EPS Pension: தனியார் மற்றும் அரசுத் துறை ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்குவதே ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நோக்கமாகும். வருங்கால வைப்பு நிதி, காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற சலுகைகள் EPFO இன் கீழ் கிடைக்கின்றன. இது ஒரு அரசு அமைப்பு, ஆனால் அரசாங்கம் அதற்கு நிதி வழங்குவதில்லை. இபிஎஃப்ஓ ஃபண்ட், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம் உருவாகிறது. ஊழியர்கள் தங்கள் மாத சம்பளத்தில் 12% ஐ அதில் டெபாசிட் செய்ய வேண்டும். ஊழியர்களுடன் சேர்ந்து, அதே தொகையை நிறுவனமும் EPF-இல் டெபாசிட் செய்கிறது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்கள்
EPFO -வின் இந்த நிதியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய வசதியைப் பெறுகிறார்கள். ஒருவர் விரும்பினால், ஓய்வு பெறுவதற்கு முன்பு அல்லது ஏதேனும் அவசர சூழ்நிலை ஏற்பட்டால், தனது முழு நிதியையும் ஒரே நேரத்தில் திரும்பப் பெறலாம். EPFO ஒன்றல்ல, 7 வகையான ஓய்வூதியங்களை வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பெரும்பாலான மக்கள் ஓய்வு பெற்ற பிறகுதான் EPFO-வில் பணம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். EPFO 7 வகையான ஓய்வூதிய வசதிகளை வழங்குவது பலருக்குத் தெரியாது. EPFO ஊழியர்களுக்கு வழங்கும் 7 வகையான ஓய்வூதியத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Superannuation Pension: சூப்பரானுவேஷன்
இந்த ஓய்வூதிய வகையின் கீழ், ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் EPFO-வில் முதலீடு செய்து 58 வயதிற்குப் பிறகு ஓய்வு பெற்றால், அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இருப்பினும், பெறப்படும் ஓய்வூதியத் தொகை, முற்றிலும் நிதியில் உள்ள பணத்தின் அளவை சார்ந்துள்ளது.
Early Pension: எர்ளி பென்ஷன்
58 வயதிற்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்கள் EPFO-விலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தங்கள் ஓய்வூதியத்தில் 4% அதிகரிப்பைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில், நீங்கள் 58 வயதுக்கு முன் ஓய்வு பெற்றாலும் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும், ஆனால் அது ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் குறைக்கப்படும். EPFO வின் முன்கூட்டிய ஓய்வூதியத் திட்டத்தில், ஒருவர் 50 வயதிற்குப் பிறகு பணத்தைப் பெறலாம். ஆனால், அப்படி எடுக்கும் போது, ஓய்வூதியம் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.
Widow and Children Pension: விதவை அல்லது குழந்தைகள் ஓய்வூதியம்
ஊழியர் இறந்துவிட்டால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் EPFO-விலிருந்து ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். ஊழியர் இறந்தால், ஓய்வூதிய பங்களிப்புக்கான 10 ஆண்டு விதியும் பொருந்தாது. ஒருவர் ஒரு ஆண்டு மட்டுமே EPFO-வில் முதலீடு செய்து பின் இறந்துவிட்டாலும், இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகள் ஓய்வூதியம் பெற உரிமை பெறுவார்கள். இருப்பினும், குழந்தைகள் 25 வயது வரை மட்டுமே EPFO ஓய்வூதியத்தைப் பெற உரிமை பெறுவார்கள். 25 வயதிற்குப் பிறகு அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
Dependent Parents Pension: சார்ந்திருக்கும் பெற்றோர் ஓய்வூதியம்
இது நாமினி ஓய்வூதியம் என்றும் அழைக்கப்படுகிறது. ஊழியர் இறந்துவிட்டால், அவருக்கு மனைவி அல்லது குழந்தை இல்லை என்றால், அவரது நாமினிக்கு ஓய்வூதிய வசதி கிடைக்கும். ஊழியர் தனது பெற்றோரை நாமினியாக நியமித்திருந்தால், அவர்களுக்கு ஓய்வூதிய வசதி கிடைக்கும். தந்தை இறந்துவிட்டால், பணியாளரின் தாய் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இருப்பினும், இதற்கு படிவம் 10D நிரப்பப்பட வேண்டும்.
Orphan Pension: அனாதை ஓய்வூதியம்
இபிஎஃப் சந்தாதாரர்னின் வாழ்க்கைத் துணையும் அவருடன் சேர்ந்து இறந்துவிட்டால், அத்தகைய சூழ்நிலையில் அவர்களின் குழந்தைகளுக்கு 25 வயது வரை ஓய்வூதிய வசதி கிடைக்கும். 25 வயதானவுடன் குழந்தை சொந்தமாக சம்பாதித்து தனது செலவுகளைச் சமாளிக்க முடியும் என்று கருதப்படுகிறது.
Disability Pension: மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்
இந்த EPFO திட்டத்தில், ஒரு ஊழியர் விபத்தில் ஊனமுற்று, வேலை செய்ய முடியாத நிலையில் இருந்தால், அவர் ஓய்வூதியம் பெற உரிமை பெறுகிறார். ஊனமுற்றோர் ஓய்வூதியத்திற்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, சமூகப் பாதுகாப்புத் திட்டமாக, ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தை (Employees Pension Scheme) நிர்வகிக்கின்றது. இத்திட்டத்தின் கீழ், தனியார் துறையில் உள்ள தொழிலாளர்கள் 58 வயதை எட்டியவுடன் இபிஎஸ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாகிறார்கள். இபிஎஸ் -இன் கீழ் கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் பற்றி மேலே பார்த்தோம். இந்த வகையில் EPFO தனியார் துறை ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பின் நிலையான பொருளாதார ஆதாரத்தை அளிக்கின்றது.
மேலும் படிக்க | EPFO செய்துள்ள 5 முக்கிய மாற்றங்கள்: PF உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ