மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிக்கொடை கிடைக்குமா? கிராஜுவிட்டி விதிகளில் முக்கிய மாற்றம்

Gratuity Rules for Central Government Employees: பணிக்கொடை விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட்டுள்ளன. திருத்தப்பட்ட விதிகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் ஓய்வு பெற்றவர்களுக்கு பொருந்தும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 17, 2025, 12:40 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்.
  • பணி ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பணியமர்த்தப்பட்டால் விதிகள் என்ன?
  • முழு தகவல்களை இங்கே காணலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிக்கொடை கிடைக்குமா? கிராஜுவிட்டி விதிகளில் முக்கிய மாற்றம்

Gratuity Rules: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW), மத்திய சிவில் சேவைகள் (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் பணிக்கொடை செலுத்துதல்) திருத்த விதிகள், 2025-ஐ அறிவித்துள்ளது. இதை பற்றிய முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.

திருத்தப்பட்ட விதிகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் ஓய்வு பெற்றவர்களுக்கு பொருந்தும். பணி ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பணியமர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையின் அளவிற்கு வரம்பு இருக்கும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

Retirement

"சூப்பர்ஆவுவேஷன் பணிக்கொடை அல்லது ஓய்வு பெறும் பணிக்கொடை அல்லது கட்டாய ஓய்வூதிய பணிக்கொடையில் ஓய்வு பெற்ற அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் கருணை பணிக்கொடையைப் பெறும் ஒரு அரசு ஊழியர், பின்னர் மீண்டும் பணியமர்த்தப்பட்டால், அவர் தனது மறு பணியமர்த்தப்பட்ட காலத்திற்கு தனி பணிக்கொடையைப் பெற உரிமை இல்லை" என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Autonomous Body or a Public Sector Undertaking

இருப்பினும், ஒரு தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்திலிருந்து பணி மாற்றம் ஏற்பட்டால் மேற்கண்ட விதிக்கு விதிவிலக்கு உள்ளது.

ஒரு தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு அரசுப் பணியில் மீண்டும் நியமிக்கப்படும் பட்சத்தில் கூடுதல் கிராஜுவிட்டி அனுமதிக்கப்படும்.

"ஒரு தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் முன்னர் நியமிக்கப்பட்டு, பின்னர் அந்த அமைப்பு அல்லது நிறுவனத்தின் முறையான அனுமதியுடன் அரசுப் பணியில் நியமிக்கப்பட்ட ஒரு அரசு ஊழியர், அந்த அமைப்பில் அல்லது நிறுவனத்தில் வழங்கப்பட்ட சேவைக்காக தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து அவர் பெற்ற பணிக்கொடையுடன் கூடுதலாக அரசாங்கத்தில் வழங்கப்பட்ட சேவைக்கான பணிக்கொடையைப் பெறத் தகுதியுடையவர்" என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Central Government Employees

இருப்பினும், மேற்கண்ட வழக்கில் மொத்த பணிக்கொடைத் தொகை, ஊழியர் ஒரே ஒரு நிறுவனத்தில் முழுநேரமாகப் பணியாற்றியிருந்தால் ஓய்வு பெறும்போது பெற்றதை விட அதிகமாக இருக்கக்கூடாது.

"மேலும், தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் வழங்கப்படும் சேவை மற்றும் அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் சேவைக்கான மொத்த பணிக்கொடைத் தொகை, தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் அரசு ஊழியர் வழங்கும் முழு சேவையையும், அரசாங்கத்தையும், அரசாங்கத்திலிருந்து ஓய்வு பெறும்போது கிடைக்கும் ஊதியத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அனுமதிக்கப்படக்கூடிய தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது" என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Re-Appointment of Employees: மேற்கண்ட விதிகளுக்கு பின்வரும் இரண்டு விளக்கங்களும் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது

- ஒரு தன்னாட்சி அமைப்பிலிருந்து அரசு சேவைக்கு மாறுவதற்கு அனுமதி அவசியம்

"ஒரு அரசு ஊழியர் தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தின் முன் அனுமதியுடன் அரசாங்கத்தில் சேவை அல்லது பதவிக்கு விண்ணப்பித்திருந்தால், அவர் அரசாங்க பணியில் முறையான அனுமதியுடன் நியமிக்கப்பட்டதாகக் கருதப்படுவார். மேலும் தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தின் உத்தரவு, ஊழியர் தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தின் முறையான அனுமதியுடன் அரசாங்கத்தில் பதவியில் சேர ராஜினாமா செய்கிறார் என்பதை தெளிவாகக் குறிக்கும்." என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

- மறு நியமனம் செய்யப்பட்டால் பணிக்கொடையை யார் செலுத்துவார்கள்?

ஒரு தன்னாட்சி அமைப்பிலிருந்து அரசுப் பணிக்கு மீண்டும் நியமிக்கப்படும் பட்சத்தில், முந்தைய பணிக்கொடையை செலுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்காது.

"ஒரு தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் வழங்கப்பட்ட சேவைக்காக பணிக்கொடை ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்ட தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தால் அது செலுத்தப்படும். மேலும் அரசாங்கத்தின் கீழ் பணியில் சேருவதற்கு முன்பு அந்த தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் அரசு ஊழியர் வழங்கிய சேவைக்காக பணிக்கொடைக்கு அரசாங்கத்தின் தரப்பில் எந்தப் பொறுப்பும் இருக்காது" என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | EPS Pension: ரூ.50,000 அடிப்படை ஊதியம்... 18, 25, 35 ஆண்டு சர்வீசில் மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

மேலும் படிக்க | Gold loan : தங்க கடன் குறித்து அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News