)
PM Kisan scheme 2025 Latest Update : பிஎம் கிசான் தொகை 20வது தவணைத் தொகை விரைவில் மத்திய அரசு கொடுக்க உள்ளது. அதற்கு முன்பாக நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு சில அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் வேளாண் அடுக்க எண் கட்டாயம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எண் பெறாத விவசாயிகளுக்கு இம்முறை பிஎம் கிசான் தவணைத் தொகை கிடைக்காது. வேளாண் அடுக்க எண் என்பது ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய அரசால் கொடுக்கப்படக்கூடிய தனித்துவமான எண் ஆகும்.
மத்திய அரசின் அறிவுறுத்தல்
விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பிரதமரின் பிஎம்கிசான் கௌரவ நிதி உதவித் தொகை, மாநிலத்தில் சொட்டுநீர் பாசனக்கருவிகள், வேளாண் உபகரணங்கள் . வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்களிப்புடன் விவசாயிகளுக்கு வழங்கி ஊக்குவித்து வருகிறது. ஒன்றிய அரசு வழங்கும் பிஎம்கிசான் கௌரவ நிதி உதவித் தொகை விவசாயி அல்லாதவருக்கு சென்றுவிடக் கூடாது என இணைய வழியில் ஒன்றிய அரசு பிஎம்கிசான் கௌரவ நிதி உதவித் தொகை விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
வேளாண் அடுக்க எண் பெறுவது எப்படி?
நில உடைமைகளை பதிவேற்றம் செய்யாத மற்றும் தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பிஎம்கிசான் திட்டத்தில் அடுத்த தவணை நிதி நிறுத்தப்படும். இதனை தவிர்க்க வேண்டும் என்றால், அருகில் உள்ள வேளாண்மைத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் பட்டாக்களை பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா அல்லது கூட்டு பட்டா, ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன், அரசு கள அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு செய்யும்போது வேளாண் அடுக்க எண் கொடுக்கப்படும். இதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி, அதாவது நாளையுடன் முடிவடைகிறது. காலவகாசம் இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்
வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் அதன் தொடர்புடைய அனைத்து துறைகளில் செயல்படுத்தப்படும் அரசு மானிய திட்டங்கள் அனைத்தும் இனிவருங்காலங்களில் விவசாயிகள் தங்கள் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்றால் மட்டுமே பயன்பெற முடியும். எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை - உழவர்நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி உடனடியாக இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ