)
Tamil Nadu Government : தமிழ்நாட்டினை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கினை அடைவதில் வேளாண் பொருட்களின் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் ஆகியவை இன்றியமையாததாகும். இதனை ஊக்கப்படுத்த ஒரு சிறப்பு திட்டமாக "வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கும் சிறப்பு திட்டம்" அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் வரையிலான புதிய திட்டங்களுக்கு முதலீட்டு மானியம் 25 சதவீதமும் பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதமும் அதாவது 35 சதவீதமும் என அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இது தவிர 5 சதவீதம் வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தின்மூலம் மகசூல் காலங்களில் வேளாண் விளைபொருட்கள் விலை வீழ்ச்சி அடையும்போது விளைபொருட்களை வீணாகாமல் சேமித்து மதிப்புக்கூட்டி உழவர்கள் நலன் பாதுகாக்கப்படுவதுடன் மிளகாய், முருங்கை, வாழை, மா, மல்லிகை, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களுக்குத் தகுந்த மதிப்புக்கூட்டுதல் அலகுகள் அமைக்க வழிவகுக்கப்படும்.
திட்ட செயலாக்கம்:
இத்திட்டத்தில் ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பங்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் தொழில்முனைவோருக்கு அவர்களின் தொழில் திட்டத்திற்கேற்ப மானிய உதவி
வழங்கப்படும்.
புதிய தொழில்முனைவோருக்கு நிதி ஆதரவு, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதோடு. வங்கியின் மூலம் செயல்படுத்தப்படும் வகையில் இத்திட்ட செயல்பாடு அமையும். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5% ஆக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாக பெறலாம். புதிய மதிப்புக்கூட்டும் அலகுகளை நிறுவுவதற்கு அதிகபட்சமாக ஒரு மையத்திற்கு ரூ.1.5 கோடி தவணை முறையில் (60% மற்றும் 40% ஆகிய இரண்டு தவணைகளில்) வங்கிகளுக்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
இது தவிர வங்கி கடனுக்கான 5% வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். திட்டச் செலவு இயந்திரங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றைஉள்ளடக்கியது. திட்டச் செலவு, நிலம், நடைமுறை மூலதனம் (Working Capital) ஆகியவை நீங்கலானதாகும். ஒன்றிய அரசின் Credit Guarantee fund Trust for Micro and small Enterprises (CGTMSE) திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை கடன் உத்திரவாதம் (Credit Guarantee) வழங்கப்படும். மீதமுள்ள கடன் தொகைக்கு, பயனாளிகள், வங்கிகள் கோரியபடி ஈட்டுறுதி (Collateral Security) வழங்க வேண்டும். இத்திட்டம் ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இத்திட்டம் தொடர்பாக முன்னணி நாளிதழ்களில் விண்ணப்பம் கோரி விளம்பரம் வெளியிடப்படும்.துறையின் வலைத்தளம் மற்றும் பிற மின்னணு தளங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு. சரியான விண்ணப்பதாரரை சென்றடைவதற்கான அனைத்து சாத்தியமான வழிகள் பின்பற்றப்படும்.
செய்யப்படும். விண்ணப்பங்கள் துறையின் வலைத்தளத்திலும் பதிவேற்றம் விண்ணப்பங்கள் முழுமையான திட்ட அறிக்கை மற்றும் வங்கி ஒப்புதல் கடிதம் / வங்கி பரிந்துரை கடிதம் மற்றும் இதர விவரங்களோடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையருக்கு அனுப்பிட வேண்டும்.
அரசு அறிவித்துள்ள வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கும் சிறப்பு திட்டத்தின் மூலம் வேளாண் விளைபொருட்கள் வீணாகாமல் சேமித்து மதிப்புக்கூட்டி, உழவர்கள் நலன் பாதுகாக்கப்படுவதுடன் வேளாண் விளைபொருட்களுக்கு தகுந்த மதிப்பு கூட்டுதல் அலகுகள் அமைக்க வழி வகுக்கிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தனியார் தொழில்முனைவோர்கள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்திட்டம் குறித்த அறிவிப்பினை https://www/agrimark/tn/gov/in என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ