இளைஞர்களுக்கு குட் நியூஸ்! 8 ஆம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu free skill training 2025 : 8 ஆம் வகுப்பு முதல் பட்ட படிப்புகள் வரை முடித்திருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 20, 2025, 06:08 PM IST
  • தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு குட் நியூஸ்
  • இலவச சுய தொழில் பயிற்சி வழங்கும் அரசு
  • 8 முதல் பட்ட படிப்பு முடித்தவர்கள் விரை விண்ணப்பிக்கலாம்
இளைஞர்களுக்கு குட் நியூஸ்! 8 ஆம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu free skill training 2025 : படித்து வேலையில்லாமல் இருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களை சுய தொழிலில் ஈடுபட வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட அளவில் இளைஞர்களுக்கு பல தொழில்கள் குறித்த சுய தொழில் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அந்தவகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை அம்மாவட்ட இளைஞர்களுகாக வெளியிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் (RSETI) மூலம் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டங்களில் பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

கிராமப்புற இளைஞர்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில் முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி மையங்களில் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான, குறிப்பாக செல்போன் பழுது நீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் 18-45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதியாக குறைந்தது 8-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. 8ஆம் வகுப்பு முதல், ITI, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு வரை படித்தவர்களுக்கு தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறைந்தது 10 நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கள் வரை உள்ள பயிற்சிக் காலத்தின் போது மதிய உணவும், காலை மற்றும் மாலை வேலைகளில் சிற்றுண்டி மற்றும் தேனீர் போன்றவை இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சியாளர்களுக்கு சீருடை, பாடப் பொருட்கள், தொழில் முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகள் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட சுய தொழில் குறித்து பயிற்சி அளிப்பதுடன் உகந்த தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், தொழில் முனைவோருக்கான சிறந்த பண்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட தொழில் முனைவோர் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பயிற்சிகளுக்கு விளக்கப்பட காட்சிகள், தொழில் உபகரணங்களை பயன்படுத்துதல், கணினி வகுப்பு, மென் திறன் பயிற்சி மற்றும் செயல்முறை வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

மேலும் தொழிற்பயிற்சிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தொழிலில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இது மட்டுமன்றி பயிற்சியின்போது முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் வெற்றி கதைகள் நேரடியாக எடுத்துக் கூறப்படுகிறது. இளைஞர்களை குழுவாக அழைத்துச் சென்று சந்தை ஆய்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியின் முடிவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

பயிற்சி முடித்த இளைஞர்கள் சுய தொழில் மேற்கொள்ள ஏதுவாக இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சி நிலைய அலுவலர்களால் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்து இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில், வங்கிகள் மூலம் கடன் பெறவும் பயிற்சி நிலைய அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளுக்கான கால அட்டவணை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன் பெற விரும்பினால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், முத்தையா இல்லம், மாடூர் டோல்கேட் அருகில், கள்ளக்குறிச்சி 606 202 மற்றும் 7339414616 என்ற தொலைபேசி எண்ணிலும் அல்லது திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம், நிறைமதி (கிராமம்) நீலமங்கலம் (அஞ்சல்), கள்ளக்குறிச்சி மாவட்டம்-606 213 மற்றும் 9952322947 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

மேலும் விபரம் அறிய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330 மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 8039 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | EPS Pension: 33 ஆண்டு சர்வீஸ், ரூ.509,000 அடிப்படை ஊதியம், மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

மேலும் படிக்க | பணத்தை பன்மடங்காக்கும் PPF... மாதம் ரூ.4,585 முதலீட்டிலும் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News