GST Council Meeting Today: இரண்டு நாட்களுக்கான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில் சாமானிய மக்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

GST Council Meeting Latest News: இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்குகிறது. இந்த முறை நடைபெறவுள்ள இரண்டு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாடு முழுதும், பொதுமக்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் என பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில், இந்த முறை நடக்கவுள்ள கூட்டம் ஒரு சாதாரண செயல்முறை மட்டுமல்ல, இது பொதுமக்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையாகவும் வந்துள்ளது.
இன்று தொடங்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல பெரிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. இது சாமானியர்களின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மளிகைப் பொருட்கள் முதல் உங்கள் நீண்ட நாள் கனவாக இருக்கும் கார் வரை, பல பொருட்களின் விலைகள் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் பண்டிகை காலத்திற்கு முன்பே ஷாப்பிங் செய்யத் தூண்டும் வகையில் பல அறிவிப்புகள் வரக்கூடும் என நம்பப்படுகின்றது.
- இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மிகப் பெரிய செய்தியாக எதிர்பார்க்கப்படுவது உணவுப் பொருட்கள் பற்றியது. நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் இதுபோன்ற பல பொருட்களின் மீதான வரியைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
- நெய், வெண்ணெய், சீஸ், ரொட்டி, ஸ்னாக்ஸ் வகைகள் மற்றும் காளான்கள் போன்ற 150க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான வரியைக் குறைப்பது குறித்து பேச்சு உள்ளது.
- இந்த முடிவு நிறைவேற்றப்பட்டால், நெய் மற்றும் பிற பால் பொருட்கள் அதிக பலனைப் பெறும். தற்போது லிட்டருக்கு ரூ.700 விலையில் விற்கப்படும் நெய்யின் விலை மலிவானால், அதன் நுகர்வு அதிகரிக்கும். மேலும் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெயை விட மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேசி நெய்யை அதிகம் பயன்படுத்தத் தொடங்குவார்கள்.
- இந்த நடவடிக்கை உள்நாட்டு பால் பண்ணைத் தொழிலுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இது தவிர, சாப்பிடத் தயாராக உள்ள உணவுகள், இனிப்புகள், பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், சாக்லேட்டுகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவு வகைகளின் மீதான ஜிஎஸ்டியை 5% ஆகக் குறைக்கும் திட்டம் உள்ளது.
இந்த ஜிஎஸ்டி கூட்டம் உணவுப் பொருட்களுக்கு மட்டுமல்லாம, பிற முக்கிய அம்சங்களிலும் தாக்கத்தை கொண்டிருக்கும்.
கார்கள் மற்றும் பைக்குகளுக்கு நிவாரணம்
- பயணிகள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீதான வரியை 28% இலிருந்து 18% ஆகக் குறைப்பதை ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருகிறது.
- இது செயல்படுத்தப்பட்டால், தீபாவளிக்கு முன்பு கார்கள் மற்றும் பைக்குகளை வாங்குவதை இது எளிதாக்கும்.
- இந்த முடிவு நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.
குழந்தைகளின் கல்வி மலிவாகும்
- பெற்றோர்களுக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் நிவாரணம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மாணவர்களின் வகுப்புகளுக்கு தேவையான மேப்கள், குளோப்கள், பென்சில் ஷார்ப்னர்கள் மற்றும் நோட்டுபுத்தகங்கள் போன்ற பள்ளி தொடர்பான பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 12% இலிருந்து 0% ஆகக் குறைக்கும் திட்டம் உள்ளது.
மின்சார கார்களுக்கான வரி அதிகரிக்கலாம்
- பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கான வரி குறைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும், விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர மின்சார கார்களுக்கான வரியை அதிகரிக்கவும் திட்டம் உள்ளது.
- மின்-கார்களுக்கான ஜிஎஸ்டியை ₹20 லட்சத்திலிருந்து ₹40 லட்சமாக உயர்த்துவது குறித்து பேச்சு எழுந்துள்ளது.
- மேலும் ₹40 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள கார்களுக்கு 28% வரி விதிக்கப்படலாம்.
- இது டெஸ்லா, பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் போன்ற நிறுவனங்களை நேரடியாக பாதிக்கும்.
- அதே நேரத்தில் டாடா மற்றும் மஹிந்திரா போன்ற இந்திய நிறுவனங்களின் மலிவு விலை கார்கள் மீதான தாக்கம் குறைவாக இருக்கும்.
- ஜிஎஸ்டியின் முழு கட்டமைப்பையும் மாற்றுவது குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்றும், இது இந்த கூட்டத்தின் மிகவும் புரட்சிகரமான முடிவாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
- தற்போதைய 4 வரி அடுக்குகளை வெறும் 2 அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
- இது தவிர, எஸ்யூவிகள் மற்றும் புகையிலை போன்ற சில ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% சிறப்பு விகிதம் விதிக்கப்படலாம்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: சுருக்கமாக....
- இன்று தொடங்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
- இந்த புதிய ஜிஎஸ்டி 2.0 அமைப்பை மிகவும் வெளிப்படையானதாக மாற்றும் என்றும், சிறு வணிகர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் வணிகம் செய்வதை எளிதாக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
- இந்த அனைத்து திட்டங்களுக்கும் கவுன்சிலிடமிருந்து பச்சை சமிக்ஞை கிடைத்தால், செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் புதிய விகிதங்கள் செயல்படுத்தப்படும்.
- இந்தக் கூட்டத்தின் முடிவு வரி விகிதங்களை தீர்மானிப்பது மட்டுமல்லாமல், வரும் நாட்களில் சாமானியர்கள் செலவு செய்யும் முறையையும் மாற்றும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ