Indian Railways Tickets Discount: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபரா? அப்படியானால் இந்திய ரயில்வே பயணிகளுக்கு தற்போது டிக்கெட் கட்டணத்தில் மெகா தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Railway Ticket Concession: இந்தியாவின் உயிர் நாடியாக இந்தியன் ரயில்வே பார்க்கப்படுகின்றன. ஏழை மக்கள் முட்கள் பணக்காரர்கள் வரை அனைவரும் வசதியாக பயணிக்க ஏற்ற வகையாய் ரயில் பயணங்கள் உள்ளன. பேருந்து கட்டணங்களை ஒப்பிடும் போது ரயில் கட்டணங்கள் மிக குறைவாக உள்ளன. நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ரயில்வேயின் குறைந்த கட்டணத்திற்கு அரசு பயணிகள் கட்டணத்தில் வழங்கும் மானியம் தான் பெரிய காரணம்.
அதுமட்டுமின்றி இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இது ஒரு மிக மலிவான போக்குவரத்து வழிதடமாகும். ரயில்வே துறை காலம் காலமாக பயணிகளுக்கு பல வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக இந்திய ரயில்வே சில சிறப்பு வகை பயணிகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. எனினும் இது தொடர்பான தகவல் வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். இந்த சலுகையை யார் பெற முடியும், இதற்கு என்ன நிபந்தனைகள் உள்ளது என்று பார்க்கலாம்.
இந்த பயணிகளுக்கு கட்டண தள்ளுபடி கிடைக்கும்:
இந்திய ரயில்வே வழங்கும் இந்த தள்ளுபடி பொது வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் 3AC டிக்கெட் கட்டணங்களில் வழங்கப்படும். அதுவும் 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மற்றவர்களின் உதவியின்றி பயணம் செய்ய நபர்கள் அதாவது மனரீதியாக பலவீனமானவர்கள், பார்வையற்றவர்கள் அல்லது ஊனமுற்றோர் ஆகியோருக்கு இந்த தள்ளுபடி பொருந்தும். அதுமட்டுமின்றி அத்தகைய நபர்களுடன் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த சலுகை தரப்படும். இந்த பயணிகளுக்கு சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில் 3ஏசி மற்றும் ஏசி சேர் காரில் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில், 1AC, 2AC-களில் பயணிப்பதற்கு 50 சதவீத தள்ளுபடி கொடுக்கபடும்.
காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கும் ரயில் கட்டணத்தில் தள்ளுபடி:
ரயில்வே விதிகளின்படி, முழுமையாக கேட்கவோ பேசவோ முடியாத நபர்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் போது 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதுமட்டுமின்றி அத்தகைய பயணியை கவனித்துக் கொள்ள, நபருக்கும் அதே தள்ளுபடி வழங்கப்படும். இவர்களைத் தவிர, புற்றுநோய் நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், காசநோய் நோயாளிகள், இதய நோயாளிகள், ஹீமோபிலியா நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், ஆஸ்டமி நோயாளிகளுக்கும் ரயில் பயணத்தில் 50 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
மாணவர்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படும்:
ரயில்வே விதிமுறைகளின்படி, மாணவர்கள் ரயில் பயணத்தில் தள்ளுபடியின் பலனை பெறலாம். அதனபசி பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகம் குழந்தைகளை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல விரும்பினால், அவர்களுக்கு 50 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
கட்டணத்தில் தள்ளுபடி பெற என்ன செய்ய வேண்டும்?
நீங்களும் இந்த தள்ளுபடியைப் பெற விரும்பினால், முதலில் நீங்கள் அதற்குத் தகுதியானவரா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். இதற்கு, இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.indianrail.gov.in/ ஐப் பார்வையிடலாம். அங்கு முழு விவரத்தையும் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ