EPFO Rules: ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் பலன்களை முழுமையாகப் பெற, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கை சரியான முறையில் திறப்பதும் நிர்வகிப்பதும் அவசியம்.

தனியார் துறையில் பணிபுரியும் 7 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) அமைப்பின் முக்கிய நோக்கம், ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான நிதியை சேமிக்க உதவுவதாகும். இந்தத் திட்டத்தின் பலன்களை முழுமையாகப் பெற, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கை சரியான முறையில் திறப்பதும் நிர்வகிப்பதும் அவசியம்.
PF கணக்கை முறையாகத் திறப்பது மற்றும் நிர்வகிப்பது
பல நேரங்களில் முதல் முறையாக ஒரு வேலையில் சேருபவர்களுக்கு PF கணக்கை முறையாகத் திறப்பது மற்றும் நிர்வகிப்பது பற்றிய முழுமையான தகவல்களை அறிந்திருப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த கணக்கை நிர்வகிப்பதில் ஏதேனும் தவறு நடந்தால், பின்னர், பணத்தை கிளெய்ம் செய்தல் உள்ளிட்ட சில விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். அதனால்தான், PF திட்டத்தின் முழுப் பலனைப் பெற, புதிய வேலையில் சேரும்போது EPF தொடர்பான சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
உங்கள் நிறுவனம் EPFO திட்டத்தில் இணைந்துள்ளதா என்பதை அறியவும்
நீங்கள் ஒரு புதிய வேலையில் சேரும்போது, முதலில் உங்கள் நிறுவனம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை மனிதவளத் துறையிலிருந்து தகவலை பெறுங்கள். நிறுவனத்திற்கு EPF சட்டம் பொருந்தினால், உங்கள் அடிப்படை சம்பளம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், நீங்கள் EPF, EDLI (பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு - EDLI) மற்றும் ஓய்வூதியத் திட்டம் (EPS) ஆகியவற்றில் கட்டாயமாக உறுப்பினராக்கப்படுவீர்கள். சம்பளம் ரூ.15,000 என்ற அளவிற்கு மேல் இருந்தால், முதலாளியின் ஒப்புதலுடன் நீங்கள் EPF உறுப்பினராகலாம்.
PF கணக்கை திறக்க படிவம் 11 ஐ நிரப்புவது மிக முக்கியம்
EPF அமைப்பில் ஒரு கணக்கைத் திறக்க, உங்கள் நிறுவனத்தின் மனிதவளத் துறையிடருந்து படிவம் 11 ஐ பெற்றுக் கொண்டு கவனமாக நிரப்ப வேண்டும். இந்தப் படிவம் உங்கள் வேலை மற்றும் EPF உறுப்பினர் தொடர்பான தகவல்களை வழங்குகிறது. இந்தப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் ஆதார் மற்றும் பிற ஆவணங்களுடன் பொருந்த வேண்டும். எழுத்துப் பிழை எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். ஆதார், பான் மற்றும் வங்கி பாஸ்புக்கின் நகலை இணைத்து, ஆதாருடன் இணைக்கப்பட்ட அதே மொபைல் எண்ணைக் கொடுங்கள்.
UAN மற்றும் உறுப்பினர் ஐடியை ஆக்டிவேட் செய்யவும்
படிவம் 11 ஐச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் முதலாளி அல்லது நிறுவனம் உங்கள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் உறுப்பினர் ஐடியை உருவாக்கும். இவை உருவாக்கப்பட்ட பிறகு, HR-இல் இருந்து இந்தத் தகவலைப் பெற்று, EPFO இணையதளமான epfindia.gov.in-க்குச் சென்று உங்கள் UAN எண்ணை ஆக்டிவேட் செய்யவும். ஆக்டிவேட் செய்த பிறகு, EPF பாஸ்புக்கைச் சரிபார்த்தல் மற்றும் கோரிக்கையைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல சேவைகளை ஆன்லைனில் பெறலாம்.
UAN எண்ணை உருவாக்கும் போது ஆவணங்களில் உள்ள தகவல்கள் பொருத்துவது அவசியம்
EPFO கணக்கில், உங்கள் அடையாளம் தான் UAN. ஆதார் தரவுகளுடன் சரிபார்த்த பின்னரே இந்த எண் உருவாக்கப்படுகிறது. எனவே, உங்கள் ஆதாரில் பெயர் மற்றும் பிறந்த தேதி சரியாக உள்ளிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வங்கிக் கணக்கு மற்றும் PAN தகவல்களும் முற்றிலும் சரியாக இருக்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் EPF கணக்கிற்கு பாதுகாப்பான பணத்தை மாற்ற உதவும்.
வேலையில் சேர்ந்த தேதி மற்றும் KYC தகவலை சரிபார்க்கவும்
UAN ஆக்டிவேட் செய்த பிறகு, உங்கள் உறுப்பினர் போர்ட்டலில் உள்நுழைந்து KYC விவரங்கள் மற்றும் சேரும் தேதியைச் சரிபார்க்கவும். ஏதேனும் தவறு காணப்பட்டால், HR துறையினரை தொடர்பு கோண்டு. இதைச் செய்வதன் மூலம், பின்னர் கோரிக்கையின் போது நீங்கள் மிகவும் வசதியாக இருப்பீர்கள்.
நீங்கள் வேலைகளை மாற்றினாலும் UAN எண்ணில் மாற்றம் இருக்காது
எதிர்காலத்தில் நீங்கள் வேலைகளை மாற்றினால், புதிய முதலாளி உங்கள் பழைய UAN எண்ணை பயன்படுத்தி உங்களுக்காக ஒரு புதிய உறுப்பினர் ஐடியை உருவாக்க முடியும். உறுப்பினர் ஐடி மாறலாம், ஆனால் ஒவ்வொரு உறுப்பினருக்கும் யுஏஎன் ஒரு முறை மட்டுமே ஒதுக்கப்படும், அது எப்போதும் அப்படியே தொடரும். உங்கள் யுஏஎன் உடன் இணைக்கப்பட்ட இரண்டு உறுப்பினர் ஐடிகளை ஆன்லைனில் கோருவதன் மூலம் இணைக்கலாம், இது கணக்கை பராமரிப்பதை எளிதாக்கும்.
பிஎஃப் பங்களிப்பை எளிதாகச் சரிபார்க்கலாம்
ஒவ்வொரு மாதமும் உங்கள் ஈபிஎஃப் பாஸ்புக்கில் உள்நுழைந்து உங்கள் பங்களிப்பு உங்கள் பிஎஃப் கணக்கில் சரியாக டெபாசிட் செய்யப்படுகிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்கலாம். பங்களிப்பு டெபாசிட் செய்யப்படும்போது ஈபிஎஃப்ஓவால் எஸ்எம்எஸ் தகவலும் அனுப்பப்படும். ஏதேனும் சிக்கல் இருந்தால், உடனடியாக மனிதவள துறையைத் தொடர்பு கொள்ளவும் அல்லது ஈபிஎஃப் ஐஜிஎம்எஸ் போர்ட்டலில் புகாரைப் பதிவு செய்யவும்.
உமாங் செயலியைப் பதிவிறக்கவும்
பிஎஃப் கணக்கிலன் பாஸ்புக்கைப் பார்ப்பது, பணத்டிய க்ளெய்ம் செய்வது உள்ளிட்ட ஈபிஎஃப் தொடர்பான அனைத்து சேவைகளும் இந்திய அரசின் உமாங் செயலி மூலம் கிடைக்கின்றன. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இந்த செயலியைப் பதிவிறக்குவதன் மூலம் உங்கள் ஈபிஎஃப் கணக்கை சிறப்பாக நிர்வகிக்கலாம்.
புதிய வேலையில் சேர்ந்துள்ள நிலையில், ஈபிஎஃப் தொடர்பான செயல்முறைகளை அறிந்து கொண்டு, அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால், கணக்கிய நிர்வகிப்பத் எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் நிதி எதிர்காலம் வலுவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஒவ்வொரு சிறிய தகவலையும் சரியாக நிரப்புவது, ஆவணங்களை பொருத்துவது மற்றும் கணக்கை அவ்வப்போது கண்காணிப்பது முக்கியம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ