PPF Maturity Calculator: நம் அனைவருக்கும் பணம் சம்பாதிக்கும் ஆசை உள்ளது. வங்கிக்கணக்கில் பெரிய ஒரு தொகை இருந்தால், மனதிற்கு நிதி ரீதியாக ஒரு பாதுகாப்பு கிடைக்கிறது. சில நேர்த்தியான வழிகளையும், சாமர்த்தியமான திட்டங்களையும் பின்பற்றினால், ஒரு குறிப்பிட்ட கால அளவில் நடுத்தர வர்க்க மக்களும் கோடீஸ்வரர்களாக மாற முடியும்.
Public Provident Fund
பெரும்பாலான மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய அதிக லாபம் ஈட்டக்கூடிய ஒரு திட்டத்தைத் தேடுகிறார்கள். ஆனால், முதலீட்டின் மூலம் அதிகம் சம்பாதிப்பதோடு, வருமான வரியின் வரம்பிலிருந்தும் விலகி இருக்க விரும்பினால், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அதற்கு ஏற்ற திட்டமாக இருக்கும். இந்தத் திட்டம் முதலீட்டில் நல்ல வருமானத்தையும், வரி சேமிப்பு விருப்பத்தையும் வழங்குகிறது. நீண்ட கால முதலீட்டின் மூலம் நல்ல வருமானம் ஈட்ட விரும்பும் நபர்கள் இந்தத் திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் PPF என்ற பெயரில் மிகவும் பிரபலமாக உள்ளது.
PPF ஏன் சிறந்த விருப்பமாகக் கருதப்படுகிறது?
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மிகவும் பிரபலமானது. ஏனெனில் அதில் டெபாசிட் செய்யப்பட்ட பணம், பெறப்பட்ட வட்டி மற்றும் முதிர்வின் போது பெறப்பட்ட தொகை என எதற்கும் வரி விதிக்கப்படாது. அதாவது இது EEE பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. EEE என்றால் விலக்கு என்று பொருள். ஒவ்வொரு ஆண்டும் வைப்புத்தொகைகளுக்கு வரி விலக்கு கோர ஒரு வழி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெறப்படும் வட்டிக்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. கணக்கு முதிர்ச்சியடைந்தவுடன், முழுத் தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
PPF-ல் யார் முதலீடு செய்யலாம்?
நாட்டின் குடிமக்கள் அனைவரும் இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதை தபால் அலுவலகம் அல்லது எந்த வங்கிகளில் வேண்டுமானாலும் திறக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். வட்டி ஆண்டுதோறும் கணக்கிடப்படுகிறது. இருப்பினும், வட்டி காலாண்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது, PPF-க்கு 7.1% வட்டி பெறப்படுகிறது. இதில் முதிர்வு காலம் 15 ஆண்டுகள்.
இந்தத் திட்டத்தில் கூட்டுக் கணக்கைத் திறக்க எந்த வசதியும் இல்லை. இருப்பினும், உறுப்பினர்கள் இதில் ஒரு நாமினியை நியமிக்கலாம். HUF-ன் பெயரில் PPF கணக்கைத் திறக்கவும் வசதி இல்லை. குழந்தைகளுக்கு பிபிஎஃப் கணக்கை (PPF Account) திறக்க வேண்டுமானால், பாதுகாவலரின் பெயர் PPF கணக்கில் சேர்க்கப்படும். ஆனால், அது 18 வயது வரை மட்டுமே செல்லுபடியாகும்.
PPF மூலம் கோடீஸ்வரராக முடியுமா?
PPF என்பது கோடீஸ்வரராக மாறுவதற்கு எளிதான ஒரு திட்டமாகும். இதற்கு வழக்கமான முதலீடு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். உங்களுக்கு 25 வயது ஆகி, PPF தொடங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நிதியாண்டின் தொடக்கத்தில் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் கணக்கில் ரூ.1,50,000 (அதிகபட்ச வரம்பு) டெபாசிட் செய்தால், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில், வட்டியாக மட்டும் ரூ.10,650 டெபாசிட் செய்யப்படும். அதாவது, அடுத்த நிதியாண்டின் முதல் நாளில், உங்கள் இருப்பு ரூ.1,60,650 ஆக இருக்கும்.
அடுத்த ஆண்டும் இதையே செய்வதன் மூலம், கணக்கு இருப்பு ரூ.3,10,650 ஆகும். ஏனெனில், ரூ.1,50,000 மீண்டும் டெபாசிட் செய்யப்படும், பின்னர் முழுத் தொகைக்கும் வட்டி கிடைக்கும். இந்த முறை வட்டி தொகை ரூ.22,056 ஆக இருக்கும். ஏனெனில், கூட்டு வட்டிக்கான சூத்திரம் இங்கே வேலை செய்யும். இந்த வழியில் 15 வருட PPF முதிர்வு நிறைவடைந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அதன் பின்னர் உங்கள் கணக்கில் ரூ.40,68,209 இருக்கும். இதில், மொத்த வைப்புத் தொகை ரூ.22,50,000 ஆக இருக்கும். வட்டியிலிருந்து மட்டும் ரூ.18,18,209 கிடைக்கும்.
கோடீஸ்வரராக விரும்பினால், முதிர்ச்சியடைந்த பிறகும் முதலீடு செய்யுங்கள்
PPF 25 வயதில் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு, 40 வயதில், உங்களிடம் ரூ.40 லட்சத்திற்கு மேல் இருக்கும். ஆனால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால், பணம் வேகமாக வளரும். PPF இல் முதிர்ச்சியடைந்த பிறகு, கணக்கை 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம். முதலீட்டாளர் PPF கணக்கை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 45 வயதிற்குள், மொத்த தொகை ரூ.66,58,288 ஆக வளரும். இதில், முதலீடு ரூ.30,00,000 ஆகவும், வட்டி வருமானம் ரூ.36,58,288 ஆகவும் இருக்கும்.
எந்த வயதில் கோடீஸ்வரராக மாறலாம்?
கோடீஸ்வரராகும் இலக்கு எந்த வயதில் அடையப்படும்? இதற்கு PPF கணக்கை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு அதாவது 25 ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும். மீண்டும், ஆண்டுதோறும் ரூ.1,50,000 முதலீடு செய்ய வேண்டும். 50 வயதில், மொத்தம் ரூ.1,03,08,014 பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். இதில் முதலீடு ரூ.37,50,000 ஆக இருக்கும், வட்டி ரூ.65,58,015 ஐ எட்டும்.
வட்டி வருவாய் 1 கோடியைத் தாண்டும்
பிபிஎஃப்-இன் இரண்டாவது அம்சத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் 5 ஆண்டு நீட்டிப்பை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். இப்போது மீண்டும் ஒருமுறை கணக்கு 5 ஆண்டுகளுக்கு கணக்கு நீட்டிக்கப்பட்டால், 55 வயதில் உங்களுக்கு ரூ.1 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்து 910 கிடைக்கும். இதில், முதலீடு ரூ.45,00,000 மட்டுமே, ஆனால் வட்டி வருவாய் ரூ.1 கோடிக்கு மேல் செல்லும். மொத்த வருவாய் ரூ.1,09,50,911 ஆக இருக்கும்.
மேலும் படிக்க | SIP Mutual Fund: ஆயிரங்களை லட்சங்களாக்குவது எளிது... பெண்களே நோட் பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









