)
EPFO New rule: பிஎப் ஊழியர் இறந்துவிட்டால், அவரின் பொது வருங்கால வைப்பு நிதி சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு செல்லும். மனைவி மற்றும் குழந்தைகள் கிளைம் செய்யலாம். இதில் வந்திருக்கக்கூடிய அப்டேட் என்னவென்றால், ஒருவேளை இறந்தவருக்கு சிறுவயது குழந்தை இருக்கிறது என்றால், இவ்வளவு நாட்கள் பாதுகாவலரின் சான்றிதழுடன் அந்த தொகை குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டது. இப்போது அந்த சான்றிதழ் தேவை இல்லை என்ற இபிஎப்ஓ (EPFO) அறிவித்துள்ளது.
அதாவது, இப்போது வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையின்படி, இறந்த உறுப்பினரின் சிறு வயது குழந்தைகளின் வங்கிக் கணக்கில் நிதி நேரடியாகச் செலுத்தப்படும்போது, இனி பாதுகாவலர் சான்றிதழ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), ஆகஸ்ட் 13 அன்று இறந்த உறுப்பினர்களின் குடும்பங்களுக்கான நிதிப் பரிமாற்ற செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தியுள்ளது. ஈபிஎஃப்ஓ-வின் அந்த புதிய சுற்றறிக்கையின்படி, இனிமேல் நிதி நேரடியாக இறந்தவரின் மைனர் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்போது, பாதுகாவலர் சான்றிதழ் (Guardianship Certificate) பெறுவது கட்டாயம் இல்லை.
முன்பு, ஒரு குடும்ப உறுப்பினர் இறக்கும்போது, அவரது வருங்கால வைப்பு நிதி (PF), ஓய்வூதியம் (pension) மற்றும் காப்பீட்டுப் பலன்கள் போன்றவற்றை பெறுவதற்கு, நீதிமன்றத்தில் இருந்து பாதுகாவலர் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக இருந்தது. இந்த சான்றிதழைப் பெற பல மாதங்கள் ஆகும் என்பதால், நிதி உதவி தேவைப்படும் நேரத்தில் குடும்பங்களுக்குக் கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த சிரமத்தைக் குறைக்கும் வகையில், ஈபிஎஃப்ஓ தனது புதிய சுற்றறிக்கையில், "இந்தச் செயல்முறையை எளிதாக்குவதற்கும், மைனர் குழந்தைகளுக்கு விரைவாக நிதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இனிமேல் நிதி மைனர் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்போது, தனி பாதுகாவலர் சான்றிதழ் கட்டாயப்படுத்தப்படாது," என்று கூறியுள்ளது. இந்த புதிய விதி, நிதிப் பரிமாற்றத்தை விரைவுபடுத்துவதோடு, சிறு வயது குழந்தைகள் தேவையற்ற சட்டத் தடைகளைச் சந்திக்காமல் தங்களுக்கு உரிமையான பலன்களைப் பெறுவதை உறுதி செய்கிறது.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனி வங்கிக் கணக்கு
ஈபிஎஃப்ஓ-வின் வழிகாட்டுதலின்படி, இனி வருங்கால வைப்பு நிதி மற்றும் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு, ஒவ்வொரு மைனர் குழந்தைக்கும் தனித்தனியாக வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட வேண்டும். அதன்மூலம் இந்த நிதி நேரடியாக அந்தந்த குழந்தைகளின் கணக்கில் செலுத்தப்படும்.
EPF படிவம் 20: விண்ணப்பிப்பது யார்?
EPF படிவம் 20, இறந்த ஈபிஎஃப் உறுப்பினரின் வருங்கால வைப்பு நிதித் தொகையை கோருவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த படிவத்தை உறுப்பினர் நியமனதாரர் (nominee), சட்டபூர்வ வாரிசு (legal heir) அல்லது இறந்த உறுப்பினரின் பாதுகாவலர் பயன்படுத்தலாம்.
ஈபிஎஃப்ஓ இணையதளத்தின்படி, இந்த படிவத்தை யார் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய தகவல்கள்:
* உறுப்பினர் ஒரு மைனராக இருந்தால்: அவரது பாதுகாவலர்.
உறுப்பினர் இறந்தால்: சரியான நியமனதாரர் இருந்தால், நியமனதாரர். நியமனதாரர் மைனராக இருந்தால், அவரது பாதுகாவலர்.
நியமனதாரர் இல்லையென்றால்: குடும்ப உறுப்பினர்கள். இதற்காக, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் யார் என்பதை கடைசியாக அவர் பணிபுரிந்த நிறுவனம், வட்டாட்சியர், அல்லது மாஜிஸ்திரேட் ஆகியோர் சான்றளித்து ஒரு பட்டியல் அளிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் யாராவது மைனர் என்றால், அவரது பாதுகாவலர் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட இரண்டு நிலைகளும் பொருந்தவில்லை என்றால்: இறந்தவரின் சட்டபூர்வ வாரிசுகள். இதற்காக, நீதிமன்றம் வழங்கிய சட்ட வாரிசு சான்றிதழ் கட்டாயம். இந்த புதிய விதி, பல குடும்பங்களுக்குப் பெரிய நிவாரணத்தை அளிக்கும். இனிமேல், இறந்தவரின் பிஎப் நிதிப்பரிமாற்றத்திற்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ