Yojana: இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

- தெருவோர வியாபாரிகள் நேரடியாக PM SWANidhi போர்ட்டலில் சென்று அதில் உள்ள செயல்முறையின் படி இந்த திட்டத்தில் சேரலாம்.

- அல்லது தங்கள் இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பொது சேவை மையம் (CSC) மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

பிஎம் ஸ்வாநிதி திட்டத்தில் கடன் எப்படி அளிக்கப்படுகின்றது?

கடன்கள் திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், NBFCகள், நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழு (SHG) வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றன. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) செயல்படுத்தல் கூட்டாளியாக செயல்படுகிறது.

பிஎம் ஸ்வநிதி திட்டம்

விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்க முதலில் ஆதார் மற்றும் வாக்காளர் ஐடி உள்ளிட்ட அடிப்படை KYC சம்பிரதாயங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஓட்டுநர் உரிமம், MGNREGA அட்டை அல்லது PAN போன்ற பிற ஆவணங்களையும் இதற்கு பயன்படுத்தலாம். விற்பனையாளர்கள் நாடு முழுவதும் உள்ள பொது சேவை மையங்கள் (CSCகள்) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | PF உறுப்பினர்கள் அதிக பங்களிப்பு மூலம் EPS ஓய்வூதியத்தை அதிகரிக்க முடியுமா? பதில் இதோ

மேலும் படிக்க | தீபாவளியில் அட்டகாசமான சலுகை! பிரதமரின் பரிசாக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைகிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News